NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்தியாவின் பக்கம் தான் நியாயம் இருக்கு; பாகிஸ்தானுக்கு ஆதரவான அறிக்கையை திரும்பப் பெற்றது கொலம்பியா
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் பக்கம் தான் நியாயம் இருக்கு; பாகிஸ்தானுக்கு ஆதரவான அறிக்கையை திரும்பப் பெற்றது கொலம்பியா
    பாகிஸ்தானுக்கு ஆதரவான அறிக்கையை திரும்பப் பெற்றது கொலம்பியா

    இந்தியாவின் பக்கம் தான் நியாயம் இருக்கு; பாகிஸ்தானுக்கு ஆதரவான அறிக்கையை திரும்பப் பெற்றது கொலம்பியா

    எழுதியவர் Sekar Chinnappan
    May 31, 2025
    09:36 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவிற்கு கிடைத்த ராஜதந்திர வெற்றியாக, இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இரங்கல் தெரிவித்த அறிக்கையை கொலம்பியா அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றது.

    ஆரம்பத்தில், குறிப்பாக பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது.

    இதில் தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தது.

    இது இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், லத்தீன் அமெரிக்காவிற்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவிற்குத் தலைமை தாங்கும் காங்கிரஸ் எம்பி சசி தரூர்,கொலம்பியா தலைநகர் போகோட்டாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது இந்தப் பிரச்சினையை எழுப்பினார்.

    விமர்சனம்

    கொலம்பியாவில் வைத்தே விமர்சனம் செய்த இந்திய பிரதிநிதிகள்

    பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பவர்களுக்கும் இடையில் வேறுபடுத்திப் பார்க்கத் தவறிவிட்டதாக வலியுறுத்தி, கொலம்பிய நாட்டின் பாகிஸ்தானுக்கு ஆதரவான இரங்கல் அறிக்கையை தரூர் விமர்சித்தார்.

    பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச பதில்களில் தெளிவு தேவை என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

    இதன்பின்னர் கொலம்பியாவின் இரண்டாவது பிரதிநிதிகள் ஆணையத்தின் தலைவர் அலெஜான்ட்ரோ டோரோ மற்றும் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ரோசா யோலண்டா வில்லாவிசென்சியோவுடன் இந்தியக் குழு உயர் மட்டக் கூட்டங்களை நடத்திய பின்னர் கொலம்பியா பாகிஸ்தானுக்கு ஆதரவான அறிக்கையை திரும்பப் பெற்றது.

    கொலம்பியா தனது முந்தைய கருத்துக்களை வாபஸ் பெற்றதாகவும், இந்தியாவின் நிலைப்பாட்டைப் பற்றிய நாட்டின் புரிதலில் திருப்தி தெரிவித்ததாகவும் தரூர் உறுதிப்படுத்தினார்.

    ஆதரவு

    இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு

    இந்தியாவின் இறையாண்மைக்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கும் கொலம்பியாவின் ஆதரவை இந்திய பிரதிநிதிகளுக்கு வில்லாவிசென்சியோ உறுதியளித்தார்.

    ஜம்மு காஷ்மீர் மோதல் மற்றும் தொடர்புடைய முன்னேற்றங்கள் குறித்து இந்தியா பகிர்ந்து கொண்ட விரிவான சூழலை அவர் ஒப்புக்கொண்டார்.

    பின்னர் சமூக ஊடகங்களில் தரூர் இந்த முடிவை மீண்டும் உறுதிப்படுத்தினார், கொலம்பியாவின் திருத்தப்பட்ட நிலைப்பாடு மற்றும் இராஜதந்திர ஒத்துழைப்பைப் பாராட்டினார்.

    வட மற்றும் தென் அமெரிக்கா முழுவதும் ஒரு பெரிய அளவிலான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உலகளாவிய நிலைப்பாட்டை வலுப்படுத்துவதை இந்திய பிரதிநிதிகளின் பயணம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

    விரைவில் பிரேசில் மற்றும் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ள உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆபரேஷன் சிந்தூர்
    இந்தியா
    பாகிஸ்தான்
    உலகம்

    சமீபத்திய

    இந்தியாவின் பக்கம் தான் நியாயம் இருக்கு; பாகிஸ்தானுக்கு ஆதரவான அறிக்கையை திரும்பப் பெற்றது கொலம்பியா ஆபரேஷன் சிந்தூர்
    ஐபிஎல் 2025: பிளேஆஃப் சுற்றில் 11 ஆண்டு கால சாதனையை கூட்டாக முறியடித்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் 2025
    தமிழ் திரைப்படங்கள் மீதான உள்ளூர் பொழுதுபோக்கு வரி 4% ஆகக் குறைப்பு; தமிழக அரசு உத்தரவு கோலிவுட்
    புவி வெப்பமடைவதால் பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு; ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல் புற்றுநோய்

    ஆபரேஷன் சிந்தூர்

    சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்  சென்னை
    பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் அரசு அதிகாரி மரணம் ஜம்மு காஷ்மீர்
    ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது; இந்திய விமானப்படை எக்ஸ் தளத்தில் அறிவிப்பு விமானப்படை
    ஆப் சிந்தூரில், கராச்சியைத் தாக்க இந்திய கடற்படை தயாராக இருந்தது: துணை அட்மிரல் இந்தியா

    இந்தியா

    இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த ISI திட்டமா? சமயத்தில் முறியடித்த டெல்லி காவல்துறை ஐஎஸ்ஐ
    ஒரு சிக்கன் நெக்கில் கைவைத்தால் இரண்டு சிக்கன் நெக் பறிபோகும்; பங்களாதேஷுக்கு அசாம் முதல்வர் எச்சரிக்கை பங்களாதேஷ்
    பயங்கரவாதத்தை நிறுத்த பாகிஸ்தானுக்கு துருக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்; இந்தியா அறிவுறுத்தல் துருக்கி
    அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் மேல் விமானங்கள் பறக்க தடை விதித்து NOTAM அறிவிப்பு அந்தமான் நிக்கோபார்

    பாகிஸ்தான்

    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான் ராணுவம்
    பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது யூடியூபர்
    பாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்; அசாதுதீன் ஒவைசி உறுதி இந்தியா

    உலகம்

    உலகளவில் 5 சிறந்த சைவ ஸ்ட்ரீட் ஃபுட்கள்! உணவு குறிப்புகள்
    போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு எப்போது? கலந்து கொள்ளும் முக்கிய உலக தலைவர்கள் யார்? போப் பிரான்சிஸ்
    ஈரானின் ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் ஏற்பட்ட பெரிய வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு ஈரான்
    உலகின் முதல் விந்தணு ஓட்டப் பந்தயத்தை நடத்தியது லாஸ் ஏஞ்சல்ஸ்; போட்டியை காண ஆர்வத்துடன் குவிந்த பார்வையாளர்கள் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025