NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / டிஎன்பிஎல் 2023 : ஐபிஎல்லை விட அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட தமிழக வீரர் சாய் சுதர்சன்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    டிஎன்பிஎல் 2023 : ஐபிஎல்லை விட அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட தமிழக வீரர் சாய் சுதர்சன்!
    டிஎன்பிஎல் 2023இல் ஐபிஎல்லை விட அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட தமிழக வீரர்

    டிஎன்பிஎல் 2023 : ஐபிஎல்லை விட அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட தமிழக வீரர் சாய் சுதர்சன்!

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 24, 2023
    02:50 pm

    செய்தி முன்னோட்டம்

    டிஎன்பில் 2023 தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் ஐபிஎல்லை விட அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

    டிஎன்பிஎல்லில் இந்த ஆண்டு முதல் முறையாக ஏலத்தின் மூலம் வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

    சென்னை அருகே உள்ள மகாபலிபுரத்தில் வீரர்களுக்கான ஏலம் வியாழக்கிழமை (பிப்ரவரி 23) தொடங்கிய நிலையில், முதல் நாள் ஏலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் ரூ. 21.60 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

    முன்னதாக, கடந்த டிசம்பரில் நடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் சாய் சுதர்சன் குஜராத் டைட்டன்ஸ் அணியால் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அதை விட அதிக தொகைக்கு டிஎன்பிஎல்லில் கோவை கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

    சாய் சுதர்சன்

    டிஎன்பிஎல் 2023 வீரர்கள் ஏலம்

    2016 இல் தொடங்கிய டிஎன்பிஎல் கிரிக்கெட் லீக், 2020 தவிர்த்து இதுவரை ஆறு ஆண்டுகள் நடத்தப்பட்டு, இந்த ஆண்டு ஏழாவது சீசன் நடத்தப்பட உள்ளது.

    கடந்த ஆண்டு வரை தமிழ்நாடு கிரிக்கெட் வாரியமே அணிகளுக்கான வீரர்கள் தேர்வை செய்து வந்த நிலையில், இந்த முதல் முறையாக வீரர்கள் ஏல செயல்முறை மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.

    மொத்தம் 943 பேர் ஏலத்தில் பங்கேற்றுள்ளனர். இதில் சர்வதேச வீரர்கள், ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்களும் இடம் பிடித்துள்ளனர்.

    மொத்தம் 8 அணிகள் ஏலத்தில் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் 16 முதல் 20 வீரர்களை வாங்கலாம். அதிகபட்சமாக ரூ.70 லட்சம் வரை செலவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல்
    கிரிக்கெட்

    சமீபத்திய

    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025
    ஐபிஎல்லில் தனது 5வது சதத்தை கே.எல். ராகுல் அடித்தார்: முக்கிய புள்ளிவிவரங்கள் கே.எல்.ராகுல்
    ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது  ஹைதராபாத்
    சென்னையில் அதிகாலை முதல் மிதமழை; தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை எங்கே? தமிழகம்

    ஐபிஎல்

    மகளிர் ஐபிஎல் 2023 : ஏலத்தில் குதித்துள்ள டாப் நிறுவனங்கள்! ஐபிஎல் 2023
    மகளிர் ஐபிஎல் 2023 : ஏலம் முடிந்தது! ஐந்து அணிகளின் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ! கிரிக்கெட்
    ஐபிஎல் 2023 : ஜோத்பூரில் போட்டிகளை நடத்த ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் திட்டம்! ஐபிஎல் 2023
    உலகின் டாப் 5 விளையாட்டு அணிகளில் இடம்பெற்ற ஆர்சிபி! இன்ஸ்டாகிராம் சர்வேயில் புது சாதனை! விளையாட்டு

    கிரிக்கெட்

    IND vs AUS 2வது டெஸ்ட் : முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா! டெஸ்ட் கிரிக்கெட்
    பிரசித் கிருஷ்ணா ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்! ஐபிஎல் 2023
    மார்ச் 31 ஆம் தேதி தொடங்குகிறது ஐபிஎல் : முதல் போட்டியில் சிஎஸ்கே vs ஜிடி!! ஐபிஎல் 2023
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ரஞ்சி டிராபி நாயகன் உனத்கட்டுக்கு இடம்! ஒருநாள் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025