NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக சைபர் கண்காணிப்பு; இந்தியா மீது கனடா குற்றச்சாட்டு
    அடுத்த செய்திக் கட்டுரை
    காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக சைபர் கண்காணிப்பு; இந்தியா மீது கனடா குற்றச்சாட்டு
    காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக சைபர் கண்காணிப்பை மேற்கொள்ளும் இந்தியா

    காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக சைபர் கண்காணிப்பு; இந்தியா மீது கனடா குற்றச்சாட்டு

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 01, 2024
    07:46 am

    செய்தி முன்னோட்டம்

    கனடாவின் தகவல் தொடர்பு பாதுகாப்பு அமைப்பு (சிஎஸ்இ), இந்தியா வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகளை கண்காணிக்க சைபர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுவது குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.

    கனேடிய நெட்வொர்க்குகளுக்கு எதிரான இணைய நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்துவதாகவும் அதில் குற்றம் சாட்டியுள்ளது.

    வெளிநாடுகளில் உள்ள பிரிவினைவாதிகளைக் கண்காணிக்க இந்தியா சைபர் கருவிகளைப் பயன்படுத்தியுள்ளதாக அதன் அறிக்கை கூறுகிறது.

    குறிப்பாக கனடாவின் மக்கள் தொகையில் கணிசமான அங்கம் வகிக்கும் சீக்கிய சமூகத்தில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகளை குறிவைத்து இந்தியா செயல்படுவதாக தெரிவித்துள்ளது.

    முன்னதாக, 2023இல் காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜரின் கொலையில் இந்தியத் தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியதை அடுத்து பதட்டங்கள் அதிகரித்தன.

    அமித் ஷா

    இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது குற்றச்சாட்டு

    இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, நிஜ்ஜாரின் கொலை உட்பட, காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக உளவுத்துறை மற்றும் மிரட்டல் தந்திரங்களை மேற்கொள்ள அனுமதித்ததாக கனடா குற்றம் சாட்டியுள்ளது.

    அந்நாட்டின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் டேவிட் மாரிசன் உறுதிப்படுத்திய இந்தக் குற்றச்சாட்டுகள், பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகத்தில் இந்தியாவின் நடவடிக்கைகள் உயர் மட்டத்தை எட்டுகின்றன என்பதைக் காட்டுகின்றன.

    சிஎஸ்இ தலைவர் கரோலின் சேவியர் இந்தியாவை வளர்ந்து வரும் சைபர் அச்சுறுத்தல் செயற்பாட்டாளர் என்று விவரித்தார்.

    கனடாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியா சார்பு ஹேக்டிவிஸ்ட் குழு, கனேடிய அரசாங்க தளங்களை முடக்கும் DDoS செயல்பாடுகள் உட்பட சைபர் தாக்குதல்களைத் தொடங்கியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    கனடா
    இந்தியா
    சைபர் கிரைம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    காலிஸ்தான் பயங்கரவாதியின் மிரட்டலை அடுத்து, விமானங்களுக்கு பாதுகாப்பு அதிகரித்த கனடா ஏர் இந்தியா
    பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி சுட்டுக்கொலை தீவிரவாதிகள்
    கனடாவில் தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைத்த காலிஸ்தானிகள் கனடா
    நிஜ்ஜார் கொலையில் கனடாவிடம் ஆதாரம் கேட்கும் ஜெய்சங்கர் இந்தியா

    கனடா

    கனடா தேர்தலில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலையிட முயன்றன: கனடா உளவு நிறுவனம் தேர்தல்
    கனடா தேர்தல்களில் இந்தியா தலையிட்டதாக கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்தனர் கனேடிய அதிகாரிகள்  இந்தியா
    கனேடிய தேர்தலில் சீனா தலையிட முயன்றது ஆனால் முடிவுகளை அதன் தலையீட்டால் மாற்ற முடியவில்லை: ட்ரூடோ சீனா
    கனடாவில் 24 வயது இந்திய மாணவர் சுட்டுக் கொலை உலகம்

    இந்தியா

    விண்வெளி ஸ்டார்ட்அப்களுக்கு ரூ.1,000 கோடி வென்ச்சர் கேபிடல் ஃபண்ட்; மத்திய அமைச்சரவை ஒப்புதல் மத்திய அரசு
    இந்தியா ஒரு முக்கிய ஏஐ சந்தையாக மாறும்: NVIDIA உச்சிமாநாட்டில் முகேஷ் அம்பானி பேச்சு செயற்கை நுண்ணறிவு
    தொடரை இழந்தாலும், இரண்டாவது போட்டியில் வலுவான ஜெர்மனியை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி இந்திய ஹாக்கி அணி
    கனடா இந்தியாவை 'முதுகில் குத்தியது': கனடாவால் வெளியேற்றப்பட்ட இந்திய தூதர் குற்றசாட்டு கனடா

    சைபர் கிரைம்

    சைபர் மோசடிகள் இருந்து பாதுகாத்துக் கொள்ள இலவச கருவிகளை வழங்கியிருக்கும் இந்திய அரசு சைபர் பாதுகாப்பு
    இந்தியாவில் சைபர் பாதுகாப்பில் குறைந்த முதலீடுகள், அதிகரிக்கும் சைபர் தாக்குதல் சைபர் பாதுகாப்பு
    IIT, NITகளை குறி வைத்து, சைபர் தாக்குதல் நிகழ்த்தும் பாகிஸ்தான் ஹேக்கர்கள் குழு சைபர் பாதுகாப்பு
    ராணுவ வீரர் என்னும் பெயரில் க்யூஆர் கோடு மூலம் நூதன மோசடி - விழிப்புணர்வு வீடியோ  காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025