NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிவதற்கு பொது இடங்களில் கேமராக்களைப் பொருத்திய ஈரான் அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிவதற்கு பொது இடங்களில் கேமராக்களைப் பொருத்திய ஈரான் அரசு
    அந்த குர்திஷ் பெண் மஹ்சா அமினி ஹிஜாப் அணியாதற்காக கலாச்சார காவலர்களால் கைது செய்யப்பட்டார்.

    ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிவதற்கு பொது இடங்களில் கேமராக்களைப் பொருத்திய ஈரான் அரசு

    எழுதியவர் Sindhuja SM
    Apr 08, 2023
    06:53 pm

    செய்தி முன்னோட்டம்

    பெண்கள் அணியும் ஆடையை கட்டுப்படுத்தும் நோக்கில் ஈரான் அதிகாரிகள் பொது இடங்களிலும் சாலைகளிலும் கேமராக்களை நிறுவி, ஹிஜாப் அணியாத பெண்களுக்கு அபராதம் விதிக்க உள்ளதாக ஈரானிய காவல்துறை அறிவித்துள்ளது.

    ஹிஜாப் அணியாதவர்கள் அதன் "விளைவுகள் குறித்த எச்சரிக்கையை குறுஞ்செய்தியாக பெறுவார்கள்" என்று காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இந்த நடவடிக்கை "ஹிஜாப் சட்டத்திற்கு எதிரான எதிர்ப்பைத் தடுக்கும்" நோக்கத்தோடு செயல்படுத்தப்பட்டுள்ளது.

    கடந்த செப்டம்பர் மாதம், 22 வயதான குர்திஷ் பெண் ஒருவர் கலாச்சார காவலர்களின் காவலில் இருந்த போது உயிரிழந்தார்.

    இதனையடுத்து நடந்த ஈரான் போராட்டத்திற்கு பிறகு, ஹிஜாப் அணியாத ஈரானியப் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    அந்த குர்திஷ் பெண் மஹ்சா அமினி ஹிஜாப் அணியாதற்காக கலாச்சார காவலர்களால் கைது செய்யப்பட்டார்.

    ஈரான்

    ஹிஜாப் அணியாமல் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் ஈரானிய பெண்கள்

    ஹிஜாப் விதியை மீறினால் கைது செய்யப்படுவோம் என்று தெரிந்தும், பல ஈரானிய பெண்கள் கலாச்சார காவலர்களை எதிர்க்கும் வகையில் ஹிஜாப் அணியாமல் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

    நாடு முழுவதும் உள்ள மால்கள், உணவகங்கள், கடைகள் மற்றும் தெருக்களில் பெண்கள் பரவலாக ஹிஜாப் அணியாமல் வலம் வருவதை பல வைரலான வீடியோக்கள் நமக்கு காட்டுகின்றன.

    1979 ஈரானிய புரட்சிக்குப் பிறகு, பெண்கள் தங்கள் தலைமுடியையும் உருவத்தையும் மறைக்க நீண்ட, தளர்வான ஆடைகளை அணிய வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது.

    இந்த இஸ்லாமிய ஷரியா சட்டத்தை மீறுவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் அல்லது அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

    இந்த விதிகளை தளர்த்தும் எண்ணமே இல்லை என்று மார்ச் 30ஆம் தேதி ஈரான் அரசு தெரிவித்திருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரான்
    உலகம்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    ஈரான்

    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு உலகம்
    ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான் உலகம்
    ஹிஜாப் அணியாததற்காக ஆஸ்கர் விருது பெற்ற நடிகைக் கைது! உலகம்
    சீனா-பிரச்சனைகளுக்கு நடுவே ஈரான் அதிபரை சந்தித்தார் சீன அதிபர் உலகம்

    உலகம்

    மீண்டும் அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வடகொரியா வட கொரியா
    அமெரிக்காவில் பிறந்த சிறுவனை பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக தலாய் லாமா அறிவித்தார் அமெரிக்கா
    சிலிக்கான் வங்கியின் வைப்புகளும் கடன்களும் முதல் குடிமக்கள் வங்கிக்கு விறக்கப்பட்டது அமெரிக்கா
    டெல்லியில் மகளிர் கிராண்ட் பிரிக்ஸ் : பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி விலகிய சர்வதேச வீராங்கனைகள் விளையாட்டு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025