NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஐநா கூட்டத்தில் இந்தியாவின் CAA சட்டத்தை விமர்சித்த பாகிஸ்தான்: இந்தியா பதிலடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐநா கூட்டத்தில் இந்தியாவின் CAA சட்டத்தை விமர்சித்த பாகிஸ்தான்: இந்தியா பதிலடி 

    ஐநா கூட்டத்தில் இந்தியாவின் CAA சட்டத்தை விமர்சித்த பாகிஸ்தான்: இந்தியா பதிலடி 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 16, 2024
    05:09 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐநா பொதுச் சபையில் கருத்து தெரிவிக்கும் போது பாகிஸ்தான் தூதுவர், அயோத்தி ராமர் கோயில் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து குறிப்பிட்டது பெரும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

    இஸ்லாமிய-வெறுப்பு கண்ணோட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் ஐநாவில் தாக்கல் செய்தது.

    அந்த தீர்மானத்தை 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா பொதுச் சபை ஏற்றுக்கொண்டது. இந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துவிட்டது என்பதும் குறிபிடத்தக்கது.

    இந்நிலையில், இஸ்லாமிய-வெறுப்பு கண்ணோட்டம் குறித்து பேசிய பாகிஸ்தான் தூதுவர் முனீர் அக்ரம், இந்தியா புதிதாக அமல்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து குறிப்பிட்டார்.

    குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்நத இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமையை வழங்குகிறது.

    இந்தியா 

    "உடைந்த ரெகார்ட்டு": பாகிஸ்தானை கிழித்து தொங்கவிட்ட இந்தியா 

    அண்டை நாட்டில் துப்புறுத்தப்படும் சிறுபான்மையினர்களான இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால், இந்த சட்டத்தின் மூலம் இலங்கை தமிழர்கள் பயனடைய முடியாது.

    இந்நிலையில், இந்த சட்டத்தை பாகிஸ்தான் தூதுவர் குறிப்பிட்டதற்கு பதிலடி கொடுத்த இந்திய தூதுவர் ருசிரா காம்போஜ, "எனது நாடு தொடர்பான விஷயங்களில் இந்தக் குழுவின் வரையறுக்கப்பட்ட மற்றும் தவறான கண்ணோட்டத்தைக் காண்பது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது. இந்த தூதுக்குழு(பாகிஸ்தான்) உடைந்த ரெகார்ட்டை போலவே சொன்னதையே சொல்லி கொண்டிருக்கிறது. உலகம் முன்னேறும் போது அவர்களது பார்வை மட்டும் சோகமாக அப்படியே தேங்கி நிற்கிறது." என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    இந்தியா

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு
    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்

    பாகிஸ்தான்

    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் கிரிக்கெட்
    உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் பிப்ரவரி 8ல் தேர்தலை அறிவித்தது பாகிஸ்தான் நீதிமன்றம்
    நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கராச்சி மருத்துவமனையில் அனுமதி; விஷம் வைத்து கொல்ல சதி என தகவல் தீவிரவாதிகள்
    தாவூத் இப்ராஹிம் உடல்நலனை பற்றி சோட்டா ஷகீல் வெளியிட்ட தகவல் தாவூத் இப்ராஹிம்

    இந்தியா

    ஃபெராரியின் முதல் எஸ்யூவி இந்தியாவில் அதிகாரபூர்வமாக வெளியானது எஸ்யூவி
    மகாராஷ்டிராவில் 18 இடங்களில் போட்டியிட இருக்கும் காங்கிரஸ் மகாராஷ்டிரா
    பெங்களூரு குண்டலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் காயம் பெங்களூர்
    25 தனியார் துறை நிபுணர்களை முக்கிய பதவிகளில் சேர்க்க மோடி அரசு முடிவு  மத்திய அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025