NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஆங் சான் சூகிக்கு மேலும் 7 வருடம் சிறை தண்டனையை நீடித்த ராணுவ அரசு!
    உலகம்

    ஆங் சான் சூகிக்கு மேலும் 7 வருடம் சிறை தண்டனையை நீடித்த ராணுவ அரசு!

    ஆங் சான் சூகிக்கு மேலும் 7 வருடம் சிறை தண்டனையை நீடித்த ராணுவ அரசு!
    எழுதியவர் Sindhuja SM
    Dec 31, 2022, 03:50 pm 0 நிமிட வாசிப்பு
    ஆங் சான் சூகிக்கு மேலும் 7 வருடம் சிறை தண்டனையை நீடித்த ராணுவ அரசு!
    மியான்மர் ராணுவ நீதிமன்றம் ஆங் சான் சூகிக்கு மேலும் 7ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது(படம்: BBC)

    மியான்மர் ராணுவ நீதிமன்றம் ஆங் சான் சூகிக்கு மேலும் 7ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, அவரது ஒட்டுமொத்த சிறைத் தண்டனையை 33ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது. ஜனநாயக முறையில் தேர்ந்தேகப்பட்ட ஆங் சான் சூகி அரசின் ஆட்சி பிப்ரவரி 2021இல் கவிழ்க்கப்பட்டது. தற்போது, அவரது ஆட்சியை அகற்றிய ராணுவத்தினர் மியான்மரை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றனர். ஆட்சி கவிழ்க்கப்பட்டதில் இருந்து, ஆங் சான் சூகியின் மீது 19 வழக்குகள் போடப்பட்டிருக்கிறது. இந்த குற்றசாட்டுகள் எல்லாம் போலியானது என்று உரிமைக் குழுக்கள் கூறுகின்றன. ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து இராணுவ ஆட்சிக் குழுவால் கைது செய்யப்பட்ட 16,600க்கும் மேற்பட்டவர்கள் இன்னும் சிறையில் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த வாரம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆங் சான் சூகியை விடுதலை செய்ய கோரியது.

    77 வயதாகும் முன்னாள் தலைவருக்கு 33 ஆண்டுகள் சிறை!

    இன்று(டிச:30) ஆங் சான் சூகியின் மீது சுமத்தப்பட்ட கடைசி 5 வழக்குகளின் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில், அரசாங்க அமைச்சருக்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுக்கும் போது அவர் விதிமுறைகளை பின்பற்றாததால், அவர் ஊழல் செய்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சுமத்தப்பட்ட 14 வெவ்வேறு குற்றங்களுக்காக அவர் ஏற்கனவே தண்டிக்கப்பட்டுள்ளார். நோபல் அமைதி பரிசு வென்ற 77 வயது ஆங் சான் சூகியை ராணுவ அரசு வீட்டு காவலில் வைத்திருக்கிறது. தற்போது, அவரது விசாரணைகள் எல்லாம் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடத்தப்படுகிறது. விசாரணை அறைக்குள் ஊடகங்கள் உட்பட யாருக்கும் அனுமதி கிடையாது. அவரது வழக்கறிஞர்கள் பத்திரிகையாளர்களுடன் பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஆங் சான் சூகி மறுத்துள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    உலகம்

    சமீபத்திய

    PS5 ப்ளே ஸ்டேஷனின் விலையை அதிரடியாக குறைக்கும் சோனி நிறுவனம்! சோனி
    அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன? தொழில்நுட்பம்
    சென்னை மாநகராட்சி பட்ஜெட்-2023ன் முக்கிய அம்சங்கள் ஓர் பார்வை பட்ஜெட் 2023
    அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு அதிமுக

    உலகம்

    ஏழு வழக்குகளில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம் பாகிஸ்தான்
    டெல்லியில் மகளிர் கிராண்ட் பிரிக்ஸ் : பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி விலகிய சர்வதேச வீராங்கனைகள் விளையாட்டு
    சிலிக்கான் வங்கியின் வைப்புகளும் கடன்களும் முதல் குடிமக்கள் வங்கிக்கு விறக்கப்பட்டது அமெரிக்கா
    அமெரிக்காவில் பிறந்த சிறுவனை பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக தலாய் லாமா அறிவித்தார் அமெரிக்கா

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023