Page Loader
பிரதமர் மோடிக்கு சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கான உலகளாவிய அமைதி விருது; அமெரிக்க அமைப்பு அறிவிப்பு
பிரதமர் மோடிக்கு சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கான உலகளாவிய அமைதி விருது

பிரதமர் மோடிக்கு சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கான உலகளாவிய அமைதி விருது; அமெரிக்க அமைப்பு அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 23, 2024
09:49 am

செய்தி முன்னோட்டம்

இந்திய அமெரிக்க சிறுபான்மையினர் சங்கம் (AIAM), மேரிலாண்டில் உள்ள ஸ்லிகோ செவன்த் டே அட்வென்டிஸ்ட் தேவாலயத்தில் இந்திய அமெரிக்கர்களிடையே சிறுபான்மை சமூகங்களை ஒன்றிணைத்து ஆதரவளிக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு நடத்திய நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு டாக்டர். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் சிறுபான்மையினரை மேம்படுத்துவதற்கான உலகளாவிய அமைதி விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. உள்ளடக்கிய மேம்பாடு மற்றும் சிறுபான்மை நலனுக்கான பிரதமர் மோடியின் முயற்சிகளுக்காக AIAM மற்றும் வாஷிங்டன் அட்வென்டிஸ்ட் பல்கலைக்கழகம் இணைந்து இந்த விருதை அறிவித்துள்ளது. புகழ்பெற்ற சீக்கிய நன்கொடையாளர் ஜஸ்தீப் சிங், AIAM இன் நிறுவனர் மற்றும் தலைவராக நியமிக்கப்பட்டார்.

மதச்சார்பற்ற தன்மை

இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மை

சீக்கிய, கிறிஸ்தவ, முஸ்லீம், இந்து மற்றும் யூத சமூகங்களை உள்ளடக்கிய இந்த குழுவின் கூட்டத்தில் உரையாற்றிய ஜஸ்தீப் சிங், 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் மோடியின் பார்வையான விக்சித் பாரத்திற்கான AIAM உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். இந்த நிகழ்வு அனைவரையும் உள்ளடக்கிய சப்கா சாத், சப்கா விகாஸ் கொள்கையின் கீழ் மத நல்லிணக்கத்திற்கான இந்தியாவின் அணுகுமுறையை அடிக்கோடிட்டுக் காட்டியது. இதில் பங்கேற்றவர்கள் இந்தியாவின் மதச்சார்பற்ற கட்டமைப்பிற்கு சமத்துவம் மற்றும் உலகளாவிய அங்கீகாரத்தை பாராட்டினார். யூத இந்திய-அமெரிக்கரான நிசிம் ரூபின், உலக அமைதிக்கான முன்மாதிரியாக இந்தியாவின் மதங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை எடுத்துரைத்தார். நல்லிணக்கத்தை வளர்ப்பதிலும், அமெரிக்க பன்முக கலாச்சார அமைப்பில் இந்திய அமெரிக்கர்களின் பங்களிப்பை அதிகரிப்பதிலும் AIAM முக்கிய பங்கு வகிக்க உள்ளது.