NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்காவில் சூறாவளி: 2,600 விமானங்கள் ரத்து, மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்காவில் சூறாவளி: 2,600 விமானங்கள் ரத்து, மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு 
    மழை பெய்ததால், மரங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    அமெரிக்காவில் சூறாவளி: 2,600 விமானங்கள் ரத்து, மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 08, 2023
    01:44 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவின் வாஷிங்டன் DC பகுதியில் கடுமையான புயல் வீசியதால் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மேலும், 2 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    வாஷிங்டன் DCயின் ஒருசில இடங்களில் பலத்த புயல் காற்றுடன்(மணிக்கு 60 மைல் வேகம்) சக்தி வாய்ந்த மழை பெய்ததால், மரங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    நேற்று இரவு 9 மணிக்குள்(0100 GMT) கிரேட்டர் DC பகுதியில் சூறாவளி வீசக்கூடும் என்று அமெரிக்காவின் தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    ஆனால், இதுவரை அந்த பகுதியில் எந்த சூறாவளியும் வீசவில்லை.

    இக்ஒல்

    கிட்டத்தட்ட 7,900 விமானங்கள் தாமதமானது

    இடியுடன் கூடிய மழை காரணமாக நியூயார்க், வாஷிங்டன், பிலடெல்பியா, அட்லாண்டா மற்றும் பால்டிமோர் விமான நிலையங்களில் இருந்து எந்த விமானமும் செயல்படாது என்று மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் உத்தரவிட்டது.

    இதனால், நேற்று இரவுக்குள், 2,600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கிட்டத்தட்ட 7,900 விமானங்கள் தாமதமானது.

    வாஷிங்டன் பகுதியில் உள்ள நூலகங்கள், அருங்காட்சியகங்கள், உயிரியல் பூங்கா, குளங்கள் மற்றும் பிற நகராட்சி சேவைகள் முன்கூட்டியே மூடப்பட்டன.

    தென் கரோலினாவின் ஆண்டர்சனில் 15 வயது சிறுவன் ஒருவன், தனது தாத்தா பாட்டி வீட்டுக்கு செல்ல காரில் இருந்து இறங்கியபோது திடீரென்று மரம் சாய்ந்து விழுந்ததால் உயிரிழந்தான்.

    மேலும், அலபாமாவில் உள்ள புளோரன்ஸ் நகரில் 28 வயது இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    அமெரிக்கா

    அனைத்து எழுத்தாளர்களையும் கூண்டோடு பணி நீக்கம் செய்தது நேஷனல் ஜியோகிராஃபிக் ஆட்குறைப்பு
    இந்திய மக்களுக்கு நற்செய்தி! US விசா நேர்காணல் காத்திருப்பு நேரம் 50 சதவிகிதமாக குறைப்பு ! இந்தியா
    அமெரிக்காவில் இடஒதுக்கீட்டை ரத்து செய்தது உச்சநீதிமன்றம், பராக் ஒபாமா வேதனை இட ஒதுக்கீடு
    வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட ஐரோப்பாவின் யூக்ளிட் தொலைநோக்கி விண்வெளி

    உலகம்

    பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறதா? பாகிஸ்தான்
    இலங்கையிலும் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது UPI யுபிஐ
    உருகுவே கடற்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 2,000 பெங்குயின்கள் உலக செய்திகள்
    ஒரே பாலின முத்தம்: பெரும் இசை விழாவை நிறுத்தியது மலேசியா மலேசியா

    உலக செய்திகள்

    பிரேசில் நாட்டில் ரூ.35.30 கோடிக்கு ஏலம் போன நெல்லூர் இன மாடு ஆந்திரா
    டச்சு பிரதமர் ராஜினாமா: நெதர்லாந்தில் என்ன நடக்கிறது? ஐரோப்பா
    உக்ரைன் போரில் இதுவரை 9,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐநா உக்ரைன்
    கனடா: இந்திய தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் கைது  கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025