NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம்; நான்கு துறைகளில் இந்தியா-உக்ரைன் இடையே ஒப்பந்தம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம்; நான்கு துறைகளில் இந்தியா-உக்ரைன் இடையே ஒப்பந்தம்
    பிரதமர் மோடி - உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி சந்திப்பு

    பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம்; நான்கு துறைகளில் இந்தியா-உக்ரைன் இடையே ஒப்பந்தம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 23, 2024
    07:24 pm

    செய்தி முன்னோட்டம்

    விவசாயம், மருத்துவம், கலாச்சாரம் மற்றும் மனிதாபிமான உதவி ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்தியாவும் உக்ரைனும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) நான்கு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பிப்ரவரி 2022இல் ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உக்ரைனுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் முதல் பயணத்தின் போது இந்த ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டன.

    1991ஆம் ஆண்டு உக்ரைன் சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் உக்ரைனுக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.

    பிரதமர் மோடியின் பயணம் ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலின் பின்னணியில் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    இராஜதந்திர மைல்கல்

    நட்பு மற்றும் வரலாற்று சிறப்புமிக்க பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம்

    உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி, பிரதமர் மோடியின் பயணம் நட்பு ரீதியானது மற்றும் வரலாற்று சிறப்பு மிக்கது என வர்ணித்துள்ளார்.

    பிரதமர் மோடியின் சமீபத்திய ரஷ்யா பயணத்தை ஜெலென்ஸ்கி முன்பு விமர்சித்ததை நினைவு கூர்ந்தார்.

    இதற்கிடையில், இந்த சந்திப்பு இந்தியா-உக்ரைன் உறவுகளுக்கு குறிப்பிடத்தக்க நாள் என்று பிரதமர் மோடி விவரித்தார் மற்றும் அமைதிக்கான செய்தியுடன் தான் வந்திருப்பதாக வலியுறுத்தினார்.

    போரின் போது இந்தியா அலட்சியமாக இருந்ததில்லை என்றும் அவர் கூறினார். உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு இந்தியாவின் ஆதரவையும் பிரதமர் மோடி உறுதிப்படுத்தினார்.

    2021ஆம் ஆண்டு முதல் சந்திப்பிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே பகிர்ந்து கொள்ளப்பட்ட ஆழமான நட்பின் உணர்வை அவர் எடுத்துரைத்தார்.

    வரலாற்று சிறப்புமிக்க வருகை

    பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் மைல்கல் என பாராட்டிய ஜெய்சங்கர் 

    இதற்கிடையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் ஒரு மைல்கல் என்று கூறினார்.

    1992ஆம் ஆண்டு தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்ட பின்னர், இந்தியப் பிரதமர் ஒருவர் உக்ரைனுக்குச் செல்வது இதுவே முதல் முறை என்று அவர் குறிப்பிட்டார்.

    ரஷ்யா-உக்ரைன் மோதலில் இந்தியா நடுநிலை வகிக்கிறது என்ற கூற்றையும் நிராகரித்த அவர், தங்களால் முடிந்ததைச் செய்ய தயாராக இருக்கிறோம் என்றும், மோதல் முடிவுக்கு வரவேண்டும் என்றே தாங்கள் விரும்புவதாகவும் கூறினார்.

    இதற்கிடையே, பிரதமர் மோடி உக்ரைனில் இருந்த நேரத்தில் அங்குள்ள இந்திய சமூகத்தினரை சந்தித்து, இந்தி படிக்கும் உக்ரேனிய மாணவர்களுடன் உரையாடினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உக்ரைன்
    உலக செய்திகள்
    உலகம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    பெண் மருத்துவர் பலாத்கார வழக்கில் நீதி கேட்டு மருத்துவர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு பாலியல் வன்கொடுமை
    புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஏவியது இஸ்ரோ; SSLV-D3 ராக்கெட்டின் இறுதிக்கட்ட சோதனையும் வெற்றி  இஸ்ரோ
    தொடர்ந்து மூன்றாவது மாதமாக கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது எஸ்பிஐ எஸ்பிஐ
    தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; சிறந்த திரைப்படமாக மலையாளத்தின் 'ஆட்டம்' தேர்வு தேசிய விருது

    உக்ரைன்

    உக்ரைனுக்கு $375 மில்லியன் மதிப்பிலான புதிய இராணுவ உதவியை வழங்க இருக்கிறது அமெரிக்கா  ரஷ்யா
    உக்ரைன்-ரஷ்யா போர்: இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்தார் ராகுல் காந்தி  இந்தியா
    சோவியத் கால அணை தகர்க்கப்பட்டது: உக்ரைனில் பெரும் வெள்ளம் உலகம்
    உக்ரைன் அணை தாக்குதல்: 17,000 பேர் மீட்பு, பலர் உயிரிழப்பு  உலகம்

    உலக செய்திகள்

    போயிங் மீது கிரிமினல் வழக்கு போட வேண்டும் என அமெரிக்க வழக்கறிஞர்கள் பரிந்துரை அமெரிக்கா
    ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைக் கோட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது பாகிஸ்தான்  பாகிஸ்தான்
    நைஜீரியாவில் பல இடங்களை குறிவைத்து குண்டுவீச்சு தாக்குதல் நடத்திய பெண்கள்: 18 பேர் பலி ஆப்பிரிக்கா
    K-pop இசையை கேட்டதற்காக 22 வயது இளைஞரை தூக்கிலிட்டது வட கொரியா வட கொரியா

    உலகம்

    புகைப்பழக்கத்தை கைவிட உதவுவதற்கு முதன்முதலாக வழிகாட்டுதல்களை வெளியிட்டது WHO  உலக சுகாதார நிறுவனம்
    ஈரானிய சீர்திருத்தவாதியான பெசெஷ்கியன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்  ஈரான்
    பூமி சீராக ஓடி கொண்டிருக்கிறது! 2024க்கு லீப் விநாடி தேவையில்லை அறிவியல்
    முகத்தில் பூசும் டால்க் பவுடர் புற்றுநோயை உண்டாக்கக்கூடியது என எச்சரிக்கை விடுத்தது WHO உலக சுகாதார நிறுவனம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025