Loading...
இந்திய அணிக்கு பின்னடைவு! இலங்கை தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து நட்சத்திர ஆல்ரவுண்டர் விலகல்
காயத்தால் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்

இந்திய அணிக்கு பின்னடைவு! இலங்கை தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து நட்சத்திர ஆல்ரவுண்டர் விலகல்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 26, 2026
07:45 pm

செய்தி முன்னோட்டம்

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலே சர்வதேச மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த சூழ்நிலையில், தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் காயத்தால் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியிருப்பது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

காலில் காயம்

காலில் ஏற்பட்ட காயத்தால் விலகும் வாஷிங்டன் சுந்தர்

சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நிறைவடைந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் போது வாஷிங்டன் சுந்தருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

அந்தக் காயத்தில் இருந்து அவர் இன்னும் முழுமையாகக் குணமடையாததால், வரவிருக்கும் இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவரால் பங்கேற்க முடியாது என்பது உறுதியாகியுள்ளது.

வரும் ஜூலை 28 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று இலங்கை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ள நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

2வது போட்டி

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது சந்தேகம்

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்குள் வாஷிங்டன் சுந்தர் தனது உடற்தகுதியை எட்டிவிடுவார் என்றும், ஆனால் ஒரே ஒரு போட்டிக்காக அவரைத் தேர்வாளர்கள் அணியில் சேர்ப்பார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் மானவ் சுதர் ஆகியோரைத் தாண்டி சுந்தருக்குப் பதிலாக நான்காவது சுழற்பந்து வீச்சாளரைத் தேர்வாளர்கள் தேட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

ஒருவேளை ஹர்ஷ் துபே தேர்வு செய்யப்பட்டால், ஒரே மாதிரியான திறமை கொண்ட மூன்று பந்துவீச்சாளர்கள் அணியில் இடம்பெறும் சூழல் ஏற்படும்.

ADVERTISEMENT

காயம்

காயத்தால் தொடரிலிருந்து விலகும் முக்கிய வீரர்கள்

வாஷிங்டன் சுந்தர் மட்டுமின்றி, இளம் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா ஆகியோரும் காயங்கள் காரணமாக இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுழற்பந்து வீச்சிற்கு சாதகமான இலங்கை ஆடுகளங்களில் வாஷிங்டன் சுந்தரின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிகவும் அவசியமான ஒன்றாகப் பார்க்கப்பட்ட நிலையில், அவரின் விலகல் தேர்வாளர்களுக்கு பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், வலுவான இலங்கை அணியை அவர்கள் சொந்த மண்ணில் எதிர்கொள்ள இந்திய அணி தீவிரமாகத் தயாராகி வருகிறது.

ADVERTISEMENT