NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்தை நீட்டிக்க, பேச்சுவார்த்தைகள் தீவிரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்தை நீட்டிக்க, பேச்சுவார்த்தைகள் தீவிரம்
    கடந்த ஐந்து நாட்கள் போர் நிறுத்தத்தில், 750 லாரிகள் நிவாரண பொருட்களுடன் காசாவிற்குள் சென்றுள்ளன.

    இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்தை நீட்டிக்க, பேச்சுவார்த்தைகள் தீவிரம்

    எழுதியவர் Srinath r
    Nov 29, 2023
    05:59 pm

    செய்தி முன்னோட்டம்

    இஸ்ரேல்-ஹமாசிடையே போர் நிறுத்தத்தை நீட்டிக்க, இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யும் கத்தார் முன்னிலையில் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பின் திடீர் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது.

    கிட்டத்தட்ட ஏழு வாரங்களாக தொடர்ந்து வந்த போரில், கடந்த வெள்ளிக்கிழமை இருதரப்பினரிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, நான்கு நாட்கள் போர் நிறுத்தம் தொடங்கியது.

    இதில், 50 இஸ்ரேலி பணயக் கைதிகளும், அதற்கு பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள 150 பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

    அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அழுத்தத்திற்கு பின், போர் நிறுத்தம் மீண்டும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்பட்டது. நீட்டிக்கப்பட்ட போர் நிறுத்தம் இன்று முடிவடைகிறது.

    2nd card

    போர் நிறுத்தத்தில் முன் வைக்கப்படும் நிபந்தனைகள் என்ன?

    ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில், ஒவ்வொரு 10 பணயக் கைதிகள் விடுவிக்கப்படும் போதும், ஒரு நாள் போர் நிறுத்தம் அதிகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேல் தற்போது பணயக் கைதிகளாக உள்ள ராணுவ வீரர்களையும் விடுவிக்க கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஹமாஸ் அக்டோபர் 7 ஆம் தேதி, 240க்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாக பிடித்து சென்ற நிலையில், தற்போது வரை, 66 இஸ்ரேலிகள், 20 வெளிநாட்டவர்கள் என 86 நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கு பதிலாக, இஸ்ரேல் சிறைகளில் இருந்த 180 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    3rd card

    காசாவில் இன்னும் எத்தனை பணயக் கைதிகள் உள்ளனர்?

    காசா பகுதியில் இன்னமும் 126 ஆண்கள் மற்றும் 35 பெண்கள் என, 161 நபர்கள் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    அவர்களில் 10 பேர் 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், 4 பேர் 18 அல்லது 19 வயதுடையவர்கள், 4 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் பத்து மாத கைக்குழந்தையும் அடங்கும்.

    மேலும், 161 பணயக் கைதிகளில், 146 இஸ்ரேலிகள் என்றும், 15 நபர்கள் அமெரிக்கர்கள் உட்பட்ட பிற நாட்டவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அக்டோபர் 7ஆம் தேதி பிடித்துச் செல்லப்பட்ட அனைத்து பணயக் கைதிகளும், ஹமாஸ் வசம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    4th card

    இஸ்ரேல்- ஹமாஸ் போரில் இதுவரை ஏற்பட்ட பாதிப்புகள் என்ன?

    இரண்டு மாதத்தை நெருங்கி வரும் இஸ்ரேல்- ஹமாஸ் போரில், தற்போது வரை 15,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக, ஹமாஸ் நிர்வகிக்கும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதில் குறைந்தது 40% பேர் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்ரேல் தாக்குதலில் 36,000 பாலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

    இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 நபர்கள் கொல்லப்பட்டனர். 6,900 ஹலோஇஸ்ரேலிகள் காய்மடைந்தனர்.

    ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில், போர் தொடங்கியதற்கு பின்னர் வன்முறை வெடித்தது. அக்டோபர் 7 முதல் இஸ்ரேலியப் படைகள் குறைந்தபட்சம் 239 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளதாக பாலஸ்தீனிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல்
    ஹமாஸ்
    கத்தார்

    சமீபத்திய

    பெண்களிடையே அதிகரித்து வரும் தைராய்டு கோளாறுகள்; அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் தைராய்டு
    ஜூன் 2025இல் இந்தியாவில் முன்பதிவைத் தொடங்குகிறது வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் கார் நிறுவனம் மின்சார வாகனம்
    மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் ஒன்றாக பங்கேற்ற தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ்
    இந்தியாவில் மே மாத விற்பனையில் 22 சதவீதம் வளர்ச்சி கண்ட டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் டொயோட்டா

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    காசா மக்களுக்கு "உண்மையான எதிர்காலம்" வழங்குவதாக இஸ்ரேல் பிரதமர் உறுதி காசா
    இஸ்ரேல்-ஹமாஸ் போர் எதிரொலி.. ஒரு லட்சம் இந்தியர்களை பணியமர்த்தத் திட்டமிடும் இஸ்ரேல் இந்தியா
    காசாவை நிரந்தரமாக ஆக்கிரமிப்பதற்கு எதிராக இஸ்ரேலை எச்சரித்த அமெரிக்கா இஸ்ரேல்
    காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்-ஆயிரக்கணக்கான மக்கள் தெற்கு நோக்கி வெளியேறினர் இஸ்ரேல்

    இஸ்ரேல்

     காசாவில் கடும் போருக்கு மத்தியில் திறக்கப்பட்ட புதிய பள்ளி காசா
    காசாவில் தினசரி நான்கு மணி நேர போர் இடைநிறுத்தத்தைத் இஸ்ரேல் தொடங்கும்- அமெரிக்கா அறிவிப்பு காசா
    கனடாவில் இரண்டு யூத பள்ளிகள் மீது துப்பாக்கி சூடு: வெறுப்புக்கு இடமில்லை என பிரதமர் கருத்து இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    போர் இடைநிறுத்தத்திற்கு ஒகே, ஆனால் நிறுத்தத்திற்கு நோ சொன்ன இஸ்ரேல்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    ஹமாஸ்

    காசா, மேற்குகரையில் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய $1.2 பில்லியன் தேவைப்படும் காசா
    காசா மருத்துவமனை அருகே ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் காசா
    'சூழ்நிலை மிகவும் சிக்கலானது': இஸ்ரேல்-ஹமாஸ் போர் பற்றி பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர்  இஸ்ரேல்
    சட்டம் பேசுவோம்: போரை கட்டுப்படுத்தும் சர்வதேச சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் இஸ்ரேல்

    கத்தார்

    உளவு பார்த்ததாக 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்தது கத்தார் கடற்படை
    கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தினரை சந்தித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதமர் மோடி
    கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 கடற்படை வீரர்கள் வழக்கில் இந்தியா மேல்முறையீடு கடற்படை
    இஸ்ரேல்-ஹமாஸ் போர் இடைநிறுத்த பேச்சுவார்த்தை வெற்றி: 50 பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புதல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025