Page Loader
ஜிம்பாப்வே தொடருக்கான தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணியின் கேப்டனாக கேசவ் மகாராஜ் நியமனம்
தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணியின் கேப்டனாக கேசவ் மகாராஜ் நியமனம்

ஜிம்பாப்வே தொடருக்கான தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணியின் கேப்டனாக கேசவ் மகாராஜ் நியமனம்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 20, 2025
08:37 pm

செய்தி முன்னோட்டம்

ஜூன் 28 ஆம் தேதி புலவாயோவில் தொடங்கும் ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா அணியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்ற கேப்டன் டெம்பா பவுமா சேர்க்கப்படவில்லை.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும் போது பவுமாவுக்கு இடது தொடை தசைநார் வலி ஏற்பட்டது.

முக்கியமான அந்த போட்டியில், அவர் காயத்திற்கு மத்தியிலும் 66 ரன்கள் எடுத்தார்.

அந்த போட்டியைத் தொடர்ந்து, காயத்தின் அளவை தீர்மானிக்க டெம்பா பவுமா மேலும் ஸ்கேன் செய்யப்படுவார் என்று தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியது.

புதிய கேப்டன்

கேசவ் மகாராஜ் தலைமையில் களமிறங்கும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி

டெம்பா பவுமா இல்லாத நிலையில், கேசவ் மகாராஜ் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் கேப்டனாக இந்த தொடரில் செயல்பட உள்ளார்.

இதற்கு முன்பு ஒயிட் பால் கிரிக்கெட்டில் கேசவ் மகாராஜ் கேப்டனாக பணியாற்றிய அனுபவம் கொண்டிருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் கேப்டன் பொறுப்பேற்பது இதுவே முதல்முறையாகும்.

இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவை வழிநடத்தும் 41வது வீரர் ஆகிறார் கேசவ் மகாராஜ்.

இதற்கிடையே, ஐடன் மார்க்ரம், ரியான் ரிகெல்டன், காகிசோ ரபாடா, மார்கோ ஜான்சன் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் உள்ளிட்ட பல மூத்த வீரர்களுக்கு தென்னாப்பிரிக்கா இந்த தொடரில் இருந்து ஓய்வு அளித்துள்ளது.