Page Loader
அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர்: ஹைதராபாத்தில் உள்ள பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டல் 

அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர்: ஹைதராபாத்தில் உள்ள பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டல் 

எழுதியவர் Sindhuja SM
Mar 20, 2024
03:39 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர் ஒருவர் காணாமல் போனதையடுத்து, அவரது பெற்றோருக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது. அந்த மாணவரின் பெற்றோருக்கு அழைப்பு விடுத்த மர்ம நபர், ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கவில்லை என்றால், உங்களது மகனின் சிறுநீரகத்தை விற்றுவிடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. ஹைதராபாத்தை சேர்ந்த அப்துல் முகமது என்ற 25 வயது இளைஞர், ஓஹியோவில் உள்ள கிளீவ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெறுவதற்காக கடந்த மே மாதம் வீட்டை விட்டு வெளியேறினார். மார்ச் 7ஆம் தேதி முதல் அப்துல் முகமது தங்களுடன் பேசவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியா 

கிளீவ்லேண்ட் போலீசில் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது 

இந்நிலையில், கடந்த வாரம் அப்துலின் தந்தையான முகமது சலீமுக்கு தெரியாத எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பின் மூலம், கிளீவ்லேண்டில் உள்ள போதைப்பொருள் விற்பனையாளர்களால் அவர்களது மகன் கடத்தப்பட்டது அவருக்கு தெரியவந்தது. மேலும், அப்துல் முகமதை விடுவிக்க வேண்டும் என்றால், $1200 டாலர்கள் தங்களுக்கு கொடுக்க வேண்டும் அவர் அவர் மிரட்டி இருக்கிறார். மேலும், பணம் தர மறுத்தால் மாணவரின் சிறுநீரகத்தை மாஃபியாவுக்கு விற்று விடுவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அவரது பெற்றோர் இது குறித்து அமெரிக்காவில் உள்ள தங்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவரது உறவினர்கள் கிளீவ்லேண்ட் போலீசில் காணவில்லை என்று புகார் அளித்துள்ளனர். மேலும், அவரது குடும்பத்தினர் சிகாகோவில் உள்ள இந்திய கவுன்சிலுக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.