Page Loader
முதல்முறையாக ஏடிபி டூர் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய டென்னிஸ் வீரர் யூகி பாம்ப்ரி
முதல்முறையாக ஏடிபி டூர் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய டென்னிஸ் வீரர் யூகி பாம்ப்ரி

முதல்முறையாக ஏடிபி டூர் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய டென்னிஸ் வீரர் யூகி பாம்ப்ரி

எழுதியவர் Sekar Chinnappan
Jun 30, 2023
01:44 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய டென்னிஸ் வீரர் யூகி பாம்ப்ரி, தென்னாப்பிரிக்காவின் லாயிட் ஹாரிஸுடன் இணைந்து மல்லோர்கா ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம், முதல்முறையாக ஏடிபி டூர் இறுதிப்போட்டியை எட்டியுள்ளார். வெள்ளியன்று (ஜூன் 30) நடந்த அரையிறுதி போட்டியில் இருவரும் 6-4, 7-6 (2) என்ற செட் கணக்கில் எட்வர்ட் ரோஜர்-வாசெலின் மற்றும் சாண்டியாகோ கோன்சலஸ் ஜோடியை வீழ்த்தினர். இறுதிப் போட்டியில் அவர்கள் ராபின் ஹாஸ் மற்றும் பிலிப் ஆஸ்வால்ட் அல்லது நதானியேல் லாம்மன்ஸ் மற்றும் ஜாக்சன் வித்ரோவை எதிர்கொள்வார்கள். இரண்டாவது அரையிறுதி வெள்ளிக்கிழமையும், அதைத் தொடர்ந்து சனிக்கிழமை (ஜூலை 1) இறுதிப் போட்டியும் நடைபெற உள்ளது.

Yuki Bhambri improves doubles performance

இரட்டையர் பிரிவுக்கு மாறிய பிறகு யூகி பாம்ப்ரியின் செயல்திறனில் முன்னேற்றம்

30 வயதான யூகி பாம்ப்ரி கடந்த ஆண்டு முழுவதும் காயங்களால் பாதிக்கப்பட்ட பின்னர் ஒற்றையர் பிரிவில் இருந்து இரட்டையர் பிரிவுக்கு நிரந்தரமாக மாறினார். அதன் பின்னர் தனது ஆட்டத்தை தொடர்ந்து மேம்படுத்தி வந்ததோடு, இரட்டையர் பிரிவு தரவரிசையிலும் முன்னேறி தற்போது 75வது இடத்தில் உள்ளார். மல்லோர்கா ஓபன் இறுதிப்போட்டிக்கு பிறகு, தரவரிசையில் இன்னும் முன்னேற்றத்தை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றால், ரோஹன் போபண்ணாவுக்கு பிறகு வெளிநாட்டு வீரருடன் சேர்ந்து இரட்டையர் பிரிவில் ஏடிபி டூர் பட்டத்தை வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை யூகி பாம்ப்ரி பெறுவார்.