NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 2100ஆம் ஆண்டிற்குள் 80% பென்குயின்கள் அழியும் அபாயம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    2100ஆம் ஆண்டிற்குள் 80% பென்குயின்கள் அழியும் அபாயம்!
    2100ஆம் ஆண்டிற்குள் 60% உயிரினங்களும் 80% எம்பரர் பென்குயின்களும் அழிந்து விடும் அபாயம்!(படம்: The Guardian)

    2100ஆம் ஆண்டிற்குள் 80% பென்குயின்கள் அழியும் அபாயம்!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 24, 2022
    11:55 pm

    செய்தி முன்னோட்டம்

    புவி வெப்பமயமாதலால் உலக பனிப்பாறைகள் கரைந்து கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதாக பல ஆய்வுகள் ஏற்கனவே தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், இந்த சூழல் இப்படியே தொடர்ந்தால், இந்த நூற்றாண்டு முடிவதற்குள் அண்டார்டிகாவில் வாழும் 80% எம்பரர் பென்குயின்கள் அழிந்துவிடும் என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

    12நாடுகளை சேர்ந்த 28 நிறுவனங்களின் விஞ்ஞானிகளால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வின் படி, 2100ஆம் ஆண்டிற்குள் 60% உயிரினங்களும் 80% எம்பரர் பென்குயின்களும் அழிந்து விடுமாம்.

    இந்த ஆய்வு அறிக்கையை 'PLOS பயாலஜி' என்ற இதழில் கடந்த வியாழக்கிழமை அன்று வெளியிட்டுள்ளனர்.

    அழிவை தடுக்க கிட்டத்தட்ட $1.92 பில்லியன் செலவாகும் என்றும் ஒரு வருடத்திற்கு $23 மில்லியன் செலவழிக்க வேண்டி இருக்கும் என்றும் இதில் கூறப்பட்டுள்ளது.

    24 Dec 2022

    ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் தகவல்கள்:

    "காலநிலை மாற்றத்தால் பென்குயின்களின் மரபணு மாற்றமடைந்துள்ளது, அவற்றின் இனப்பெருக்க சுழற்சியிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    இவை இப்படியே தொடர்ந்தால், 2100ஆம் ஆண்டிற்குள் 80% எம்பரர் பென்குயின்கள் அழிந்துவிடும்.

    மேலும், அண்டார்டிகாவில் உள்ள கடல் பறவைகள் மற்றும் உலர் மண் நூற்புழுக்களும் இதே ஆபத்தில் தான் இருக்கின்றன.

    அண்டரிக்காவில் அதிகம் மனிதர்கள் இல்லாததால், தீங்கு விளைவிக்கும் விஷயங்கள் கண்டத்திற்கு வெளியே இருந்து தான் வருகின்றன.

    பசுமை இல்ல வாயு, கார்பன் உமிழ்வு, கால நிலை மாற்றம் போன்றவையே இதற்கு முக்கிய காரணம்.

    1900ஆம் ஆண்டிற்கு பின், அண்டார்டிகாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 8 மடங்கு அதிகரித்துள்ளது. இதுவும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்." என்று இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக செய்திகள்
    உலகம்

    சமீபத்திய

    இஸ்ரோவின் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் திட்டம் தோல்வி; ஏவப்பட்ட சில நிமிடங்களில் EOS-09 மாயம் இஸ்ரோ
    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்

    உலக செய்திகள்

    தாத்தாவின் நினைவுகளைத் தேடி குன்னூர் வந்த உலக வங்கி நிபுணர்! இந்தியா
    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! பயனர் பாதுகாப்பு
    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட 86 வயது தம்பதி - நீண்ட நாள் கனவு நிறைவேறியது பயணம்

    உலகம்

    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு ஈரான்
    கடல், மணல், பனி மூன்றும் சங்கமிக்கும் ஒரு சொர்க்கம்! ஜப்பான் கடல்
    ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான் ஈரான்
    தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர்! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025