Page Loader
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் விலகுகிறாரா? இன்ஸ்டாகிராம் பதிவால் கிளம்பிய ஊகங்கள்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் விலகுகிறாரா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் விலகுகிறாரா? இன்ஸ்டாகிராம் பதிவால் கிளம்பிய ஊகங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
May 23, 2025
04:50 pm

செய்தி முன்னோட்டம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது ஐபிஎல் 2025 தொடரை ஏமாற்றமளிக்கும் வகையில் 9வது இடத்தில் முடித்த நிலையில், தற்போது அவர்களின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் எதிர்காலத்தின் மீது கவனம் திரும்பியுள்ளது. அணியின் மோசமான செயல்திறன் இருந்தபோதிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு வலுவான தனிப்பட்ட சீசனுடன் தனித்து நின்றார். அவர் 43 சராசரியிலும், 159.71 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் 559 ரன்கள் எடுத்தார். இருப்பினும், சீசன் முடிந்ததிலிருந்து 23 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அவரது அணியுடன் எதிர்காலம் குறித்த ஊகங்கள் தீவிரமடைந்துள்ளன. யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பூடகமான இன்ஸ்டாகிராம் பதிவுதான் இதற்கு மைய காரணமாகும்.

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியது என்ன?

ஐபிஎல் 2025இல் அணியின் வெளியேற்றத்திற்குப் பிறகு வெளியிட்ட பதிவில், ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நன்றி தெரிவித்தும், அடுத்த சவால் குறித்தும் சுட்டிக்காட்டியும் பதிவிட்டுள்ளதால், அவர் வெளியேறுவதற்கு வாய்ப்புள்ளதாக ஊகங்கள் கிளம்பியுள்ளன. இந்த ஊகங்களைத் தொடர்ந்து அவர் தனது பதிவை, அணியை மையமாகக் கொண்டதாகத் தோன்றும் வகையில் திருத்தியிருந்தாலும், அது ஊகத்தைத் தணிக்க சிறிதும் உதவவில்லை. யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆட்டத்தில் மிகவும் நம்பிக்கைக்குரிய டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் செயல்திறன் மற்றும் தலைமைத்துவம் மீதான அதிருப்தியே இந்த நிச்சயமற்ற தன்மைக்குக் காரணம் என்று நம்பப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜெய்ஸ்வால் மும்பை மாநில அணியை கோவாவுக்கு விட்டுச் செல்வது குறித்தும் பரிசீலித்தார், இறுதியில் அவர் அந்த நடவடிக்கையை மாற்றியது குறிப்பிடத்தக்கது.