NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / வட இந்தியாவையும் உலுக்கிய பூகம்பத்தால் பாகிஸ்தானில் 9 பேர் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    வட இந்தியாவையும் உலுக்கிய பூகம்பத்தால் பாகிஸ்தானில் 9 பேர் பலி
    நிலநடுக்கத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்

    வட இந்தியாவையும் உலுக்கிய பூகம்பத்தால் பாகிஸ்தானில் 9 பேர் பலி

    எழுதியவர் Sindhuja SM
    Mar 22, 2023
    09:55 am

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 9 பேர் உயிரிழந்ததாகவும், 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

    நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் இருந்ததாகவும், அதன் ஆழம் 180 கிலோமீட்டர் என்பதும் கணக்கிடப்பட்டுள்ளது.

    லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, குவெட்டா, பெஷாவர், கோஹாட், லக்கி மார்வாட் மற்றும் பாகிஸ்தானின் பிற பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

    குஜ்ரன்வாலா, குஜராத், சியால்கோட், கோட் மோமின், மத் ரஞ்சா, சக்வால், கோஹாட் மற்றும் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதிகளிலும் வலுவான நடுக்கம் உணரப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    நிலநடுக்கத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர், 160 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், மேலும் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பாகிஸ்தான்

    தலைநகர் மருத்துவமனைகளில் அவசரநிலை அறிவிப்பு

    நிலநடுக்கத்தின் போது, ​​ராவல்பிண்டியின் சந்தைகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.

    எந்தவொரு சூழ்நிலையையும் கையாள விழிப்புடன் இருக்குமாறு பேரிடர் மேலாண்மை அதிகாரிகளை பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கேட்டுக் கொண்டுள்ளார்.

    மேலும், மத்திய சுகாதார அமைச்சர் அப்துல் காதர் படேலின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய தலைநகர் மருத்துவமனைகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு ஜனவரி மாததிலும் இஸ்லாமாபாத்தில் 6.3 ரிக்டர் அளவிலான ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    சர்வதேச நில அதிர்வு மையத்தின்படி, பாகிஸ்தானைத் தவிர, இந்தியா, ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி, உத்திர பிரதேசம் உட்பட பல வட இந்திய மாநிலங்களிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    ஆப்கானிஸ்தான்
    உலகம்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது இந்தியா
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா இந்தியா
    பஞ்சாப் அமைச்சராக பதவியேற்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ்! கிரிக்கெட்
    ஒரே நாளில் வரலாறு காணாத கரன்ஸி வீழ்ச்சியை கண்ட பாகிஸ்தான்! உலகம்

    ஆப்கானிஸ்தான்

    இந்திய ஆன்லைன் படிப்பில் கலந்து கொள்ள இருக்கும் தாலிபான் உறுப்பினர்கள் உலகம்

    உலகம்

    மின் கழிவுகளை ரோபோடிக் கையாக மாற்றிய கென்ய கண்டுபிடிப்பாளர்கள் உலக செய்திகள்
    கிரீஸிற்க்கு சுற்றுலா செல்கிறீர்களா? நீங்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் இதோ சுற்றுலா
    ஈரான் ஹிஜாப் போராட்டத்தில் கலந்துகொண்ட 22 ஆயிரம் பேருக்கு மன்னிப்பு ஈரான்
    ரஷ்யாவுக்கு பயணம் செய்ய இருக்கும் ஜி ஜின்பிங் சீனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025