NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / வட இந்தியாவையும் உலுக்கிய பூகம்பத்தால் பாகிஸ்தானில் 9 பேர் பலி
    வட இந்தியாவையும் உலுக்கிய பூகம்பத்தால் பாகிஸ்தானில் 9 பேர் பலி
    உலகம்

    வட இந்தியாவையும் உலுக்கிய பூகம்பத்தால் பாகிஸ்தானில் 9 பேர் பலி

    எழுதியவர் Sindhuja SM
    March 22, 2023 | 09:55 am 1 நிமிட வாசிப்பு
    வட இந்தியாவையும் உலுக்கிய பூகம்பத்தால் பாகிஸ்தானில் 9 பேர் பலி
    நிலநடுக்கத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்

    பாகிஸ்தானில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 9 பேர் உயிரிழந்ததாகவும், 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது. நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் இருந்ததாகவும், அதன் ஆழம் 180 கிலோமீட்டர் என்பதும் கணக்கிடப்பட்டுள்ளது. லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, குவெட்டா, பெஷாவர், கோஹாட், லக்கி மார்வாட் மற்றும் பாகிஸ்தானின் பிற பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. குஜ்ரன்வாலா, குஜராத், சியால்கோட், கோட் மோமின், மத் ரஞ்சா, சக்வால், கோஹாட் மற்றும் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதிகளிலும் வலுவான நடுக்கம் உணரப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நிலநடுக்கத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர், 160 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், மேலும் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தலைநகர் மருத்துவமனைகளில் அவசரநிலை அறிவிப்பு

    நிலநடுக்கத்தின் போது, ​​ராவல்பிண்டியின் சந்தைகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. எந்தவொரு சூழ்நிலையையும் கையாள விழிப்புடன் இருக்குமாறு பேரிடர் மேலாண்மை அதிகாரிகளை பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், மத்திய சுகாதார அமைச்சர் அப்துல் காதர் படேலின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய தலைநகர் மருத்துவமனைகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாததிலும் இஸ்லாமாபாத்தில் 6.3 ரிக்டர் அளவிலான ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச நில அதிர்வு மையத்தின்படி, பாகிஸ்தானைத் தவிர, இந்தியா, ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி, உத்திர பிரதேசம் உட்பட பல வட இந்திய மாநிலங்களிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    பாகிஸ்தான்
    ஆப்கானிஸ்தான்
    உலகம்

    பாகிஸ்தான்

    'நீதிமன்ற வளாகத்தில் என்னை கொலை செய்ய பார்த்தார்கள்': இம்ரான் கான் உலகம்
    இம்ரான் கான் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்: என்ன நடக்கிறது பாகிஸ்தானில் இம்ரான் கான்
    தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு: ஆப்கானிஸ்தானை மிஞ்சிய பாகிஸ்தான் தாலிபான்
    மார்ச் 18 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கும் இம்ரான் கான் உலகம்

    ஆப்கானிஸ்தான்

    இந்திய ஆன்லைன் படிப்பில் கலந்து கொள்ள இருக்கும் தாலிபான் உறுப்பினர்கள் உலகம்
    பெண்கள் பசுமையான உணவகங்களுக்கு செல்ல தடை: தலிபான் அரசு  உலகம்
    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை விட இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் குறைவு  இந்தியா
    ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை: தலிபான் உத்தரவு தாலிபான்

    உலகம்

    இன்று சர்வதேச தண்ணீர் தினம்: நிலையான நீர் மேலாண்மைக்கான வழிகள் பற்றி தெரிந்து கொள்வோம் ஐக்கிய இராச்சியம்
    912 வாரங்களுக்கு பிறகு டென்னிஸ் தரவரிசையில் பின்தங்கிய ரஃபேல் நடால் விளையாட்டு
    கொரோனா மிருங்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம்: ஆய்வில் தகவல் சீனா
    இதுவே காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கான கடைசி வாய்ப்பு: ஐ.நா.வின் காலநிலை அறிக்கை உலக செய்திகள்
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023