NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஆங் சான் சூகிக்கு மேலும் 7 வருடம் சிறை தண்டனையை நீடித்த ராணுவ அரசு!
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆங் சான் சூகிக்கு மேலும் 7 வருடம் சிறை தண்டனையை நீடித்த ராணுவ அரசு!
    மியான்மர் ராணுவ நீதிமன்றம் ஆங் சான் சூகிக்கு மேலும் 7ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது(படம்: BBC)

    ஆங் சான் சூகிக்கு மேலும் 7 வருடம் சிறை தண்டனையை நீடித்த ராணுவ அரசு!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 31, 2022
    03:50 pm

    செய்தி முன்னோட்டம்

    மியான்மர் ராணுவ நீதிமன்றம் ஆங் சான் சூகிக்கு மேலும் 7ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, அவரது ஒட்டுமொத்த சிறைத் தண்டனையை 33ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது.

    ஜனநாயக முறையில் தேர்ந்தேகப்பட்ட ஆங் சான் சூகி அரசின் ஆட்சி பிப்ரவரி 2021இல் கவிழ்க்கப்பட்டது.

    தற்போது, அவரது ஆட்சியை அகற்றிய ராணுவத்தினர் மியான்மரை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

    ஆட்சி கவிழ்க்கப்பட்டதில் இருந்து, ஆங் சான் சூகியின் மீது 19 வழக்குகள் போடப்பட்டிருக்கிறது. இந்த குற்றசாட்டுகள் எல்லாம் போலியானது என்று உரிமைக் குழுக்கள் கூறுகின்றன.

    ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து இராணுவ ஆட்சிக் குழுவால் கைது செய்யப்பட்ட 16,600க்கும் மேற்பட்டவர்கள் இன்னும் சிறையில் இருப்பதாக கூறப்படுகிறது.

    கடந்த வாரம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆங் சான் சூகியை விடுதலை செய்ய கோரியது.

    சிறை

    77 வயதாகும் முன்னாள் தலைவருக்கு 33 ஆண்டுகள் சிறை!

    இன்று(டிச:30) ஆங் சான் சூகியின் மீது சுமத்தப்பட்ட கடைசி 5 வழக்குகளின் விசாரணை நடைபெற்றது.

    இந்த விசாரணையில், அரசாங்க அமைச்சருக்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுக்கும் போது அவர் விதிமுறைகளை பின்பற்றாததால், அவர் ஊழல் செய்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    சுமத்தப்பட்ட 14 வெவ்வேறு குற்றங்களுக்காக அவர் ஏற்கனவே தண்டிக்கப்பட்டுள்ளார்.

    நோபல் அமைதி பரிசு வென்ற 77 வயது ஆங் சான் சூகியை ராணுவ அரசு வீட்டு காவலில் வைத்திருக்கிறது.

    தற்போது, அவரது விசாரணைகள் எல்லாம் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடத்தப்படுகிறது.

    விசாரணை அறைக்குள் ஊடகங்கள் உட்பட யாருக்கும் அனுமதி கிடையாது.

    அவரது வழக்கறிஞர்கள் பத்திரிகையாளர்களுடன் பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஆங் சான் சூகி மறுத்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    உலகம்

    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு ஈரான்
    கடல், மணல், பனி மூன்றும் சங்கமிக்கும் ஒரு சொர்க்கம்! ஜப்பான் கடல்
    ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான் ஈரான்
    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025