Page Loader
122 ரன்களில் ஆட்டமிழந்த இங்கிலாந்து: 3வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி

122 ரன்களில் ஆட்டமிழந்த இங்கிலாந்து: 3வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி

எழுதியவர் Sindhuja SM
Feb 18, 2024
07:12 pm

செய்தி முன்னோட்டம்

ராஜ்கோட்டில் நடந்த மூன்றாவது டெஸ்டில் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. இந்த சாதனை படைக்கும் வெற்றியால், இந்திய அணி 2023-25 ​​ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற ராஜ்கோட் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்துக்கு இந்தியா முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் சதங்களின் மூலம் இந்தியா 445 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணிக்காக மார்க் வுட் 4/114 ரன்கள் எடுத்தார்.

இந்தியா

 WTC அட்டவணையில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் 153 ரன்களை எடுத்ததால் இங்கிலாந்து மொத்தமாக 319 ரன்களை குவித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால்(214*) மற்றும் ஷுப்மான் கில் (91) ஆகியோரால் இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சை 430/4 என டிக்ளேர் செய்தது. 2023-25 ​​WTC சுழற்சி போட்டிகளில் இந்தியா விளையாடிய ஏழு போட்டிகளுள் நான்கில் அது வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி 59.52 புள்ளிகள் சதவீதத்துடன் 50 புள்ளிகளைக் குவித்துள்ளனர். இந்த பெரிய வெற்றியின் மூலம் இந்திய அணி இப்போது WTC தரவரிசையில் ஆஸ்திரேலியாவை இந்தியா முந்தியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்து ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. ஆனால் தொடர்ச்சியான வெற்றிகள் மூலம் இந்தியா மீண்டும் சீறி எழுந்துள்ளது.