NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 'ஜி 20' மாநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் வருகை - சுற்றுலாத்துறை இயக்குனர் ஆய்வு
    உலகம்

    'ஜி 20' மாநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் வருகை - சுற்றுலாத்துறை இயக்குனர் ஆய்வு

    'ஜி 20' மாநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் வருகை - சுற்றுலாத்துறை இயக்குனர் ஆய்வு
    எழுதியவர் Nivetha P
    Jan 21, 2023, 02:49 pm 0 நிமிட வாசிப்பு
    'ஜி 20' மாநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் வருகை - சுற்றுலாத்துறை இயக்குனர் ஆய்வு
    மாமல்லபுரத்தை சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று ஆய்வு

    ஜி20 நாடுகள் அமைப்பில் இந்தியா, ரஷியா, ஜப்பான், இந்தோனேஷியா உள்ளிட்ட பல நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நாடுகளுக்கு சுழற்சி முறையில் தலைமை பொறுப்பு தரப்பட்டு ஜி20 மாநாடு நடத்த வாய்ப்பு வழங்கி வருகிறது. அதன்படி, இம்முறை இந்தியாவில் நடைபெறவுள்ள இந்த ஜி20 மாநாடு நடக்கவுள்ளது. இந்த மாநாடு நாடுமுழுவதும் உள்ள பல மாநிலங்களின் தலைநகரம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜி20 மாநாடு வரும் 31ம் தேதி முதல் 2ம் தேதி வரை சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல், கன்னிமாரா, கிண்டி ஐஐடி போன்ற இடங்களில் நடைபெறவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மாநாட்டில் 20நாடுகளின் சார்பில் 100 பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.

    வெளிநாட்டு விருந்தினர்களுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார் சந்தீப் நந்தூரி

    20 நாடுகளில் இருந்து வரும் பிரதிநிதிகள் பிப்ரவரி1ம் தேதியன்று சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள பல்லவகால கலைச்சின்னங்களை காண வருகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இவர்கள் அங்கு உள்ள கடற்கரைகோயில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட இடங்களை மாலை 3மணி முதல் 6மணி வரை கண்டு ரசிக்க சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்பேரில், மாமல்லபுரம் வரும் வெளிநாட்டு விருந்தினர்களை எவ்வாறு தமிழக பாரம்பரிய முறையில் வரவேற்பது, எந்த மாதிரியான கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது, அவர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்து தமிழக சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி நேற்று நேரில்சென்று ஆய்வுசெய்துள்ளார். அங்கு சென்ற அவர் வெளிநாட்டு விருந்தினர்களை வரவேற்கும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்தை பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஆயிரக்கணக்கான தலித் பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய 'சிறுதானிய மனிதர்' இந்தியா
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்
    மகளிர் ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி : முதல் பட்டத்தை வெல்லப்போவது யார்? மகளிர் ஐபிஎல்
    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! வைரல் செய்தி

    இந்தியா

    பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் - சிலிண்டர் மானியம் ரூ.200 அதிகரிப்பு தொழில்நுட்பம்
    கேம் பிரியர்களுக்காக வரும் ASUS ROG Phone 7 - என்ன எதிர்பார்க்கலாம்? ஸ்மார்ட்போன்
    காஷ்மீருக்கு செல்லும் முதல் ரயில் பாதை டிசம்பரில் திறக்கப்படும்: ரயில்வே அமைச்சர் ஜம்மு காஷ்மீர்
    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : தங்கம் வென்றார் நிது கங்காஸ் உலக கோப்பை

    உலக செய்திகள்

    இதுவே காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கான கடைசி வாய்ப்பு: ஐ.நா.வின் காலநிலை அறிக்கை உலகம்
    குறைந்த விலைக்கு விற்கப்பட்ட கிரெடிட் சூயிஸ் நிறுவனம்: என்ன சொல்கிறார் உதய் கோடக் உலகம்
    மலை காடுகள் மிக வேகமாக அழிந்து வருகிறது: ஆய்வில் தகவல் உலகம்
    மெகா சுனாமியால் அழியப்போகும் பேராபத்து? விஞ்ஞானிகள் எச்சரிக்கை! இங்கிலாந்து

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023