NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பிரான்ஸ் விமான நிலையத்தில் சிக்கியிருந்த 303 இந்தியர்கள் வெளியேற அனுமதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரான்ஸ் விமான நிலையத்தில் சிக்கியிருந்த 303 இந்தியர்கள் வெளியேற அனுமதி

    பிரான்ஸ் விமான நிலையத்தில் சிக்கியிருந்த 303 இந்தியர்கள் வெளியேற அனுமதி

    எழுதியவர் Sindhuja SM
    Dec 25, 2023
    10:19 am

    செய்தி முன்னோட்டம்

    303 இந்திய பயணிகளை ஏற்றிக்கொண்டு நிகரகுவா நோக்கி சென்று கொண்டிருந்த லெஜண்ட் ஏர்லைன்ஸ் விமானத்தை சில நாட்களுக்கு முன் பிரான்ஸ் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வைத்தனர்.

    விமானத்தில் இருந்த சில பயணிகள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, அந்த விமானம் தடுத்து நிறுத்தப்பட்டது.

    இதனால், 303 இந்திய பயணிகள் புகலிடம் எதுவும் இல்லாமல் பிரான்ஸ் விமான நிலையத்தில் சிக்கி கொண்டனர்.

    இந்நிலையில், அவர்கள் பிரான்ஸ் நாட்டில் இருந்து வெளியேற தற்போது அனுமதி கிடைத்துள்ளது.

    அவர்கள் வந்திறங்கிய விமானத்தின் மூலமாகவே அவர்கள் பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற உள்ளனர்.

    ஆனால், அந்த விமானம் அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருமா அல்லது அவர்கள் முன்பு திட்டமிட்டபடி நிகரகுவாவுக்கே அழைத்து செல்லப்படுவார்களா என்பது தெரியவில்லை.

    டியோகில்

    இந்திய  பயணிகளின் விசாரணை ரத்து 

    ரோமானிய நிறுவனமான லெஜண்ட் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ340 விமானம், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து புறப்பட்டு கிழக்கு பிரான்சில் உள்ள வாட்ரி விமான நிலையத்தில் ஒரு தொழில்நுட்ப நிறுத்தத்திற்காக கடந்த வியாழக்கிழமை தரையிறங்கியது.

    பாரிஸிலிருந்து கிழக்கே 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாட்ரி விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கியதும், மனித கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் 303 பயணிகள் சென்ற விமானம் தடுத்து வைக்கப்பட்டது. அதில் இருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

    அந்த விமான பயணிகளின் பயணத்திற்கான நோக்கம் குறித்து ஞாயிற்றுக்கிழமை நான்கு நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.

    ஆனால், தடுத்து வைக்கும் நடைமுறையில் முறைகேடுகள் நடந்ததால் 300க்கும் மேற்பட்ட பயணிகளின் விசாரணையை ரத்து செய்ய பிரான்ஸ் நீதிபதிகள் முடிவு செய்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரான்ஸ்
    இந்தியா
    விமானம்
    விமான சேவைகள்

    சமீபத்திய

    சொத்து தகராறு தொடர்பாக நடிகை கௌதமிக்கு 'உயிருக்கு அச்சுறுத்தல்' என புகார்  சென்னை
    துருக்கிக்கு அடுத்த அடி; ஜனாதிபதி எர்டோகன் மகள் நிறுவனத்திற்கு இந்தியாவில் பாதுகாப்பு அனுமதி ரத்து துருக்கி
    துருக்கிக்கு 304 மில்லியன் டாலர் ஏவுகணை விற்பனை செய்ய ஓகே சொன்னது அமெரிக்கா துருக்கி
    போக்சோ வழக்குகள் அதிகரிப்பு: தனி நீதிமன்றங்கள் தேவை என உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் உச்ச நீதிமன்றம்

    பிரான்ஸ்

    விபத்துக்களை ஏற்படுத்தும் வாடகை இ-ஸ்கூட்டர்கள் - தடைவிதிக்க பாரிஸ் வாக்களிப்பு! எலக்ட்ரிக் வாகனங்கள்
    இந்தியா-பிரான்ஸ் இணைந்து நடத்தும் 'ஓரியன்' ராணுவ பயிற்சி உலகம்
    பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட திருவிழா 2023 திருவிழா
    கேன்ஸ் திரைப்பட விழாவில் வேஷ்டி சட்டையுடன் வந்த மத்திய அமைச்சர் எல்.முருகன்  இந்தியா

    இந்தியா

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவை இந்திய அணியின் பிரதமர் வேட்பாளராக முன்மொழிய திட்டம் மல்லிகார்ஜுன் கார்கே
    வெள்ள நிவாரணத் தொகையாக பிரதமரிடம் ₹12,000 கோடி கோரினார் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி
    "இந்தியாவோ, அமெரிக்காவோ இல்லை. பாகிஸ்தானின் நிலைமைக்கு நாம் தான் காரணம்"- நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான்
    இந்திய தொழில்நுட்ப சேவைகள் மற்றும் அவற்றை நிர்வகிக்கும் அமைச்சகங்கள் தொழில்நுட்பம்

    விமானம்

    இன்ஜின் கோளாறு: ரஷ்யாவுக்கு திருப்பிவிடப்பட்ட இந்திய விமானம்  இந்தியா
    நள்ளிரவு வரை மெட்ரோ சேவைகளை தொடர சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு? சென்னை
    ரஷ்யாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: நிவாரணத்தை அனுப்புகிறது இந்திய அரசாங்கம்  இந்தியா
    ரஷ்யாவில் சிக்கித் தவித்த பயணிகள் ஏர் இந்தியா விமானத்தில் அமெரிக்கா சென்றனர் ரஷ்யா

    விமான சேவைகள்

    விமானத்திற்குள் 'ஹைஜாக்' செய்வது பற்றி பேசிய பயணி கைது  விமானம்
    'வேலை நேரம் முடிந்துவிட்டது': 350 பயணிகளை பாதியிலேயே விட்டுச் சென்ற விமானிகள் ஏர் இந்தியா
    நடுவானில் விமானத்தின் தரையில் மலம் கழித்த பயணி கைது இந்தியா
    தாமதமான புறப்பாடு கொண்ட விமான சேவை: ஸ்பைஸ் ஜெட் முதலிடம்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025