NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க பாகிஸ்தான் செல்கிறதா இந்திய கிரிக்கெட் அணி? பிசிசிஐ பதில்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க பாகிஸ்தான் செல்கிறதா இந்திய கிரிக்கெட் அணி? பிசிசிஐ பதில்
    இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட்

    சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க பாகிஸ்தான் செல்கிறதா இந்திய கிரிக்கெட் அணி? பிசிசிஐ பதில்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 30, 2024
    08:17 pm

    செய்தி முன்னோட்டம்

    பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா திங்களன்று (செப்டம்பர் 30) அடுத்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்குச் செல்வதா என்பது குறித்த முடிவு அரசாங்கத்தின் ஒப்புதலைப் பொறுத்தது எனத் தெரிவித்துள்ளார்.

    2025 பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    ராஜீவ் சுக்லா இதுகுறித்து கூறுகையில், "இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால் சர்வதேச சுற்றுப்பயணங்களுக்கு, நாங்கள் எப்போதும் அரசாங்கத்தின் அனுமதியைப் பெறுவோம் என்பது எங்கள் கொள்கை.

    அது அரசாங்கத்தின் கையில் உள்ளது. எங்கள் அணி எந்த நாட்டிற்கும் செல்ல வேண்டுமா அல்லது கூடாதா என்பதை அரசுதான் முடிவு செய்யும்." என்று ராஜீவ் சுக்லா செய்தியாளர்களிடம் கூறினார்.

    மத்திய அரசு

    மத்திய அரசின் முடிவுக்கு கட்டுப்படுவதாக பிசிசிஐ விளக்கம்

    ராஜீவ் சுக்லா மேலும் கூறுகையில், இந்த விஷயத்தில் மத்திய அரசு என்ன முடிவு எடுத்தாலும், தாங்கள் அதற்குக் கட்டுப்படுவோம் என்று கூறியுள்ளார்.

    இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது செய்தியாளர்களிடம் ராஜீவ் சுக்லா இவ்வாறு தெரிவித்தார்.

    இந்தியாவும் பாகிஸ்தானும் ஐசிசி போட்டிகளில் மட்டுமே விளையாடுகின்றன. மும்பை தீவிரவாத தாக்குதலில் 150 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து 2008ஆம் ஆண்டு முதல் இருதரப்பு கிரிக்கெட்டுக்காக இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லவில்லை.

    ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் இந்தியா வந்திருந்தது. சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாது என்று யூகிக்கப்படுகிறது.

    கோரிக்கை

    சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தானில் இருந்து மாற்ற கோரிக்கை

    இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என்பதால், போட்டியை பாகிஸ்தானில் இருந்து விலக்கி இலங்கை அல்லது துபாயில் நடத்த ஐசிசியிடம் பிசிசிஐ கோரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக, கடந்த ஆண்டு பாகிஸ்தானில் திட்டமிடப்பட்ட ஆசியக் கோப்பை தொடரில், இறுதியில் இந்தியாவுக்காக ஒரு ஹைபிரிட் மாதிரியின்படி இந்தியாவை இலங்கையில் அனைத்து போட்டிகளையும் விளையாட அனுமதித்தது.

    இதன் காரணமாக, ஆசிய கோப்பையில் பாகிஸ்தானில் நான்கு போட்டிகள் மட்டுமே நடந்தது.

    எஞ்சிய ஒன்பது போட்டிகள் இலங்கையில் நடந்தன. ஆனால், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதற்கு ஒப்புக்கொள்ளாது எனக் கூறப்படுகிறது.

    ஐசிசியும் தனது பங்கிற்கு, அரசாங்கக் கொள்கைக்கு எதிராக ஒரு உறுப்பினர் அணியை விளையாட கட்டாயப்படுத்த மாட்டோம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய கிரிக்கெட் அணி
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    இந்திய கிரிக்கெட் அணி

    ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் இந்திய அணியில் சேர்ப்பு; பிசிசிஐ அறிவிப்பு கிரிக்கெட்
    மகளிர் பிக் பாஷ் லீக்கில் முதல்முறையாக ஆறு இந்திய வீராங்கனைகள் ஒப்பந்தம்; கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு இடமில்லை மகளிர் கிரிக்கெட்
    எம்எஸ் தோனி, விராட் கோலி, ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி; மூவரின் சிறப்பம்சங்களை ஒப்பிட்ட அஸ்வின் எம்எஸ் தோனி
    சென்னையில் நடக்கும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்; 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு டெஸ்ட் கிரிக்கெட்

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    Sports Round Up : ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய ஹாக்கி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி; மேலும் பல முக்கிய செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை
    ஒருநாள் உலகக்கோப்பை : அரையிறுதி வாய்ப்புக்காக போராடும் 6 அணிகள் ஒருநாள் உலகக்கோப்பை
    'அரையிறுதிக்கு தகுதி பெற தெய்வம் அருள் புரியணும்'; பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குனர் பேட்டி ஒருநாள் உலகக்கோப்பை
    ஒருநாள் உலகக்கோப்பை : இது நடந்தால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்வது கன்பார்ம் ஒருநாள் உலகக்கோப்பை

    கிரிக்கெட்

    வங்கதேச டி20 கிரிக்கெட் தொடரில் ஷுப்மன் கில்லுக்கு ஓய்வு; பிசிசிஐ திட்டம் ஷுப்மன் கில்
    இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் 38வது பிறந்த தினம் இன்று அஸ்வின் ரவிச்சந்திரன்
    டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறாவது சதமடித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்; சேப்பாக்கத்தில் இரண்டாவது சதம் அஸ்வின் ரவிச்சந்திரன்
    பிரபல டெக் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் ரூ.7.4 கோடி முதலீடு ஸ்டார்ட்அப்

    கிரிக்கெட் செய்திகள்

    சென்னையில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டிக்கு சிவப்பு மண் ஆடுகளத்தை பயன்படுத்தத் திட்டம் இந்திய கிரிக்கெட் அணி
    கிரிக்கெட்டிலிருந்து எப்போது ஓய்வு? இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட தகவல் அஸ்வின் ரவிச்சந்திரன்
    அதிக ரன்கள்; 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை செய்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
    INDvsBAN முதல் டெஸ்ட்: அடுத்தடுத்த பந்துகளில் வங்கதேச வீரர்களை தெறிக்கவிட்ட ஆகாஷ் தீப்; வைரலாகும் காணொளி டெஸ்ட் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025