NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு
    உலகம்

    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு

    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு
    எழுதியவர் Sindhuja SM
    Dec 10, 2022, 11:26 pm 0 நிமிட வாசிப்பு
    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு
    தன் முடியை வெட்டி ஒடுக்குமுறை எதிர்க்கும் ஈரானியப் பெண்

    ஈரானில் போராடும் பெண்களின் முகங்கள், கண்கள், மார்புகள் மற்றும் பிறப்புறுப்பைக் குறிவைத்து பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி இருப்பதாக ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் 13ம் தேதி மாஷா அமினி (22) என்ற இளம்பெண்ணை ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று குற்றம்சாட்டி போலீஸ் காவலில் வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனால், பலத்த காயம் அடைந்த அவர் செப்டம்பர் 16ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து, ஈரான் முழவதும் மாபெரும் போராட்டங்கள் வெடித்தது. ஈரானிய பெண்கள் 9 வயதில் இருந்து பொதுவெளிகளில் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும். இதைக் கண்காணிப்பதற்கு போலீஸ் தனிப்படையும் அமைக்கப்பட்டிருந்தது. இது போன்ற ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவே இந்த பெண்கள் போராடுகின்றனர்.

    "பாதுகாப்பு" படையினர் கொடுத்த பாதுகாப்பு!

    கடந்த 2 மாதங்களில் இந்த போராட்டக்காரர்கள் மேல் நடத்தப்பட்ட தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு படையினர் இது போன்ற தாக்குதலை நடத்தும்போது வேண்டுமென்றே பெண்களின் முகங்கள், கண்கள், மார்புகள் மற்றும் பிறப்புறுப்பைக் குறிவைத்து தாக்கி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இவர்களுக்கு சிகிச்சை அளித்த ஒரு டாக்டர், "நான் சிகிச்சை அளித்த 20 வயது இளம்பெண்ணின் பிறப்புறுப்பில் 2 பால்ரஸ் குண்டுகளும், தொடையில் 10 குண்டுகளும் பாய்ந்திருந்தது. 10 குண்டுகளை எடுத்த எங்களால் பிறப்புறுப்பில் ஆழமாக பாய்ந்திருந்த 2 குண்டுகளை எடுக்க முடியவில்லை" என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார். அதே போல், போராட்டதில் கலந்து கொண்ட ஆண்கள் மீதும் குறிப்பிட்ட பகுதிகளைக் குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    உலகம்
    ஈரான்

    சமீபத்திய

    மின்சார வாகனம் ஊக்குவிப்பு - ரூ.800 கோடியில் உருவாகும் சார்ஜ் நிலையங்கள் எலக்ட்ரிக் வாகனங்கள்
    ஐபிஎல் 2023 : டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ரிஷப் பந்திற்கு பதிலாக அபிஷேக் போரல் சேர்ப்பு ஐபிஎல் 2023
    கடலூரில் ஆன்லைனில் வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்திய பரபரப்பு சம்பவம் கடலூர்
    ஐபிஎல் : ஆரஞ்சு கேப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பட்டியல் சென்னை சூப்பர் கிங்ஸ்

    உலகம்

    பிலிப்பைன்ஸில் சுட்டு கொலை செய்யப்பட்ட இந்திய தம்பதி பிலிப்பைன்ஸ்
    சியாட்டல்: சாதிய பாகுபாட்டைத் தடைசெய்யும் சட்டம் அமலுக்கு வந்தது அமெரிக்கா
    ராகுல் காந்தியின் வழக்கை அமெரிக்கா கவனித்து வருகிறது: அமெரிக்க அதிகாரி இந்தியா
    ஏழு வழக்குகளில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம் பாகிஸ்தான்

    ஈரான்

    இன்று முதல், சென்னையில் துவங்கவிருக்கும் ஈரானிய படவிழா சென்னை
    ஈரான் ஹிஜாப் போராட்டத்தில் கலந்துகொண்ட 22 ஆயிரம் பேருக்கு மன்னிப்பு உலகம்
    ஈரான் விஷவாயு பிரச்சனை: மன்னிக்க முடியாத குற்றம் என்கிறார் ஈரான் தலைவர் உலகம்
    பெண்களை பள்ளிக்கு செல்லவிடாமல் தடுக்க பள்ளிகளில் விஷவாயுவை பரப்பியதா ஈரான் உலகம்

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023