NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஹமாஸ் எதற்காக இஸ்ரேலை எதிர்த்து போரிடுகிறது? யார் அதற்கு உதவுகிறார்கள்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹமாஸ் எதற்காக இஸ்ரேலை எதிர்த்து போரிடுகிறது? யார் அதற்கு உதவுகிறார்கள்?
    ஹரகத் அல்-முகவாமா அல்-இஸ்லாமியா என்பதன் சுருக்கமே 'ஹமாஸ்' ஆகும்.

    ஹமாஸ் எதற்காக இஸ்ரேலை எதிர்த்து போரிடுகிறது? யார் அதற்கு உதவுகிறார்கள்?

    எழுதியவர் Sindhuja SM
    Oct 08, 2023
    06:04 pm

    செய்தி முன்னோட்டம்

    இஸ்ரேல் மீது நேற்று அதிகாலை திடீரென்று பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

    அந்த தாக்குதல் ஆரம்பித்து 24 மணி நேரத்துக்கு மேல் ஆகியும், தெற்கு இஸ்ரேலின் பல பகுதிகளில் இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது.

    சமீபத்திய தகவல்களின்படி, இந்த மோதலால் 400 இஸ்ரேலியர்களும் 313 பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

    எனவே, மொத்த இறப்பு எண்ணிக்கை 713ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், பாலஸ்தீன பயங்கரவாத குழுவான ஹமாஸின் வரலாறு, சித்தாந்தம் மற்றும் கோரிக்கைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

    பிஸேஜ்க

    பயங்கரவாத குழுவான ஹமாஸ் எப்படி தொடங்கியது?

    இந்த அமைப்பு 1987 ஆம் ஆண்டு அஹ்மத் யாசின் மற்றும் அப்தெல் அஜிஸ் அல்-ராண்டிசி ஆகியோரால் எகிப்திய முஸ்லிம் சகோதரத்துவத்தின் ஒரு அங்கமாக நிறுவப்பட்டது.

    ஹரகத் அல்-முகவாமா அல்-இஸ்லாமியா என்பதன் சுருக்கமே 'ஹமாஸ்' ஆகும். இதற்கு இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம் என்று பொருள்.

    பாலஸ்தீன மக்களுக்கு சுதந்திரம் வாங்கி தருவதும், இஸ்ரேல், மேற்குக் கரை மற்றும் காசா ஆகிய பகுதிகளை இஸ்ரேலில் இருந்து தனியாக பிரித்து இஸ்லாமிய அரசை நிறுவுவதும் தான் தங்களது இலக்கு என்று , ஹமாஸ் 1988ஆம் ஆண்டில் அறிவித்தது.

    டக்ஜ்வ்க்

    ஹமாஸ் அமைப்பு நடத்தும் தாக்குதல்களுக்கு யார் உதவுகிறார்கள்?

    1967க்கு முன்பு இஸ்ரேலின் எல்லை எந்த அளவு இருந்ததோ அந்த எல்லைக்குள் இஸ்ரேல் நாடு இருந்து கொண்டு, பாலஸ்தீனிய அகதிகளை அவர்களது வீடுகளுக்கு திரும்ப அனுமதித்தால், தாங்கள் போரை நிறுத்த தயாராக இருப்பதாக முன்பு ஹமாஸ் கூறியது.

    ஆனால், ஹமாஸ் தங்களை ஏமாற்ற முயற்சிப்பதாக கூறிய இஸ்ரேல், ஹமாஸின் இந்த சமாதான பேச்சு வார்த்தையை மறுத்துவிட்டது.

    ஈரான், சிரியா ஆகிய நாடுகளும் லெபனானில் உள்ள இஸ்லாமியக் குழுவான ஹெஸ்பொல்லாவும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு பெரும் உதவிகளை செய்து ஒரு குழுவாக செயல்பட்டு வருகின்றன.

    அமெரிக்க கொள்கையை எதிர்ப்பதுதான் இந்த குழுவின் முக்கிய கொள்கையாகும்.

    ஈரான் வெளிப்படையாக ஹமாஸ் அமைப்பு நடத்தும் தாக்குதல்களுக்கு நேற்று ஆதரவு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    டக்லஜ்வ்க்

    ஹமாஸ் அமைப்பு ஆதரவளிக்கும் நாடுகள் 

    பாலஸ்தீனப் பகுதிகளிலும் மத்திய கிழக்கின் பிற நாடுகளிலும் ஹமாஸுக்கு ஆதரவாளர்கள் உள்ளனர்.

    ஈரான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் ஹமாஸ் நடத்தி வரும் தாக்குதல்களை ஆதரித்துள்ளன.

    இந்த போருக்கு இஸ்ரேல்தான் பொறுப்பு என்று கத்தார் கூறியுள்ளது.

    அரபு லீக் மற்றும் ஜோர்டான், இஸ்ரேலின் கொள்கைகள் தான் இந்த மோதலுக்கு காரணம் என்று கூறியுள்ளன.

    எகிப்து, மொராக்கோ மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் மோதல்களை கட்டுப்படுத்த அழைப்பு விடுத்துள்ளன.

    இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், கனடா, எகிப்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.

    2018இல், ஹமாஸின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஐநா பொதுச் சபையில் வாக்களிக்கப்பட்டது.

    டொய்ஜ்வ்க்

    இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் எப்படி பிரச்சனை ஆரம்பித்தது?

    1948ஆம் ஆண்டு வரை பாலஸ்தீனம் என்ற நாட்டில் பெரும்பான்மையாக அரேபியர்கள் இருந்தார்கள். அதுபோக, சிறுபான்மை சமூகமாக யூதர்கள் இருந்தனர்.

    பிரிட்டன் கட்டுப்பாட்டில் பாலஸ்தீனம் இருந்த போது, பாலஸ்தீனத்தை யூதர்களுக்கான நாடாக மாற்ற பிரிட்டன் முயற்சித்தது. அதனால் அரேபியர்கள் மற்றும் யூதர்களுக்கு இடையே பிரச்சனை ஆரம்பித்தது.

    இரண்டாம் உலகப்போரின் போது, ஐரோப்பாவில் இருந்து தப்பி வந்த யூதர்கள் பாலஸ்தீனத்திற்கு குடி பெயர்ந்தனர். இதனால், யூதர்களின் எண்ணிக்கையும் அந்நாட்டில் அதிகரிக்க தொடங்கியது.

    இந்த நேரத்தில் தான் பிரிட்டனின் உதவியுடன் இஸ்ரேல் என்ற நாட்டை அந்நாட்டில் இருந்த யூதர்கள் நிறுவினர்.

    அந்த சமயத்தில் நடத்த போரில் பாலஸ்தீனர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் தற்போது பல்வேறு பகுதிகளில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    உலகம்
    ஈரான்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இஸ்ரேல்

    குழந்தைக்கு டிக்கெட் இல்லாததால் குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோர் உலகம்
    இஸ்ரேலில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு உலக செய்திகள்
    2,000 கிமீ தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை: ஈரான் அதிரடி உலகம்
    5,000 ராக்கெட்டுகளை ஏவிய காசா: போர் நிலையை அறிவித்தது இஸ்ரேல்  உலகம்

    உலகம்

    'கனடாவுக்கு அல்ல, இந்தியாவுக்கு தான் அமெரிக்கா ஆதரவு தரும்': அமெரிக்க அதிகாரி  அமெரிக்கா
    'காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்': ஐநா சபையில் வைத்து பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா இந்தியா
    கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதியை ஏன் இந்தியா தேடி வந்தது? இந்தியா
    1 கோடி பாகிஸ்தானியர்கள் வறுமையில் வாடுகிறார்கள்: உலக வங்கி  பாகிஸ்தான்

    ஈரான்

    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு உலகம்
    ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான் உலகம்
    ஹிஜாப் அணியாததற்காக ஆஸ்கர் விருது பெற்ற நடிகைக் கைது! உலகம்
    சீனா-பிரச்சனைகளுக்கு நடுவே ஈரான் அதிபரை சந்தித்தார் சீன அதிபர் உலகம்

    உலக செய்திகள்

    லிபியா: நாட்டையே திருப்பி போட்ட வெள்ளத்தால் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம் லிபியா
    பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்கள்; எச்சரிக்கை மணி எழுப்பும் அமெரிக்க விஞ்ஞானிகள் பாகிஸ்தான்
    உலகளவில் உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும் 700 மில்லியன் மக்கள் உலகம்
    உலகின் தலைசிறந்த 100 நிறுவனங்களின் பட்டியலில் ஒரே ஒரு இந்திய நிறுவனத்திற்கு இடம் இன்ஃபோசிஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025