Page Loader
டி20 கிரிக்கெட்டில் 13,000 ரன்கள் எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார் விராட் கோலி
டி20 கிரிக்கெட்டில் 13,000 ரன்கள் எடுத்த முதல் இந்தியர் ஆனார் விராட் கோலி

டி20 கிரிக்கெட்டில் 13,000 ரன்கள் எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார் விராட் கோலி

எழுதியவர் Sekar Chinnappan
Apr 07, 2025
08:07 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் விராட் கோலி, குறிப்பிடத்தக்க சாதனையாக டி20 கிரிக்கெட்டில் 13,000 ரன்களை கடந்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மும்பையின் வான்கடே ஸ்டேடியத்தில் ஐபிஎல் 2025 தொடரில் திங்கட்கிழமை (ஏப்ரல் 7) நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக களமிறங்கிய விராட் ​​கோலி தனது 17வது ரன்னை எடுத்தபோது இந்த மைல்கல்லை எட்டினார். இதன் மூலம், உலகளவில் டி20 கிரிக்கெட்டில் 13,000 ரன்கள் அடித்தவர்களின் எலைட் பட்டியலில் கோலி இணைகிறார். ஒட்டுமொத்தமாக உலகவில் டி20 கிரிக்கெட்டில் 13,000 ரன்களை எட்டிய ஐந்தாவது பேட்ஸ்மேன் ஆனார்.

13,000 ரன்கள்

13,000 ரன்கள் அடித்த வீரர்கள்

கிறிஸ் கெய்ல் (14,562), அலெக்ஸ் ஹேல்ஸ் (13,610), ஷோயப் மாலிக் (13,557), மற்றும் கீரன் பொல்லார்ட் (13,537) ஆகியோர் மட்டுமே இதற்கு முன்பு டி20 கிரிக்கெட்டில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். சமீபத்தில் தனது 400வது டி20 போட்டியில் விளையாடிய 36 வயதான விராட் கோலி, டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஐபிஎல்லில் 8,000 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரர் என்ற பெருமையையும் கோலி பெற்றுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் 256 போட்டிகளிலும் ஆர்சிபி அணியை பிரதிநிதித்துவப்படுத்திய அவர், எட்டு சதங்களையும் அடித்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில், இந்தியா ஐசிசி டி20 உலகக் கோப்பையை வெல்ல உதவிய பிறகு, கோலி 2024இல் ஓய்வு பெற்றார்.