NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / சிரியா போரிலிருந்து தப்பிக்க ஏஜியன் கடலை நீச்சல் அடித்து கடந்த ஒலிம்பிக் வீராங்கனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிரியா போரிலிருந்து தப்பிக்க ஏஜியன் கடலை நீச்சல் அடித்து கடந்த ஒலிம்பிக் வீராங்கனை
    டீன் ஏஜ் பருவத்தில் போரினால் பாதிக்கப்பட்ட சிரியாவிலிருந்து தப்பி ஓடியவர்

    சிரியா போரிலிருந்து தப்பிக்க ஏஜியன் கடலை நீச்சல் அடித்து கடந்த ஒலிம்பிக் வீராங்கனை

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 06, 2024
    02:03 pm

    செய்தி முன்னோட்டம்

    தங்கள் நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து, தங்கள் கனவுகளை கைவிடாத அனைத்து விளையாட்டு வீரர்களையும் கௌரவிக்கும் வகையில் ஏப்ரல் 6ஆம் தேதியை அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினமாக உலகம் கொண்டாடுகிறது.

    அப்படிப்பட்ட ஒரு தடகள வீராங்கனை தான் யுஸ்ரா மர்டினி.

    இவர் டீன் ஏஜ் பருவத்தில் போரினால் பாதிக்கப்பட்ட சிரியாவிலிருந்து தப்பி ஓடியவர்.

    பின்னர் அகதிகள் ஒலிம்பிக் குழுவின் ஒரு பகுதியாக 2016 மற்றும் 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றார்.

    சிரியாவின் டமாஸ்கஸின் மையப்பகுதியில் பிறந்த யுஸ்ரா மர்டினியின் ஆரம்ப காலங்கள், அவளது தந்தையின் ஊக்குவிப்பால் நீச்சல் விளையாட்டில் ஆர்வம் கொண்டார்.

    ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் கனவுகளால் அவரது ஆர்வம் மேலும் தூண்டப்பட்டது.

    ஆனால், உள்நாட்டுப் போர் அவளது தாய்நாட்டை அழித்தது, அவளுடைய கனவை கலைத்தது.

    நீச்சல்

    கடலை தாண்டிய வீராங்கனை

    2015ஆம் ஆண்டில், யுஸ்ரா மர்டினியும், அவரது மூத்த சகோதரி சாராவும் பாதுகாப்பைத் தேடி நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர்.

    லெபனான் வழியாக துருக்கியை அடைந்த பிறகு, மார்டினியும் மற்றும் அவரது சகோதரி சாராவும், படகு மூலம் கிரேக்கத்திற்கு தப்பி செல்ல நினைத்தனர்.

    ஆனால் வழியிலேயே படகின் இயந்திரம் செயலிழந்தது.

    அதில் இருந்த அனைவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டதால், யுஸ்ரா, சாரா மற்றும் மற்றொரு பயணியுடன் தண்ணீரில் குதித்து, கிரீஸை அடையும் வரை, பல மணி நேரம் படகைத் தள்ளி, கப்பலில் இருந்தவர்களின் உயிரைக் காப்பாற்றினார்.

    25 நாட்கள் பயணப்பட்ட பின்னர், அவர்கள் ஜெர்மனியை அடைந்தனர்.

    பின்னர், 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் அகதிகள் ஒலிம்பிக் குழுவின் உறுப்பினராக யுஸ்ரா பெயர் பொறிக்கப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிரியா
    ஒலிம்பிக்

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    சிரியா

    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் துருக்கி
    துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 16 ஆயிரத்தைத் தாண்டிய உயிரிழப்புகள் உலக செய்திகள்
    துருக்கி பூகம்ப சேதங்களை காட்டும் செயற்கைக்கோள் படங்கள் துருக்கி
    துருக்கி நிலநடுக்கம் அப்டேட்ஸ்: ஆபரேஷன் தோஸ்த் என்றால் என்ன துருக்கி

    ஒலிம்பிக்

    பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு இந்திய ரேஸ்வாக்கிங் வீரர்கள் தகுதி விளையாட்டு
    பாரிஸ் ஒலிம்பிக் கூடைப்பந்தாட்ட தகுதிப் போட்டிகளில் விளையாட ரஷ்யாவுக்கு தடை உலக கோப்பை
    தமிழக விளையாட்டு வீரர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி! மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல்! மத்திய அரசு
    'ஐபிஎல்லில் விளையாடுவேன்' : ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஜாலி பேட்டி கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025