
இங்கிலாந்தை பந்தாடியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி; முதல் டி20யில் 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
செய்தி முன்னோட்டம்
சனிக்கிழமை (ஜூன் 28) அன்று இங்கிலாந்தின் டிரென்ட் பிரிட்ஜில் நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஹெடிங்லியில் சமீபத்தில் ஆடவர் இந்திய கிரிக்கெட் அணி முதல் டெஸ்டில் தோல்வியைப் பெற்று ஏமாற்றத்தை அளித்த நிலையில், இந்த உறுதியான வெற்றி இந்திய ரசிகர்களுக்கு ஒரு உற்சாகத்தை அளித்தது. அணியின் தற்காலிக கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஒரு வரலாற்று சதத்தை அடித்து, 20 ஓவர்களில் இந்தியா 5 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்ததற்கான முக்கிய காரணமாக அமைந்தது. முன்னதாக, வார்ம்-அப்பின் போது தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்குப் பதிலாக கேப்டன் பொறுப்பை மந்தனா ஏற்றார்.
அபார பந்துவீச்சு
இந்தியா அபார பந்துவீச்சு
ஸ்மிருதி மந்தனா சிறப்பாக பேட்டிங் செய்து சதமடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தையும் பதிவு செய்தார். இதையடுத்து பேட்டிங் தொடங்கிய இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நாட் ஸ்கைவர்-பிரண்டின் 66 ரன்கள் எடுத்த போதிலும் மற்ற வீராங்கனைகள் யாரும் இந்திய பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியவில்லை. இதனால், 14.5 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்து மிகப்பெரிய தோல்வியைப் பெற்றது. அறிமுக வீராங்கனை ஸ்ரீ சரணி பந்து வீச்சில் சிறப்பாக செய்யப்பட்டு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது, அடுத்த போட்டி ஜூலை 1 ஆம் தேதி பிரிஸ்டலில் திட்டமிடப்பட்டுள்ளது.