NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஒரு கிராமத்தையே மொத்தமாக விழுங்கிய மொராக்கோ நிலநடுக்கம்: கதறும் மக்கள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒரு கிராமத்தையே மொத்தமாக விழுங்கிய மொராக்கோ நிலநடுக்கம்: கதறும் மக்கள் 
    300,000 பேர் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

    ஒரு கிராமத்தையே மொத்தமாக விழுங்கிய மொராக்கோ நிலநடுக்கம்: கதறும் மக்கள் 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 11, 2023
    02:37 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆறு தசாப்தங்களுக்கு பிறகு மொராக்கோ நாட்டில் ஏற்பட்டிருக்கும் மிக பெரும் நிலநடுக்கத்தால் ஒரு கிராமமே மொத்தமாக அழிந்துள்ளது.

    நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில், அட்லஸ் மலைகளில் திக்த் என்ற கிராமம் அமைந்துள்ளது.

    இந்த கிராமத்தில் குறைந்தது 100 குடும்பங்கள் வசித்துவந்தன.

    கிட்டத்தட்ட அந்த 100 குடும்பங்களும் இந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த வெள்ளிக்கிழமை மொராக்கோவைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், மொரோக்கா நாடு முழுவதும் குறைந்தது 2,122 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 2,421 பேர் காயமடைந்தனர்.

    வட ஆபிரிக்காவில் உள்ள மொராக்கோ நாட்டில் குறைந்தது 300,000 பேர் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

    பிட்னிஃவ்க்

    வட ஆப்பிரிக்காவை உலுக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் 

    நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததை அடுத்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11:11 மணியளவில் 6.8 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

    மேலும், அது நடந்து 19 நிமிடங்களுக்குப் பிறகு 4.9 ரிக்டர் அளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டதாக USGS கூறியுள்ளது.

    மொராக்கோ நிலநடுக்கத்தின் மையம் மொராக்கோவின் பொருளாதார மையமான மராகேக்கிற்கு தெற்கே சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அட்லஸ் மலைகளில் அதிகமாக இருந்தது.

    இது வட ஆபிரிக்காவின் மிக உயரமான சிகரமான டூப்கல் மற்றும் பிரபலமான மொராக்கோ ஸ்கை ரிசார்ட்டான ஒகைமெடனுக்கு அருகில் அமைந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    நிலநடுக்கம்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025 ஆர்சிபிvsஎஸ்ஆர்எச்: டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ்; சன்ரைசர்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் வான்வெளியை மறுத்த பிறகு, இண்டிகோ விமானம் தரையிறங்கும் வரை வழிநடத்திய இந்திய விமானப்படை இண்டிகோ
    ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஜூன் 1 முதல் 50% வரி விதிப்பு; அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு ஐரோப்பிய ஒன்றியம்
    வெளிநாட்டு மாணவர் சேர்க்கை தடுக்கப்பட்டதை அடுத்து, டிரம்ப் அரசாங்கத்தின் மீது வழக்கு தொடர்ந்த ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஹார்வர்ட் பல்கலைக்கழகம்

    உலகம்

    "மக்களுக்கு என்னைப் பற்றி தெரியும்": அதிபர் தேர்தல் விவாதங்களைத் தவிர்க்கும் டிரம்ப் அமெரிக்கா
    2024 அமெரிக்க அதிபர் தேர்தல்: இந்தியாவுக்கு டொனால்ட் டிரம்ப் விடுத்த மிகப்பெரும் எச்சரிக்கை  அமெரிக்கா
    புயல் ஹிலாரி பாதிப்புக்கு மத்தியில் கலிபோர்னியாவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் அமெரிக்கா
    பிரிக்ஸ் மாநாடு: பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திக்க வாய்ப்பு  இந்தியா

    நிலநடுக்கம்

    துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு காணவில்லை! கால்பந்து
    துருக்கி: 90 மணி நேர போராட்டத்திற்கு பின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட நாய் துருக்கி
    சிக்கிமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு இந்தியா
    வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்த நியூஸிலாந்தில் நிலநடுக்கம் உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025