NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு 4.2 டன் அளவிலான அத்தியாவசிய உதவிப்பொருட்களை அனுப்பியது இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு 4.2 டன் அளவிலான அத்தியாவசிய உதவிப்பொருட்களை அனுப்பியது இந்தியா
    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு அத்தியாவசிய உதவிப்பொருட்களை அனுப்பியது இந்தியா

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு 4.2 டன் அளவிலான அத்தியாவசிய உதவிப்பொருட்களை அனுப்பியது இந்தியா

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 08, 2024
    05:24 pm

    செய்தி முன்னோட்டம்

    நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்நாட்டு அதிகாரிகளிடம், அவசரகால நிவாரணப் பொருட்களின் முதல் பேட்சை ஒப்படைத்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இதன்படி, நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 4.2 டன் உதவிப் பொருட்கள் திங்கட்கிழமை (அக்டோபர் 7) இந்தியா சார்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் இருந்து நேபாள்கஞ்சிற்கு கொண்டு செல்லப்பட்ட இந்த பொருட்கள் இந்திய அரசின் சார்பில் இரண்டாவது செயலாளர் நாராயண் சிங் அவர்களால் பாங்கே மாவட்ட முதன்மை அதிகாரி ககேந்திர பிரசாத் ரிஜாலிடம் ஒப்படைத்ததாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதில் தார்பாய்கள், தூங்கும் பைகள், போர்வைகள், குளோரின் மாத்திரைகள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் இருந்தன.

    உதவி

    நேபாளத்திற்கு இந்தியாவின் உதவி

    நேபாளத்தில் கடந்த மாதத்தின் பிற்பகுதியில் இடைவிடாத மழை பெய்ததால் பரவலான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் நாடு முழுவதும் 240க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர்.

    இந்நிலையில், இந்திய அரசாங்கம் தற்போது முதற்கட்டமாக அத்தியாவசியமான சில உதவிப் பொருட்களை அனுப்பியுள்ள நிலையில், மற்ற அத்தியாவசிய சுகாதார பொருட்கள் மற்றும் மருந்துகள் மற்றும் பிற நிவாரணப் பொருட்களையும் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்து வருகிறது.

    அவற்றை விரைவில் நேபாளத்திற்கு இந்தியா வழங்கும் என்று செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சமீபத்திய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பேரழிவிற்குப் பிறகு நேபாள அரசாங்கத்திற்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவதில் இந்தியா தொடர்ந்து உறுதியாக உள்ளது என்று அது கூறியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நேபாளம்
    இந்தியா
    வெள்ளம்
    உலகம்

    சமீபத்திய

    டிரம்ப் என்னத்த சொல்றது... இந்தியாவில் உற்பத்தியை அதிகரிப்பதாக ஆப்பிள் நிறுவனம் உறுதி ஆப்பிள் நிறுவனம்
    அந்தர்பல்டியடித்த டொனால்ட் டிரம்ப்; இந்தியா-பாகிஸ்தான் மோதலில்  நேரடி மத்தியஸ்தம் செய்யவில்லை என மறுப்பு டொனால்ட் டிரம்ப்
    JNUவைத் தொடர்ந்து ஜாமியா மிலியா பல்கலைக் கழகமும் துருக்கியுடனான தொடர்பை முறித்துக் கொள்வதாக அறிவிப்பு பல்கலைக்கழகம்
    இந்திய சிஎன்ஜி வாகன சந்தையில் அறிமுகமாகும் சிட்ரோயன்; சி3  ஹேட்ச்பேக்கிற்கான சிஎன்ஜி கிட் வெளியீடு சிட்ரோயன்

    நேபாளம்

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெற்றது நேபாளம்! இந்தியா, பாகிஸ்தான் குழுவில் இடம்! கிரிக்கெட்
    நேபாள பிரதமர் 4 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார் இந்தியா
    இந்தியா-நேபாளம் இடையேயான சரக்கு ரயிலை இருநாட்டு பிரதமர்கள் துவக்கி வைப்பு பிரதமர் மோடி
    நேபாளத்தில் 5 வெளிநாட்டு பயணிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம் உலகம்

    இந்தியா

    இளைஞர்களுக்கான பிரத்யேக இன்டர்ன்ஷிப் போர்டல்; மத்திய அரசு இன்று தொடக்கம் மத்திய அரசு
    இந்திய ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் தலைவராக பொறுப்பேற்கும் முதல் பெண்; யார் இந்த வைஸ் அட்மிரல் ஆர்டி சரின்? விமானப்படை
    வானிலை அறிக்கை முதல் AI குறிப்பு வரை: Google Maps-இன் புதிய அம்சங்கள் இதோ! கூகுள்
    கிரிக்கெட் சங்கத்தில் முறைகேடு; அமலாக்கத்துறை முன் ஆஜராக முன்னாள் இந்திய கேப்டனுக்கு மீண்டும் சம்மன் அமலாக்கத்துறை

    வெள்ளம்

    4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மனோன்மணியம் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு  திருநெல்வேலி
    தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு மழைக்கால அவசர உதவி எண் அறிவிப்பு  தூத்துக்குடி
    'இனிவரும் காலங்களில் இதுபோன்ற கனமழையை அடிக்கடி எதிர்பார்க்கலாம்'-வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன்  கனமழை
    கனமழை எதிரொலி - திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு  ஆட்சியர்

    உலகம்

    கூடுதல் நேரம் பணியாற்றும் இந்தியர்களின் எண்ணிக்கை இவ்ளோவா! அதிர்ச்சித் தகவல் இந்தியா
    பயன்பாட்டில் இல்லாத ஜிமெயில் ஐடிகளை முடக்க கூகுள் முடிவு; உங்கள் ஐடியை செயலில் வைத்திருப்பது எப்படி? கூகுள்
    அதிர்ச்சி; வாஷிங்டனில் இந்திய தூதரக அதிகாரி மர்ம மரணம் அமெரிக்கா
    உலகின் கைவிடப்பட்ட சிறந்த கட்டிடக்கலை கொண்ட ஐந்து நகரங்கள்; ஆச்சரியமூட்டும் பின்னணி சுற்றுலா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025