NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 'ஜி 20' மாநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் வருகை - சுற்றுலாத்துறை இயக்குனர் ஆய்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    'ஜி 20' மாநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் வருகை - சுற்றுலாத்துறை இயக்குனர் ஆய்வு
    மாமல்லபுரத்தை சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று ஆய்வு

    'ஜி 20' மாநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் வருகை - சுற்றுலாத்துறை இயக்குனர் ஆய்வு

    எழுதியவர் Nivetha P
    Jan 21, 2023
    02:49 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜி20 நாடுகள் அமைப்பில் இந்தியா, ரஷியா, ஜப்பான், இந்தோனேஷியா உள்ளிட்ட பல நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

    இந்த நாடுகளுக்கு சுழற்சி முறையில் தலைமை பொறுப்பு தரப்பட்டு ஜி20 மாநாடு நடத்த வாய்ப்பு வழங்கி வருகிறது.

    அதன்படி, இம்முறை இந்தியாவில் நடைபெறவுள்ள இந்த ஜி20 மாநாடு நடக்கவுள்ளது. இந்த மாநாடு நாடுமுழுவதும் உள்ள பல மாநிலங்களின் தலைநகரம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதனையடுத்து ஜி20 மாநாடு வரும் 31ம் தேதி முதல் 2ம் தேதி வரை சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல், கன்னிமாரா, கிண்டி ஐஐடி போன்ற இடங்களில் நடைபெறவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்த மாநாட்டில் 20நாடுகளின் சார்பில் 100 பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.

    பாதுகாப்பு ஏற்பாடுகள்

    வெளிநாட்டு விருந்தினர்களுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார் சந்தீப் நந்தூரி

    20 நாடுகளில் இருந்து வரும் பிரதிநிதிகள் பிப்ரவரி1ம் தேதியன்று சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள பல்லவகால கலைச்சின்னங்களை காண வருகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

    இவர்கள் அங்கு உள்ள கடற்கரைகோயில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட இடங்களை மாலை 3மணி முதல் 6மணி வரை கண்டு ரசிக்க சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதன்பேரில், மாமல்லபுரம் வரும் வெளிநாட்டு விருந்தினர்களை எவ்வாறு தமிழக பாரம்பரிய முறையில் வரவேற்பது, எந்த மாதிரியான கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது, அவர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்து தமிழக சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி நேற்று நேரில்சென்று ஆய்வுசெய்துள்ளார்.

    அங்கு சென்ற அவர் வெளிநாட்டு விருந்தினர்களை வரவேற்கும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்தை பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக செய்திகள்
    இந்தியா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    உலக செய்திகள்

    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! உலகம்
    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட 86 வயது தம்பதி - நீண்ட நாள் கனவு நிறைவேறியது பயணம்
    சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா-60% பேர் அடுத்த 3 மாதங்களில் பாதிக்கப்படும் அபாயம் சீனா

    இந்தியா

    சிக்கிம் மாநிலத்தில் குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகை மாநிலங்கள்
    சாதியத்தை வளர்க்கிறதா "ப்யூர் வெஜ்" போர்டுகள்: ட்விட்டர் வாக்குவாதம் இந்தியா
    60 மாணவிகள் 17 கிலோ மீட்டர் நடந்தே சென்று வார்டன் மீது புகார் இந்தியா
    ஜனவரி 18க்கான Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்; தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025