NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை

    7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை

    எழுதியவர் Sindhuja SM
    Jan 01, 2024
    02:11 pm

    செய்தி முன்னோட்டம்

    வட-மத்திய ஜப்பானில் இன்று ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இதனையடுத்து, ஜப்பானின் வடமேற்கு கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

    ஜப்பானில் இருக்கும் இஷிகாவா மற்றும் அதை ஒட்டியுள்ள மாகாணங்களை நிலநடுக்கம் தாக்கியது.

    அந்த நிலநடுக்கங்களில் ஒன்று 7.4 ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதனை தொடர்ந்து, இஷிகாவா, நிகாடா மற்றும் டோயாமா மாகாணங்களின் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நில அதிர்வுகள் தலைநகர் டோக்கியோவிலும், காண்டோ பகுதியிலும் உணரப்பட்டது.

    சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து இஷிகாவாவில் உள்ள நோட்டோ கடற்கரையை 5 மீட்டர் அலைகள் தாக்கியதால், கடலோரப் பகுதிகளை விட்டு விரைவாக வெளியேறுமாறு மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

    பிஜ்வ்ன்

    இதுவரை  பொருள் சேதமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை 

    நிகாடா மற்றும் டோயாமா உள்ளிட்ட பிற மாகாணங்களில் அலைகள் 3 மீட்டரை எட்டியது.

    ஆனால், இதுவரை பொருள் சேதமோ உயிர் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

    இதற்கிடையில், ஹோக்கிருக்கு மின்சார சக்தி நிலையம் தனது அணுமின் நிலையங்களில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து வருகிறது.

    டெக்டோனிக் தட்டு இடைவினைகள் அடிக்கடி நிகழும் பசிபிக் நெருப்பு வளையத்தில் ஜப்பான் அமைந்துள்ளதால் , அந்நாட்டில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது மிக சாதரணமான விஷயமாகும்.

    மார்ச் 11, 2011 அன்று, ஜப்பானின் ஹோன்ஷு தீவின் வடகிழக்கு கடற்கரையில் 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ஜப்பானின் வரலாற்றில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஆகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜப்பான்
    நிலநடுக்கம்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    13 மாணவர்கள் தொடர்ந்த வழக்கு; நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை நீட் தேர்வு
    ஆபரேஷன் கிதியோன் சாரியட்ஸ்: காசாவில் புதிய ராணுவ தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் காசா
    பாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்; அசாதுதீன் ஒவைசி உறுதி இந்தியா
    பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது யூடியூபர்

    ஜப்பான்

    "சீன எதிர்ப்புப் பட்டறை": ஜி7 மாநாட்டிற்கு சீனா கடும் எதிர்ப்பு சீனா
    முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    உலகில் மிகவும் விலையுயர்ந்த ஐஸ்கிரீம் வகைகளின் பட்டியல்! வாழ்க்கை

    நிலநடுக்கம்

    சிக்கிமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு இந்தியா
    வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்த நியூஸிலாந்தில் நிலநடுக்கம் உலகம்
    ஆப்கானிஸ்தானில் கடும் நிலநடுக்கம், காஷ்மீர் வரை பரவிய அதிர்வு; 'லியோ' படக்குழுவினரின் நிலை என்ன? வைரல் செய்தி
    டெல்லி உட்பட வட இந்திய பகுதிகளில் திடீர் நிலநடுக்கம்  இந்தியா

    உலகம்

    10,000 ஆண்டுகள் ஓடக்கூடிய கடிகாரத்தை கட்டமைக்க நிதி அளித்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பசாஸ் அமேசான்
    30 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவித்ததை அடுத்து 12 பிணயக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ் இஸ்ரேல்
    8 பேரை ஏற்றி சென்ற அமெரிக்க இராணுவ விமானம் ஜப்பான் அருகே கடலில் விழுந்து நொறுங்கியது ஜப்பான்
    பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும்: ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்கா

    உலக செய்திகள்

    பாகிஸ்தானில் நீர்மூழ்கி போர் கப்பல்களை நிறுத்தி வைத்திருக்கும் சீனா இந்தியா
    நீதிபதிகளுக்கான நெறிமுறைக் குறியீட்டு விதிகளை வெளியிட்டது அமெரிக்க உச்ச நீதிமன்றம்  அமெரிக்கா
    உலகின் இரண்டாவது அதிக விலையுயர்ந்த 1962 மாடல் ஃபெராரி கார் அமெரிக்கா
    மின்சாரம், எரிபொருள் இல்லாததால் உயிரிழந்த 179 பேர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே புதைக்கப்பட்டனர்: காசாவில் பரிதாபம்  காசா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025