NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போட்டிக்கட்டணத்தை நன்கொடையாக வழங்கிய ஆப்கான் வீரர் ரஷீத் கான்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போட்டிக்கட்டணத்தை நன்கொடையாக வழங்கிய ஆப்கான் வீரர் ரஷீத் கான்
    போட்டிக்கட்டணத்தை நன்கொடையாக வழங்கும் ஆப்கான் வீரர் ரஷீத் கான்

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போட்டிக்கட்டணத்தை நன்கொடையாக வழங்கிய ஆப்கான் வீரர் ரஷீத் கான்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 08, 2023
    05:21 pm

    செய்தி முன்னோட்டம்

    2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ரஷீத் கான், ஒருநாள் உலகக்கோப்பைக்கான தனது போட்டிக் கட்டணம் முழுவதையும் நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

    இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணங்களை (ஹெரத், ஃபரா மற்றும் பத்கிஸ்) தாக்கிய நிலநடுக்கம் ஏற்படுத்திய சோகமான விளைவுகளைப் பற்றி நான் அறிந்து வருத்தமடைந்து உள்ளேன்.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ எனது ஒருநாள் உலகக்கோப்பை போட்டி கட்டணம் அனைத்தையும் நன்கொடையாக வழங்குகிறேன்.

    விரைவில், தேவைப்படும் மக்களுக்கு ஆதரவளிக்கக்கூடியவர்களை அழைக்க, நிதி திரட்டும் பிரச்சாரத்தை நாங்கள் தொடங்குவோம்." எனத் தெரிவித்துள்ளார்.

    Rashid Khan donates match fees to afghan earthquake affected people

    ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்

    மேற்கு ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை (அக்டோபர் 7) 6.3 ரிக்டர் அளவிலான பேரழிவுகரமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

    நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஒன்றான ஹெராட் நகருக்கு வடமேற்கே 35 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மற்றும் இதைத் தொடர்ந்து அதிக ரிக்டர் அளவில் எட்டுமுறை குலுங்கியது.

    இது சேதத்தை மேலும் அதிகப்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தால் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், அந்நாட்டை ஆட்சி செய்யும் தலிபான்கள் உதவி கோரியுள்ளனர்.

    இது சமீபத்தில் ஆப்கானிஸ்தான் எதிர்கொண்ட இரண்டாவது மோசமான நிலநடுக்கமாகும். முன்னதாக 2022இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1000க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆப்கானிஸ்தான்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    நிலநடுக்கம்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    ஆப்கானிஸ்தான்

    இந்திய ஆன்லைன் படிப்பில் கலந்து கொள்ள இருக்கும் தாலிபான் உறுப்பினர்கள் உலகம்
    வட இந்தியாவையும் உலுக்கிய பூகம்பத்தால் பாகிஸ்தானில் 9 பேர் பலி பாகிஸ்தான்
    பெண்கள் பசுமையான உணவகங்களுக்கு செல்ல தடை: தலிபான் அரசு  உலக செய்திகள்
    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை விட இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் குறைவு  இந்தியா

    கிரிக்கெட்

    ஆஷ்டன் நகருக்கு பதிலாக மார்னஸ் லாபுசாக்னே; ஒருநாள் உலகக்கோப்பை அணியை அறிவித்தது ஆஸ்திரேலியா ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    உலக கோப்பை: இங்கிலாந்துடனான முதல் போட்டியிலிருந்து வெளியேறினார் கேன் வில்லியம்சன் உலக கோப்பை
    மழையால் கைவிடப்பட்ட ஒருநாள் உலக கோப்பை பயிற்சிப் போட்டிகள் ஒருநாள் உலகக்கோப்பை
    பொங்கலுக்கு வெளியாகிறது ரஜினிகாந்தின் லால் சலாம் திரைப்படம் ரஜினிகாந்த்

    கிரிக்கெட் செய்திகள்

    INDvsAUS 3வது போட்டி : கில், பாண்டியா, ஷமி விளையாட மாட்டார்கள் என அறிவிப்பு; காரணம் இதுதான் இந்தியா vs ஆஸ்திரேலியா
    யுவராஜ் சிங், ரோஹித் ஷர்மாவின் சாதனைகளை முறியடித்த நேபாள கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட்
    INDvsAUS 3வது ஒருநாள் போட்டி : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு இந்தியா vs ஆஸ்திரேலியா
    INDvsAUS 3வது போட்டி : இந்தியாவுக்கு 353 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா இந்தியா vs ஆஸ்திரேலியா

    நிலநடுக்கம்

    துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு காணவில்லை! கால்பந்து
    துருக்கி: 90 மணி நேர போராட்டத்திற்கு பின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட நாய் துருக்கி
    சிக்கிமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு இந்தியா
    வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்த நியூஸிலாந்தில் நிலநடுக்கம் உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025