NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்த்திருத்தம் மற்றும் இந்தியாவுக்கு நிரந்தர இடம்; பிரான்ஸ் வலியுறுத்தல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்த்திருத்தம் மற்றும் இந்தியாவுக்கு நிரந்தர இடம்; பிரான்ஸ் வலியுறுத்தல்
    ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் தர பிரான்ஸ் வலியுறுத்தல்

    ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்த்திருத்தம் மற்றும் இந்தியாவுக்கு நிரந்தர இடம்; பிரான்ஸ் வலியுறுத்தல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 26, 2024
    06:02 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஐநா பாதுகாப்பு கவுன்சிலை விரிவாக்கம் செய்து சக்தி வாய்ந்த அமைப்பாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தியதோடு, சீர்திருத்தப்பட்ட ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டும் என வாதிட்டார்.

    ஐநா சபை கூட்டத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 25) பேசிய அவர், "பாதுகாப்பு கவுன்சில் விரிவுபடுத்தப்படுவதற்கு பிரான்ஸ் ஆதரவாக உள்ளது.

    ஜெர்மனி, ஜப்பான், இந்தியா மற்றும் பிரேசில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்க வேண்டும், அதே போல் ஆப்பிரிக்கா அதை பிரதிநிதித்துவப்படுத்த முடிவு செய்யும் இரண்டு நாடுகளும் இருக்க வேண்டும்." என்றார்.

    பாதுகாப்பு கவுன்சிலின் அவசரகால சீர்திருத்தத்திற்கு அழுத்தம் கொடுப்பதில் ஐநாவில் இந்தியா முன்னணியில் உள்ளது.

    வீட்டோ உரிமை

    வீட்டோ உரிமையை கட்டுப்படுத்தவும் இம்மானுவேல் மேக்ரான் வலியுறுத்தல்

    இம்மானுவேல் மேக்ரான் தனது உரையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் பணி முறைகளில் மாற்றம், பெரிய குற்றச் செயல்களில் வீட்டோ உரிமையின் வரம்பு மற்றும் அமைதியைப் பேணுவதற்குத் தேவையான செயல்பாட்டு முடிவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

    முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை ஐநா சபையில் நடந்த எதிர்காலத்திற்கான உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில், உலகளாவிய அமைதி மற்றும் வளர்ச்சிக்கு, ஐநாவில் சீர்திருத்தங்கள் அவசியம் என்று வலியுறுத்திய சில நாட்களுக்குப் பிறகு, மேக்ரானின் கருத்துக்கள் வந்துள்ளன.

    இந்த உச்சிமாநாட்டில் உரையாற்றிய ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸும், 15 நாடுகளைக் கொண்ட ஐநா பாதுகாப்பு கவுன்சிலை காலாவதியானது என்றும், சீர்திருத்தப்படாவிட்டால் இறுதியில் அனைத்து நம்பகத்தன்மையையும் இழக்க நேரிடும் என்றும் தெரிவித்தார்.

    ஐநா பாதுகாப்பு கவுன்சில்

    ஐநா பாதுகாப்பு கவுன்சில் அமைப்பு

    தற்போது, ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஆனது ஐந்து நிரந்தர உறுப்பினர்களையும், 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளையும் கொண்டுள்ளது.

    அவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் இரண்டு வருட காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

    ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் ரஷ்யா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா மற்றும் இந்த நாடுகள் எந்தவொரு முக்கிய தீர்மானத்தையும் வீட்டோ செய்யலாம்.

    இந்தியா கடைசியாக 2021-22இல் நிரந்தரமற்ற உறுப்பினராக இருந்தது. ஐநா சமகால உலக யதார்த்தத்தை பிரதிபலிக்கும் வகையில் நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது.

    1945இல் நிறுவப்பட்ட 15 நாடுகளின் கவுன்சில் 21ஆம் நூற்றாண்டில் நோக்கத்திற்காக பொருந்தாது மற்றும் சமகால புவி-அரசியல் யதார்த்தங்களைப் பிரதிபலிக்கவில்லை என்றும் இந்தியா வலியுறுத்தி வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐநா சபை
    இந்தியா
    பிரான்ஸ்
    உலகம்

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    ஐநா சபை

    தாக்குதலை நிறுத்தக் கோரிய ஐநாவின் கோரிக்கையை நிராகரித்த இஸ்ரேல்: ஐநா பொதுச் செயலாளரை பதிவி விலகவும் கோரிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எரிபொருள் பற்றாக்குறை எதிரொலி- காசாவில் உள்ள ஐநா அமைப்பு சில மணி நேரங்களில் மூடப்படலாம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் குறையும்: ஐநா கணிப்பு  இந்தியா
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ள இந்தியா ஏன் மறுத்தது? இந்தியா

    இந்தியா

    வேகன்ஆர் வால்ட்ஸ் லிமிடெட் எடிஷனை ரூ.6 லட்சத்திற்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்தது மாருதி சுசுகி மாருதி
    உண்மை சரிபார்ப்பு குழுக்களை அமைக்கும் மத்திய அரசின் சட்டத் திருத்தம் செல்லாது; உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு மத்திய அரசு
    தடுப்பூசி நிர்வாகத்தை எளிமையாக்கும் U-WIN டிஜிட்டல் தளத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி; ஜேபி நட்டா அறிவிப்பு மத்திய அரசு
    இந்தியாவில் தனது முதல் எலக்ட்ரிக் மாடலை அக்டோபர் 3இல் அறிமுகம் செய்கிறது கியா; சிறப்பம்சங்கள் என்னென்ன? கியா

    பிரான்ஸ்

    கூடுதலான கதிர்வீச்சை வெளியிடும் ஐபோன் 12, விற்பனையை நிறுத்த உத்தரவிட்ட பிரான்ஸ் ஆப்பிள்
    68 லட்சத்திற்கு விலை போன மைக்கேல் ஜாக்சனின் மூன் வாக் தொப்பி இந்தியா
    மெட்ரோவில் இருந்து திரையரங்குகள் வரை: பாரிஸ் நகரத்தை வாட்டி வதைக்கும் மூட்டை பூச்சிகள் பாரிஸ்
    புதிய லோகோவுடன் புதுப்பொலிவு பெறும் ஏர் இந்தியா விமானங்கள் ஏர் இந்தியா

    உலகம்

    உலக சிங்க தினம் 2024: அழிவின் விளிம்பில் உள்ள காட்டு ராஜாக்களை மீட்பதற்கான முன்னெடுப்பு சிறப்பு செய்தி
    யூடியூப் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சூசன் வோஜ்சிக்கி புற்றுநோயால் மரணம் யூடியூப்
    விரைவில் பங்களாதேஷ் திரும்புகிறார் ஷேக் ஹசீனா; மகன் சஜீப் வசேத் ஜாய் தகவல் ஷேக் ஹசீனா
    அமெரிக்காவில் தயாராகும் 100 வீடுகளைக் கொண்ட உலகின் முதல் 3டி பிரிண்டிங் குடியிருப்பு அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025