NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / பிரபல பிரேசில் கால்பந்து வீரரிடம் இனவெறியுடன் நடந்து கொண்ட ஐரோப்பிய ரசிகர்கள்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரபல பிரேசில் கால்பந்து வீரரிடம் இனவெறியுடன் நடந்து கொண்ட ஐரோப்பிய ரசிகர்கள்!
    வினிசியஸ் ஜூனியரிடம் இனவெறியுடன் நடந்துகொண்ட ரசிகர்கள்

    பிரபல பிரேசில் கால்பந்து வீரரிடம் இனவெறியுடன் நடந்து கொண்ட ஐரோப்பிய ரசிகர்கள்!

    எழுதியவர் Sekar Chinnappan
    May 22, 2023
    07:41 pm

    செய்தி முன்னோட்டம்

    ஞாயிற்றுக்கிழமை (மே 21) வலென்சியாவுக்கு எதிரான லா லிகா கால்பந்து போட்டியின்போது வினிசியஸ் ஜூனியர் ஒரு பிரிவு ரசிகர்களால் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை அடுத்து, ரியல் மாட்ரிட் இனவெறிக்கு எதிராக அரசிடம் புகார் அளித்துள்ளது.

    இது தொடர்பாக திங்களன்று ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்ட ரியல் மாட்ரிட் இந்த சம்பவத்தை வெறுப்பு குற்றமாக கருதுவதாகவும், சம்பவத்தை கண்டிப்பதாகவும் கூறியுள்ளது.

    கால்பந்து உலகின் மிக திறமையான வீரர்களில் ஒருவரான வினிசியஸ் ஜூனியர் தென்னமெரிக்க நாடான பிரேசிலின் முன்கள வீரர் ஆவார்.

    ஐரோப்பிய லீக்கில் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடும் அவர் லா லிகாவில் இனரீதியான துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    laliga becomes place of racisim

    கால்பந்து உலகில் தொடரும் இனவெறி சர்ச்சை

    வினிசியஸ் ஜூனியர் துரதிர்ஷ்டவசமாக ஸ்பெயினில் இருந்த காலத்திலும் இனரீதியான துஷ்பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளார்.

    இந்த சம்பவங்கள் கால்பந்திலும் சமூகத்திலும் ஆழமாக வேரூன்றிய இனவெறி பிரச்சினையை எடுத்துக்காட்டுகின்றன.

    இந்த சவால்கள் இருந்தபோதிலும், வினிசியஸ் இத்தகைய துன்பங்களை தைரியமாக எதிர்கொண்டதோடு, பொது மேடைகளிலும் பலமுறை இந்த பிரச்சினையை பற்றி பேசியுள்ளார்.

    லா லிகா ஒரு காலத்தில் ரொனால்டினோ, ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி போன்ற விளையாட்டு வீரர்களுக்கான இடமாக இருந்த நிலையில், இப்போது அது இனவெறியர்களுக்கு சொந்தமாக மாறிவிட்டதாக கால்பந்து உலகில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கால்பந்து
    கால்பந்து செய்திகள்
    ரியல் மாட்ரிட்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    கால்பந்து

    கால்பந்து கிளப் போட்டிகளில் 700 கோல்கள் அடித்த இரண்டாவது வீரர் : லியோனல் மெஸ்ஸி சாதனை விளையாட்டு
    அர்ஜென்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளர் பதவிக்காலம் நீட்டிப்பு விளையாட்டு
    இரண்டாவது முறையாக ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்ற லியோனல் மெஸ்ஸி விளையாட்டு
    "ரொனால்டோ கோல் அடிக்கலானாலும் ஜெயிப்போம்" : அல் நாஸரின் அசத்தல் ஆட்டம் விளையாட்டு

    கால்பந்து செய்திகள்

    துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு காணவில்லை! கால்பந்து
    செல்சியா கால்பந்து அணியின் இடைக்கால மேலாளராக பிராங்க் லம்பார்ட் நியமனம் கால்பந்து
    இந்தியாவில் இண்டர்காண்டினென்டல் கோப்பை : அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு கால்பந்து
    2027 மகளிர் உலகக்கோப்பை போட்டியை இணைந்து நடத்த அமெரிக்கா மற்றும் மெக்சிகோ விருப்பம் உலக கோப்பை

    ரியல் மாட்ரிட்

    75 ஆண்டுகளில் முதல் முறை : ரியல் மாட்ரிட் அணிக்கு எதிராக நான்கு கோல் அடித்த வீரர் கால்பந்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025