NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 2100ஆம் ஆண்டிற்குள் 80% பென்குயின்கள் அழியும் அபாயம்!
    உலகம்

    2100ஆம் ஆண்டிற்குள் 80% பென்குயின்கள் அழியும் அபாயம்!

    2100ஆம் ஆண்டிற்குள் 80% பென்குயின்கள் அழியும் அபாயம்!
    எழுதியவர் Sindhuja SM
    Dec 24, 2022, 11:55 pm 1 நிமிட வாசிப்பு
    2100ஆம் ஆண்டிற்குள் 80% பென்குயின்கள் அழியும் அபாயம்!
    2100ஆம் ஆண்டிற்குள் 60% உயிரினங்களும் 80% எம்பரர் பென்குயின்களும் அழிந்து விடும் அபாயம்!(படம்: The Guardian)

    புவி வெப்பமயமாதலால் உலக பனிப்பாறைகள் கரைந்து கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதாக பல ஆய்வுகள் ஏற்கனவே தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த சூழல் இப்படியே தொடர்ந்தால், இந்த நூற்றாண்டு முடிவதற்குள் அண்டார்டிகாவில் வாழும் 80% எம்பரர் பென்குயின்கள் அழிந்துவிடும் என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. 12நாடுகளை சேர்ந்த 28 நிறுவனங்களின் விஞ்ஞானிகளால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் படி, 2100ஆம் ஆண்டிற்குள் 60% உயிரினங்களும் 80% எம்பரர் பென்குயின்களும் அழிந்து விடுமாம். இந்த ஆய்வு அறிக்கையை 'PLOS பயாலஜி' என்ற இதழில் கடந்த வியாழக்கிழமை அன்று வெளியிட்டுள்ளனர். அழிவை தடுக்க கிட்டத்தட்ட $1.92 பில்லியன் செலவாகும் என்றும் ஒரு வருடத்திற்கு $23 மில்லியன் செலவழிக்க வேண்டி இருக்கும் என்றும் இதில் கூறப்பட்டுள்ளது.

    ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் தகவல்கள்:

    "காலநிலை மாற்றத்தால் பென்குயின்களின் மரபணு மாற்றமடைந்துள்ளது, அவற்றின் இனப்பெருக்க சுழற்சியிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவை இப்படியே தொடர்ந்தால், 2100ஆம் ஆண்டிற்குள் 80% எம்பரர் பென்குயின்கள் அழிந்துவிடும். மேலும், அண்டார்டிகாவில் உள்ள கடல் பறவைகள் மற்றும் உலர் மண் நூற்புழுக்களும் இதே ஆபத்தில் தான் இருக்கின்றன. அண்டரிக்காவில் அதிகம் மனிதர்கள் இல்லாததால், தீங்கு விளைவிக்கும் விஷயங்கள் கண்டத்திற்கு வெளியே இருந்து தான் வருகின்றன. பசுமை இல்ல வாயு, கார்பன் உமிழ்வு, கால நிலை மாற்றம் போன்றவையே இதற்கு முக்கிய காரணம். 1900ஆம் ஆண்டிற்கு பின், அண்டார்டிகாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 8 மடங்கு அதிகரித்துள்ளது. இதுவும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்." என்று இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : அர்ஜுன் டெண்டுல்கருக்கு பிளேயிங் 11'இல் வாய்ப்பு கிடைக்குமா? ரோஹித் சர்மா சொன்னது இது தான் ஐபிஎல் 2023
    ஓ.பன்னீர் செல்வம் தனிக்கட்சி துவங்குகிறாரா? என்ன செய்ய போகிறார்? ஓ.பன்னீர் செல்வம்
    "Idhu namma all'u!" : வலுவான ஆல்ரவுண்டர் காம்போவை வித்தியாசமாக அறிமுகப்படுத்திய சிஎஸ்கே சென்னை சூப்பர் கிங்ஸ்
    பெற்றோர்கள் இறப்பால் அனாதையான 2 வயது சிறுவன் அமெரிக்காவில் இருந்து மீட்கபடுவான்: தமிழக அரசு உறுதி இந்தியா

    உலகம்

    பிலிப்பைன்ஸில் சுட்டு கொலை செய்யப்பட்ட இந்திய தம்பதி பிலிப்பைன்ஸ்
    சியாட்டல்: சாதிய பாகுபாட்டைத் தடைசெய்யும் சட்டம் அமலுக்கு வந்தது அமெரிக்கா
    ராகுல் காந்தியின் வழக்கை அமெரிக்கா கவனித்து வருகிறது: அமெரிக்க அதிகாரி இந்தியா
    ஏழு வழக்குகளில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம் பாகிஸ்தான்

    உலக செய்திகள்

    மீண்டும் அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வடகொரியா வட கொரியா
    இதுவே காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கான கடைசி வாய்ப்பு: ஐ.நா.வின் காலநிலை அறிக்கை உலகம்
    குறைந்த விலைக்கு விற்கப்பட்ட கிரெடிட் சூயிஸ் நிறுவனம்: என்ன சொல்கிறார் உதய் கோடக் உலகம்
    மலை காடுகள் மிக வேகமாக அழிந்து வருகிறது: ஆய்வில் தகவல் உலகம்

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023