NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு
    தன் முடியை வெட்டி ஒடுக்குமுறை எதிர்க்கும் ஈரானியப் பெண்

    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு

    எழுதியவர் Sindhuja SM
    Dec 10, 2022
    11:26 pm

    செய்தி முன்னோட்டம்

    ஈரானில் போராடும் பெண்களின் முகங்கள், கண்கள், மார்புகள் மற்றும் பிறப்புறுப்பைக் குறிவைத்து பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி இருப்பதாக ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த செப்டம்பர் 13ம் தேதி மாஷா அமினி (22) என்ற இளம்பெண்ணை ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று குற்றம்சாட்டி போலீஸ் காவலில் வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனால், பலத்த காயம் அடைந்த அவர் செப்டம்பர் 16ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து, ஈரான் முழவதும் மாபெரும் போராட்டங்கள் வெடித்தது.

    ஈரானிய பெண்கள் 9 வயதில் இருந்து பொதுவெளிகளில் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும். இதைக் கண்காணிப்பதற்கு போலீஸ் தனிப்படையும் அமைக்கப்பட்டிருந்தது. இது போன்ற ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவே இந்த பெண்கள் போராடுகின்றனர்.

    பெண்கள் போராட்டம்

    "பாதுகாப்பு" படையினர் கொடுத்த பாதுகாப்பு!

    கடந்த 2 மாதங்களில் இந்த போராட்டக்காரர்கள் மேல் நடத்தப்பட்ட தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    பாதுகாப்பு படையினர் இது போன்ற தாக்குதலை நடத்தும்போது வேண்டுமென்றே பெண்களின் முகங்கள், கண்கள், மார்புகள் மற்றும் பிறப்புறுப்பைக் குறிவைத்து தாக்கி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

    இவர்களுக்கு சிகிச்சை அளித்த ஒரு டாக்டர், "நான் சிகிச்சை அளித்த 20 வயது இளம்பெண்ணின் பிறப்புறுப்பில் 2 பால்ரஸ் குண்டுகளும், தொடையில் 10 குண்டுகளும் பாய்ந்திருந்தது. 10 குண்டுகளை எடுத்த எங்களால் பிறப்புறுப்பில் ஆழமாக பாய்ந்திருந்த 2 குண்டுகளை எடுக்க முடியவில்லை" என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

    அதே போல், போராட்டதில் கலந்து கொண்ட ஆண்கள் மீதும் குறிப்பிட்ட பகுதிகளைக் குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய

    சமீபத்திய

    இப்போது, பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் உங்கள் வாழ்க்கை துணை பெயர் சேர்ப்பது/ நீக்குவது எளிதாகிறது பாஸ்போர்ட்
    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025