NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / விமான நிலையத்தில் ஆடைகளை கழற்ற சொல்லி கட்டாயப்படுத்தினர்: திருநர் மாடல் குற்றசாட்டு
    அடுத்த செய்திக் கட்டுரை
    விமான நிலையத்தில் ஆடைகளை கழற்ற சொல்லி கட்டாயப்படுத்தினர்: திருநர் மாடல் குற்றசாட்டு
    இதை வெளியே தைரியமாக சொன்னதற்கு பலர் இவரை பாராட்டியுள்ளனர்.

    விமான நிலையத்தில் ஆடைகளை கழற்ற சொல்லி கட்டாயப்படுத்தினர்: திருநர் மாடல் குற்றசாட்டு

    எழுதியவர் Sindhuja SM
    Mar 03, 2023
    02:47 pm

    செய்தி முன்னோட்டம்

    பாலின இருநிலைக்கு அப்பாற்பட்டவரான(Non-Binary) இந்திய மாடல், வடிவமைப்பாளர் மற்றும் சமூக ஆர்வலர் நின் கலா, பிப்ரவரி 24 அன்று மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் தனக்கு நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

    மஸ்கட் சர்வதேச விமான நிலையத்திற்கு அவர் சென்ற போது, ஒரு அதிகாரி அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்றார் என்றும் அங்கு சோதனைக்காக சட்டையை கழற்ற சொல்லி தகாத முறையில் தொட்டார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்த மாடலின் கதை சமூக ஊடகங்களில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது. மேலும், இதை வெளியே தைரியமாக சொன்னதற்கு பலர் அவரை பாராட்டியுள்ளனர்.

    இந்தியா

    இன்ஸ்டாகிராம் பதிவில் நின் கலா கூறி இருப்பதாவது:

    நான் எனது நண்பர்களோடு சுற்றுலா விசாவில் மஸ்கட் விமான நிலையத்தில் தரையிறங்கினேன். எனது நண்பர்கள் இம்மிகிரேஷனை முடித்துக்கொண்டனர். ​​​​ஆனால் அதிகாரிகள் என் மீது சந்தேகம் கொண்டதால், காத்திருக்குமாறு என்னை கேட்டுக்கொண்டனர்.

    இரண்டு அதிகாரிகள் சோதனைக்காக என்னை சட்டையைக் கழற்ற சொன்னார்கள். அதில் ஒருவர் என்னை தகாத முறையில் தொட்டார்.

    அதன் பின், அவர்கள் என்னை நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை. என்னை பார்ப்பதற்கு "பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருப்பது போல் தெரியவில்லை" என்று கூறினார்கள்.

    இதெல்லாம் நடக்கும் போது அவர்கள் என்னை பார்த்து பொழுதுபோக்கு போல் சிரித்து கொண்டிருந்தனர்.

    அவர்கள் என்னை ஒரு குற்றவாளியை போல் நடத்தினார்கள். நான் சொல்ல வருவதை அவர்கள் கேட்கவே இல்லை.

    இது மிகவும் மோசமான மற்றும் அவமானகரமான அனுபவமாக இருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உலகம்

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    இந்தியா

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவராக உத்திரபிரதேச மருத்துவர் பிரசாந்த் லாவனியா நியமனம் மதுரை
    தேசிய அறிவியல் தினம் 2023: அதன் வரலாறும், முக்கியத்துவமும் பற்றி தெரிந்து கொள்வோம் தொழில்நுட்பம்
    கூகுள் Pixel 7, Pixel 6a ஸ்மார்ட்போனுக்கு ஃபிளிப்கார்ட்டின் செம்ம தள்ளுபடி! கூகுள்
    இந்தியாவின் அம்பானி, டாடா, பிர்லா போன்றோர் வசிக்கும் இடங்கள் எங்கே எனத்தெரியுமா? டாடா

    உலகம்

    நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம் டெல்லி
    தம்பதியருக்கான மருத்துவ காப்பீடு ஒரே-பாலின தம்பதியருக்கும் வழங்கப்பட வேண்டும் தென் கொரியா
    சாதிய பாகுபாட்டை தடை செய்த அமெரிக்காவின் முதல் நகரம் இந்தியா
    பிபிசிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025