
மகளிர் ஐபிஎல் 2023 : குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக பெத் மூனி நியமனம்
செய்தி முன்னோட்டம்
மகளிர் ஐபிஎல் முதல் சீசனுக்கான குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய தொடக்க வீராங்கனை பெத் மூனி நியமிக்கப்பட்டுள்ளார்.
துணை கேப்டனாக இந்திய ஆல்ரவுண்டர் சினே ராணா அறிவிக்கப்பட்டுள்ளார்.
"2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள வரலாற்று சிறப்புமிக்க மகளிர் பிரீமியர் லீக்கின் தொடக்க சீசனில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வழிநடத்தும் வாய்ப்பை பெற்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்." என பெத் மூனி தெரிவித்துள்ளார்.
மகளிர் ஐபிஎல் 2023 முதல் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்ள உள்ளது.
முன்னதாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஸ்மிருதி மந்தனாவும், உ.பி.வாரியர்ஸ் அணிக்கு அலிசா ஹீலியும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இன்னும் கேப்டன்களை அறிவிக்கவில்லை.
ட்விட்டர் அஞ்சல்
குஜராத் ஜெயன்ட்ஸ் ட்வீட்
🚨 Breaking News 🚨
— Gujarat Giants (@GujaratGiants) February 27, 2023
Get ready to ROAR with excitement as our fierce lioness Beth Mooney leads the #Giants in the first-ever @wplt20!
Joining her as our vice-captain is the incredible all-rounder @SnehRana15. Together, they'll take on the best in the world! 💪🔥
[1/2] pic.twitter.com/u027w8mawq