NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 'இந்தியா நிலவை அடைந்துவிட்டது, நாம் பணத்திற்காக பிச்சை எடுக்கிறோம்': புலம்பும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'இந்தியா நிலவை அடைந்துவிட்டது, நாம் பணத்திற்காக பிச்சை எடுக்கிறோம்': புலம்பும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்
    பாகிஸ்தானில் ஏழைகள் உணவுக்காக போராடி வருவதாக முன்னாள் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

    'இந்தியா நிலவை அடைந்துவிட்டது, நாம் பணத்திற்காக பிச்சை எடுக்கிறோம்': புலம்பும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

    எழுதியவர் Sindhuja SM
    Sep 20, 2023
    05:31 pm

    செய்தி முன்னோட்டம்

    PML(N) கட்சி கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், "இந்தியா நிலவை அடைந்துவிட்டது, G20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிந்துவிட்டது. ஆனால், பாகிஸ்தான் மற்ற நாடுகளிடம் பணத்திற்காக பிச்சை எடுத்து கொண்டிருக்கிறது." என்று கூறியுள்ளார்.

    லாகூரில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில், PML(N) கட்சியின் தலைவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் உரையாற்றினார்.

    அப்போது அவர், "ஜி20 மாநாட்டில் உலகத் தலைவர்களுக்கு இந்தியா விருந்தளித்து கொண்டிருக்கும் போது, ​​பாகிஸ்தான் பிரதமர் பணத்திற்காக ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் சென்று பிச்சை எடுத்து கொண்டிருக்கிறார். பாகிஸ்தானால் ஏன் இதுபோன்ற சாதனைகளை செய்ய முடியவில்லை? நமது அசிங்கமான நிலைக்கு யார் பொறுப்பு?" என்று கேள்வி எழுப்பினார்.

    ட்ஜ்வ்க்க்

    "இந்தியாவின் பார்வையில் நாம் எங்கே நிற்கிறோம்?":  நவாஸ் ஷெரீப் கேள்வி

    பாகிஸ்தானில் ஏழைகள் உணவுக்காக போராடி வருவதாக முன்னாள் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

    பாகிஸ்தானின் தற்போதைய பொருளாதார நிலையை விமர்சித்த ஷெரீப், "நம் நாட்டிற்கு இதைச் செய்தவர்கள் தான் மிகப்பெரிய குற்றவாளிகள்" என்று கூறினார்.

    1990இல் தனது அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களை இந்தியா பின்பற்றி முன்னேறி உள்ளதாக அவர் மேலும் கூறினார்.

    "அடல் பிஹாரி வாஜ்பாய் இந்தியாவின் பிரதமரானபோது, ​​அவர்களின் கருவூலத்தில் ஒரு பில்லியன் டாலர்கள் மட்டுமே இருந்தது. இப்போது அவர்களின் அந்நியச் செலாவணி கையிருப்பு 600 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது" என்று ஷெரீப் கூறியுள்ளார்.

    "ஆனால் நாம் ஒரு பில்லியன் டாலர்களைக் கூட பிச்சை எடுக்கிறோம். இந்தியாவின் பார்வையில் நாம் எங்கே நிற்கிறோம்?" என்றும் அவர் பேசியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    உலகம்
    இந்தியா
    பொருளாதாரம்

    சமீபத்திய

    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்
    உலக சுகாதார நிறுவனம் முதன்முதலில் தொற்றுநோய் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்கிறது- அதன் அர்த்தம்? தொற்று நோய்

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறதா? ஷெபாஸ் ஷெரீப்
    காதலரை தேடி பாகிஸ்தானுக்கு சென்ற திருமணமான இந்திய பெண்  இந்தியா
    பிரிட்டனை சேர்ந்த பாகிஸ்தானிய போதகர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு  பிரிட்டன்
    மதம் மாறி பாகிஸ்தான் காதலரை மணந்து கொண்டார் இந்திய பெண் அஞ்சு  இந்தியா

    உலகம்

    சிங்கப்பூரின் அதிபர் ஆன தமிழர்: யாரிந்த தர்மன் சண்முகரத்தினம்? சிங்கப்பூர்
    இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையை திடீரென்று நிறுத்தியது கனடா  கனடா
    ஜி-20 மாநாட்டைத் தவிர்க்க இருக்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்: காரணம் என்ன? சீனா
    அணுகுண்டு தாக்குதல் பயிற்சி நடத்திய வடகொரியா: பீதியில் அண்டை நாடுகள்  வட கொரியா

    இந்தியா

    இந்தியா-கனடா: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஏன் மோசமடைந்தன? கனடா
    பொது வருங்கால வைப்புநிதியில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.1 கோடி பெற முடியுமா? முதலீடு
    இந்தியாவில் மேலும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    ஒரே மருத்துவமனையில் 3 மாதங்களுக்குள் 179 பச்சிளம் குழந்தைகள் பலி: காரணம் என்ன? மகாராஷ்டிரா

    பொருளாதாரம்

    மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது: மோர்கன் ஸ்டான்லி இந்தியா
    "மூன்றில் இரண்டு பங்கு 2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன" -ரிசர்வ் வங்கி ஆளுநர் ரிசர்வ் வங்கி
    உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாகும் இந்தியா: பிரதமர் மோடி பிரதமர்
    2031-ல் 6.7 ட்ரில்லியன் டாலர்கள் பொருளாதாரமாக மாறும் இந்தியா! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025