NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஒரு கிராமத்தையே மொத்தமாக விழுங்கிய மொராக்கோ நிலநடுக்கம்: கதறும் மக்கள் 
    ஒரு கிராமத்தையே மொத்தமாக விழுங்கிய மொராக்கோ நிலநடுக்கம்: கதறும் மக்கள் 
    1/2
    உலகம் 1 நிமிட வாசிப்பு

    ஒரு கிராமத்தையே மொத்தமாக விழுங்கிய மொராக்கோ நிலநடுக்கம்: கதறும் மக்கள் 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 11, 2023
    02:37 pm
    ஒரு கிராமத்தையே மொத்தமாக விழுங்கிய மொராக்கோ நிலநடுக்கம்: கதறும் மக்கள் 
    300,000 பேர் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

    ஆறு தசாப்தங்களுக்கு பிறகு மொராக்கோ நாட்டில் ஏற்பட்டிருக்கும் மிக பெரும் நிலநடுக்கத்தால் ஒரு கிராமமே மொத்தமாக அழிந்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில், அட்லஸ் மலைகளில் திக்த் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் குறைந்தது 100 குடும்பங்கள் வசித்துவந்தன. கிட்டத்தட்ட அந்த 100 குடும்பங்களும் இந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை மொராக்கோவைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், மொரோக்கா நாடு முழுவதும் குறைந்தது 2,122 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 2,421 பேர் காயமடைந்தனர். வட ஆபிரிக்காவில் உள்ள மொராக்கோ நாட்டில் குறைந்தது 300,000 பேர் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

    2/2

    வட ஆப்பிரிக்காவை உலுக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் 

    நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததை அடுத்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11:11 மணியளவில் 6.8 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. மேலும், அது நடந்து 19 நிமிடங்களுக்குப் பிறகு 4.9 ரிக்டர் அளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டதாக USGS கூறியுள்ளது. மொராக்கோ நிலநடுக்கத்தின் மையம் மொராக்கோவின் பொருளாதார மையமான மராகேக்கிற்கு தெற்கே சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அட்லஸ் மலைகளில் அதிகமாக இருந்தது. இது வட ஆபிரிக்காவின் மிக உயரமான சிகரமான டூப்கல் மற்றும் பிரபலமான மொராக்கோ ஸ்கை ரிசார்ட்டான ஒகைமெடனுக்கு அருகில் அமைந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    மொராக்கோ
    உலகம்
    நிலநடுக்கம்

    மொராக்கோ

    லிபியா: நாட்டையே திருப்பி போட்ட வெள்ளத்தால் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம் லிபியா

    உலகம்

    ஜி20 மாநாடு: சீனாவின் 'பெல்ட் அண்ட் ரோடு' திட்டத்தில் இருந்து வெளியேறுகிறது இத்தாலி சீனா
    செப்டம்பர் 10ம் தேதி - உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிப்பு தற்கொலை
    ஜி20 மாநாடு: புதுடெல்லி பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவித்தார் பிரதமர் மோடி! ஜி20 மாநாடு
    ஆறு வயதில் வீடியோ கேம் உருவாக்க முடியுமா? சாதித்து காட்டிய சிறுமி சிமர் குரானா கின்னஸ் சாதனை

    நிலநடுக்கம்

    மொராக்கோ நிலநடுக்கத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு ஆப்பிரிக்கா
    மொராக்கோ பூகம்பம்: பலி எண்ணிக்கை 820ஆக உயர்வு  ஆப்பிரிக்கா
    மொராக்கோவில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 296 பேர் பலி ஆப்பிரிக்கா
    ஜம்மு காஷ்மீர்: குல்மார்க்கில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்  ஜம்மு காஷ்மீர்
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023