
பாராட்டை பெறும் CSK சிவம் துபேவின் உன்னத செயல்; அப்படி என்ன செய்தார்?
செய்தி முன்னோட்டம்
நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (TNSJA) விருதுகள் மற்றும் உதவித்தொகை வழங்கும் விழாவில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் சிவம் துபே கலந்துகொண்டார்.
அப்போது அவர் தானாக முன்வந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 வளரும் விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ.70,000 வழங்குவதாக அறிவித்தார்.
தன்னிச்சையாக சிவம் துபே செய்த இந்த செயல் பாராட்டை பெற்றுவருகிறது.
31 வயதான சிவம் துபே, TNSJA இளம் விளையாட்டு வீரர்களின் சாதனைகளுக்காக ரூ.30,000 உதவித்தொகை வழங்கும் நிகழ்விற்கு தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#SportsUpdate | வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்கள் 10 பேருக்கு தலா ரூ 70,000 உதவித் தொகை.. பாராட்டை பெறும் சிவம் தூபேவின் அறிவிப்பு#SunNews | #ShivamDube | #TamilNadu pic.twitter.com/MKXlU9BuHz
— Sun News (@sunnewstamil) April 23, 2025
சாதனையாளர்கள்
அங்கீகரிக்கப்பட்ட இளம் சாதனையாளர்கள்
அங்கீகரிக்கப்பட்ட இளம் திறமையாளர்களில் பி.பி. அபிநந்த்(டேபிள் டென்னிஸ்), கே.எஸ். வேனிசா ஸ்ரீ(வில்வித்தை), முத்துமீனா வெள்ளசாமி(பாரா தடகளம்), ஷமீனா ரியாஸ்(ஸ்குவாஷ்), எஸ்.நந்தனா(கிரிக்கெட்), கமலி பி (சர்ஃபிங்), ஆர். அபிநயா (தடகளம்), ஆர்.சி. ஜிதின் அர்ஜுனன் (தடகளம்), ஏ. தக்ஷந்த் (சதுரங்கம்), மற்றும் ஜெயந்த் ஆர்.கே (கிரிக்கெட்) ஆகியோர் அடங்குவர்.
இந்த நிகழ்வில் பேசிய சிவம் துபே, "இந்த நிகழ்வு அனைத்து இளம் விளையாட்டு வீரர்களுக்கும் உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. இந்த சிறிய சாதனைகள் அவர்களுக்கு மேலும் கடினமாக பாடுபடவும், நாட்டிற்கு பெருமை சேர்க்கவும் கூடுதல் உந்துதலை அளிக்கின்றன..இந்த ரூ. 30,000 ஒரு சிறிய தொகையாகத் தோன்றலாம், ஆனால் அது ஊக்கமாக செயல்படுகிறது. நீங்கள் இளமையாக இருக்கும்போது, ஒவ்வொரு பைசாவும் ஒவ்வொரு விருதும் உண்மையிலேயே முக்கியமானது." என்றார்.