NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சீனா-பிரச்சனைகளுக்கு நடுவே ஈரான் அதிபரை சந்தித்தார் சீன அதிபர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சீனா-பிரச்சனைகளுக்கு நடுவே ஈரான் அதிபரை சந்தித்தார் சீன அதிபர்
    அமைதியான காரணங்களுக்காக அணுசக்தியை மேலும் மேம்படுத்துவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

    சீனா-பிரச்சனைகளுக்கு நடுவே ஈரான் அதிபரை சந்தித்தார் சீன அதிபர்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 14, 2023
    09:22 pm

    செய்தி முன்னோட்டம்

    சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் இன்று(பிப் 14) ஈரான் அணுசக்தி பிரச்சினையை விரைவாக தீர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் என்றும் இஸ்லாமிய குடியரசின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதில் தனது ஆதரவை வெளிப்படுத்தினார் என்றும் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

    ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் சீனா தொடர்ந்து "ஆக்கப்பூர்வமாக பங்கேற்கும்" என்று ஜி ஜின்பிங் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை சந்தித்த போது தெரிவித்தார்.

    2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம் ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தை மட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல் அது சர்வதேச தடைகளை நீக்குவதற்கு ஈடாக ஈரானின் அணு ஆயுதங்கள் தயாரிப்பைக் கடினமாக்கியது.

    தற்போது, அமைதியான காரணங்களுக்காக அணுசக்தியை மேலும் மேம்படுத்துவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

    சீனா

    பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா

    ஆனால், 2018இல் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த போதுமான அளவு அது செய்யவில்லை என்று கூறி, ஒப்பந்தத்தை கைவிட்டு, பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதித்தார்.

    இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியதற்காக சீனா அமெரிக்காவை விமர்சித்தது மட்டுமல்லாமல் ஒப்பந்தத்தை புதுப்பிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

    செப்டம்பரில், சீனாவில் இருக்கும் 5 நிறுவனங்கள் உட்பட ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்தது.

    ஈரான் தொடர்ந்து தனது அணுசக்தித் திட்டத்தை விரைவுபடுத்தும் வரை ஈரானின் எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் விற்பனை மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்காது என்று அமெரிக்க அரசு கூறி இருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரான்
    சீனா
    உலகம்

    சமீபத்திய

    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்

    ஈரான்

    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு உலகம்
    ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான் உலகம்
    ஹிஜாப் அணியாததற்காக ஆஸ்கர் விருது பெற்ற நடிகைக் கைது! உலகம்

    சீனா

    இந்தியாவுக்குள் நுழைந்த புதிய வகை 'பிஎப்7' கொரோனா-3 பேருக்கு தொற்று உறுதி கொரோனா
    இமயமலை தங்கத்தைத் திருட இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீனர்கள்! இந்தியா-சீனா மோதல்
    "இந்தியாவுடன் சமாதானம் பேச தயார்": வெள்ளைக்கொடி காட்டும் சீனா! இந்தியா
    ஜப்பானில் ஒரே நாளில் 371 பேர் மரணம்-சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு கொரோனா

    உலகம்

    ஜப்பானில் சுற்றுலா செல்லவிருக்கிறீர்களா? மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்! சுற்றுலா
    துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 8 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்புகள் உலக சுகாதார நிறுவனம்
    துருக்கிக்கு அனுப்பப்பட்ட நாய் படையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை இந்தியா
    30 நிமிஷத்தில் 1300 பேரை பணிநீக்கம் செய்த Zoom நிறுவனம்! ஆட்குறைப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025