NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பிரான்ஸ் துப்பாக்கிச் சூடு: 5 நாட்களாகியும் ஓயாத கலவரம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரான்ஸ் துப்பாக்கிச் சூடு: 5 நாட்களாகியும் ஓயாத கலவரம் 
    பாரிசில் மட்டும் 126 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாக பாரிஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    பிரான்ஸ் துப்பாக்கிச் சூடு: 5 நாட்களாகியும் ஓயாத கலவரம் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 02, 2023
    12:33 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரான்ஸில் 5 நாட்கள் ஆகியும் ஓயாத கலவரத்தால் அந்நாட்டில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    நேற்று பிரான்ஸின் தெற்கு நகரமான மார்சேயில் காவல்துறையும் போராட்டக்காரர்களும் மீண்டும் மோதிக்கொண்டனர்.

    இதனையடுத்து, அந்த நகரத்தில் மட்டும் 56 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த மோதலின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதங்களில் உலா வந்து கொண்டிருக்கும் நிலையில், போராட்டக்காரர்களுக்கு எதிராக போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தியதை பல வீடியோக்களில் பார்க்க முடிகிறது.

    பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், போராட்டக்காரர்கள் ஒன்று கூடுமாறு சமூக ஊடகங்களில் பல அழைப்புகள் விடுக்கப்பட்டதை அடுத்து, சாம்ப்ஸ்-எலிசீஸ் என்ற பகுதியில் பலத்த போலீஸ் படைகள் குவிக்கப்பட்டன.

    பித்

    சனிக்கிழமையன்று 427போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்

    இதனால், போராட்டக்காரர்களால் அந்த பகுதிக்குள் நுழைய முடியவில்லை.

    மேலும், பாரிசில் மட்டும் 126 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாக பாரிஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையில், பிரெஞ்சு உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின், சனிக்கிழமையன்று நாடு முழுவதும் 427 பேர் கைது செய்யப்பட்டதாக உறுதிசெய்துள்ளார்.

    சனிக்கிழமை நிலவரப்படி, காவல்துறை மற்றும் துணை ராணுவ ஜெண்டர்ம் படையை சேர்ந்த 45,000 அதிகாரிகள் வன்முறைப் போராட்டங்களைச் சமாளிக்க நியமிக்கப்பட்டனர்.

    கடந்த செவ்வாய்க்கிழமை(ஜூன் 27), தனது மெர்சிடிஸ் காரில் பயணம் செய்து கொண்டிருந்த நஹெல்(17) என்ற இளைஞரை பிரான்ஸ் போலீஸார் சுட்டு கொன்றனர்.

    அந்த இளைஞர் போக்குவரத்து விதிகளை மீறியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

    இதையடுத்து, அந்நாடு முழுவதும் போலீஸ் அராஜகத்திற்கு எதிராகவும் பிரான்ஸ் அரசாங்கத்திற்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்தன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரான்ஸ்
    உலகம்
    உலக செய்திகள்
    காவல்துறை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பிரான்ஸ்

    சுற்றுலா: பிரான்சிற்கு சுற்றுலா செல்லும் போது நீங்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் சுற்றுலா
    மாமல்லபுரத்தை தேடி வரும் பிரான்ஸ் நாட்டு பயணிகள் தமிழ்நாடு
    விபத்துக்களை ஏற்படுத்தும் வாடகை இ-ஸ்கூட்டர்கள் - தடைவிதிக்க பாரிஸ் வாக்களிப்பு! எலக்ட்ரிக் வாகனங்கள்
    இந்தியா-பிரான்ஸ் இணைந்து நடத்தும் 'ஓரியன்' ராணுவ பயிற்சி இந்தியா

    உலகம்

    பிரதமர் மோடியின் அரசு முறை பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது: அமெரிக்கா இந்தியா
    ரகசிய ஆவணங்கள் வழக்கு: இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார் டொனால்டு டிரம்ப்  அமெரிக்கா
    ரோப்லாக்ஸ் பங்குகளை வாங்குவதற்கு பரிந்துரை செய்த கனக்கார்டு நிறுவனம், ஏன்? கேம்ஸ்
    ரகசிய ஆவணங்கள் வழக்கு: நிபந்தனைகளுடன் டிரம்ப் விடுவிக்கப்பட்டார்   அமெரிக்கா

    உலக செய்திகள்

    சிங்கப்பூரில் உயரும் சொத்து மதிப்பு: வாடகை வீடு எடுப்பது கூட இனி கடினம்  உலகம்
    அணு ஆயுதக் கட்டுப்பாடு குறித்த அமெரிக்க அறிக்கை 'நேர்மறையானது': ரஷ்யா  உலகம்
    சிரிப்பை கற்றுக்கொள்வதற்கு கோச்சிங் எடுக்கும் ஜப்பானியர்கள்  ஜப்பான்
    இந்தியாவின் வெளிநாட்டுக் குடியுரிமைக்கான தகுதி நீட்டிப்பு: குடியரசு தலைவர் இந்தியா

    காவல்துறை

    சயனைடு கலந்த மது குடித்து 2 பேர் பலி - டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம்  தமிழ்நாடு
    கலாஷேத்ரா விவகாரம் - 10க்கும் மேற்பட்ட மாணவிகள் நேரில் ஆஜராகி விளக்கம்  சென்னை
    சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து - உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு  விருதுநகர்
    தமிழ்நாடு காவல் துறை மோப்ப நாய் பிரிவில், பெண் காவலர்கள் நியமனம்!  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025