
ஐபிஎல் 2024: சிஎஸ்கே போட்டியை காண வருபவர்களுக்கு இலவச பேருந்து பயணம்
செய்தி முன்னோட்டம்
நாளை தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டி தொடரின் முதல்நாள் ஆட்டத்தை காண சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு வருபவர்கள், இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம் என தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளுக்கு ஏகப்பட்ட டிமாண்ட் இருக்கிறது.
இணையத்தில் டிக்கெட் புக்கிங் ஓபன் ஆனா 10 நிமிடங்களையே விற்று தீர்ந்து விட்டது. இந்த நிலையில் ப்ளாக்கில் இந்த டிக்கெட்டுகள், 5ஆயிரம் முதல் 10ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தோனியை களத்தில் காண ஆர்வமாக இருக்கும் ரசிகர்களுக்கு கூடுதல் சர்ப்ரைஸாக, தற்போது தமிழக போக்குவரத்து கழகம் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விதிமுறைகள்
இலவச பேருந்து பயணத்திற்கான விதிமுறைகள்
சென்னை சூப்பர்கிங்ஸ் நிறுவனம், மாநகரப் போக்குவரத்து கழகத்தில் முன்னதாக பணம் செலுத்தி, போட்டியை காண வருபவர்களின் வசதிக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதனால், கிரிக்கெட் ரசிகர்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியை பயன்படுத்த பயணிகள் Online / pre printed டிக்கெட் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
நடத்துனர் அதனை சரிபார்த்த பின்னரே பயணிக்க முடியும். போட்டி நடைபெறும் நாளில் மட்டுமே பயணம் செய்ய அனுமதி.
எனினும் குளிர் சாதன பேருந்துகளில் இந்த வசதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.