NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / '5 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து வெளியான தகவல் உண்மையல்ல': இஸ்ரேல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    '5 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து வெளியான தகவல் உண்மையல்ல': இஸ்ரேல் 
    இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா, அப்படி எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என்று தெரிவித்துள்ளது.

    '5 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து வெளியான தகவல் உண்மையல்ல': இஸ்ரேல் 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 19, 2023
    10:36 am

    செய்தி முன்னோட்டம்

    50 இஸ்ரேலிய பிணையகைதைகளை விடுவிப்பதற்காக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே 5 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகி இருப்பதாக நேற்று பல செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில், இது குறித்து பேசியிருக்கும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா, அப்படி எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என்று தெரிவித்துள்ளது.

    கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் குழு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் பிணைய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து, ஒரு மாதமாக ஹமாஸ் குழுவை அழிப்பதற்காக காசா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 10,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

    டஜலகவா

    'அப்படி எந்த ஒப்பந்தமும் இல்லை': பெஞ்சமின் நெதன்யாகு

    இந்நிலையில், நேற்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் விவாகரம் குறித்து இரு தரப்பினருடனும் கத்தார் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், அந்த பேச்சு வார்த்தையின் முடிவில் 5 நாள் போர் நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும் வாஷிங்டன் போஸ்ட் கூறியிருந்தது.

    அந்த ஒப்பந்தத்தின் படி, ஒரு நாளைக்கு 50 அல்லது அதற்கு மேற்பட்ட இஸ்ரேலிய பிணையகைதைகளை விடுவிக்கும் என்று அந்த செய்தியில் கூற பட்டிருந்தது.

    இந்நிலையில், இன்று இது குறித்து பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "இப்போதைக்கு அப்படி எந்த ஒப்பந்தமும் இல்லை. அனைத்து பணயக்கைதிகளையும் நாங்கள் திரும்பப் பெற விரும்புகிறோம். அதற்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்." என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ஹமாஸ்
    உலகம்

    சமீபத்திய

    அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; முககவசம் அணியுமாறு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல் கொரோனா
    துணைத் தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை
    இந்தியாவில் 3,000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்புகள்; தமிழகத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு? கொரோனா
    முகத்தில் ஐஸ் கட்டியை வைத்து ஒத்தடம் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் சரும பராமரிப்பு

    இஸ்ரேல்

    'போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை' - இஸ்ரேல் பிரதமர் உறுதி  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பாலஸ்தீனிய அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ₹101.50 உயர்வு சென்னை
    ஐநா மனித உரிமைகள் அமைப்பின் நியூயார்க் அலுவலகத்தின் இயக்குநர் ராஜினாமா இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேலை நீக்கிய சீன நிறுவனங்கள்  சீனா
    இஸ்ரேல் போரினால் காசாவில் சிக்கி இருந்த வெளிநாட்டவர்கள் எகிப்து வழியே வெளியேற்றம் இஸ்ரேல்
    அகதிகள் முகாம் மீதான இஸ்ரேல் தாக்குதல் போர் குற்றத்திற்கு சமமானது இஸ்ரேல்
    இஸ்ரேலி பெண்கள் மற்றும் குழந்தைகளை கொன்றதாக ஒப்புக்கொண்ட ஹமாஸ் வீரர் இஸ்ரேல்

    ஹமாஸ்

    எரிபொருள் பற்றாக்குறை எதிரொலி- காசாவில் உள்ள ஐநா அமைப்பு சில மணி நேரங்களில் மூடப்படலாம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    நாடே பற்றி எரிகிறது, யாயிர் நெதன்யாகு-வை காணோம்; யார் அவர்? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலுக்கு, இந்தியாவில் நடைபெற்ற ஜி20 மாநாடு தான் காரணம்: அமெரிக்க அதிபர்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல் தாக்குதலில் கிட்டத்தட்ட 50 பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிக்கை இஸ்ரேல்

    உலகம்

    காசா பகுதி மீதான தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்  இஸ்ரேல்
    கஜகஸ்தான் சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து: 32 பேர் பலி, 18 பேர் மாயம்  விபத்து
    இஸ்ரேலுக்கு எதிர்ப்பு: ரஷ்ய விமான நிலையத்திற்குள் புகுந்து  'அல்லாஹு அக்பர்' என்று கோஷமிட்டபடி அட்டகாசம் செய்த போராட்டக்காரர்கள்  இஸ்ரேல்
    இந்தியர்கள் விசா இல்லாமலேயே தாய்லாந்துக்கு செல்லலாம்: சுற்றுலா பயணிகளை ஈர்க்க புதிய நடவடிக்கை தாய்லாந்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025