NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / பாரிஸ் ஒலிம்பிக் வீரர்களுக்கு ஆன்டி-செக்ஸ் படுக்கைகள்: கட்டுக்கதையா அல்லது உண்மையா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாரிஸ் ஒலிம்பிக் வீரர்களுக்கு ஆன்டி-செக்ஸ் படுக்கைகள்: கட்டுக்கதையா அல்லது உண்மையா?
    விளையாட்டு வீரர்களுக்கான அறைகளில் அல்ட்ரா-லைட் அட்டை படுக்கைகள்

    பாரிஸ் ஒலிம்பிக் வீரர்களுக்கு ஆன்டி-செக்ஸ் படுக்கைகள்: கட்டுக்கதையா அல்லது உண்மையா?

    எழுதியவர் Venkatalakshmi V
    May 16, 2024
    07:08 am

    செய்தி முன்னோட்டம்

    காதல் நகரமான பாரிஸ், 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கு 'ஆன்டி-செக்ஸ்' அட்டைப் படுக்கைகளைப் பயன்படுத்தவுள்ளதா?

    இதனால் விளையாட்டு வீரர்கள் தங்களது விளையாட்டுகளில் கவனம் செலுத்த இந்த யோசனையா?

    பாரிஸ் ஒலிம்பிக் குழு விளையாட்டு வீரர்களுக்கான அறைகளில் அல்ட்ரா-லைட் அட்டை படுக்கைகளை வைத்துள்ளது.

    இது பாலியல் செயல்பாடுகளைத் தடுக்கும் என்று கூறப்படுகிறது.

    2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள், ஜூலை 26-ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது.

    அந்த நாட்களில் பிரெஞ்சு தலைநகரம், 10,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு தாயகமாக இருக்கும்.

    "ஆன்டி-செக்ஸ் படுக்கைகள் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக பாரிஸுக்கு வந்துள்ளன. படுக்கைகளின் அளவும் ஒரு ஆள் படுப்பதற்கான அளவே. அதனால் இருவர் அங்கே சேர்ந்து படுப்பது என்பது கேள்விக்குறியாகிவிட்டது" என்று நியூயார்க் போஸ்ட் அறிக்கை கூறுகிறது.

    அட்டைப் படுக்கைகள்

    அட்டைப் படுக்கைகள் உடலுறவைத் தடுக்குமா?

    டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போது வீரர்களுக்கான படுக்கைகளை ஏர்வீவ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது என்று NY போஸ்ட் தெரிவிக்கிறது.

    ஜப்பானில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் 2020இல் தான் அல்ட்ரா-லைட் கார்ட்போர்டு படுக்கைகள் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டன.

    இம்முறையும் அங்கேதான் அட்டை படுக்கைகள் தயாரிக்கப்படுகின்றன என்ற வதந்திகள் முதலில் வெளிப்பட்டன.

    டோக்கியோ ஒலிம்பிக்கின் போது விளையாட்டு வீரர்களுக்கு இடையேயான பாலியல் செயல்பாடுகளைத் தடுக்க இந்த படுக்கைகள் நிறுவப்பட்டதாக ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரர் பால் செலிமோ ட்வீட் செய்ததைத் தொடர்ந்து 'ஆன்டி-செக்ஸ்' படுக்கைகள் பற்றிய அறிக்கை வந்தது.

    USA Today நடத்திய ஒரு உண்மைச் சரிபார்ப்பில், பாலியல் செயல்பாடுகளைத் தடுக்க அட்டைப் படுக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன என்ற செய்திகள் உண்மையல்ல என்று கண்டறியப்பட்டது.

    காரணம்

    மறுசுழற்சி செய்யப்படும் அட்டை படுக்கைகள்

    யுஎஸ்ஏ டுடே, அட்டை படுக்கைகள் 441 பவுண்டுகள் (200 கிலோ) எடையுள்ளதாகவும், பாலியல் செயல்பாடுகளை தடை செய்வதற்காக குறைவான எடையில் தயாரிக்கப்படவில்லை என்பதை கண்டறிந்தது.

    போட்டி ஒருங்கிணைப்பாளரின் கூற்றுப்படி, இந்த படுக்கைகள் மறுசுழற்சி செயற்படக்கூடியவை என்றும், அதிக சுற்றுச்சூழல் கழிவுகளை உருவாக்காததால் இவை பயன்படுத்தப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "(படுக்கைகள்) விளையாட்டுகளுக்குப் பிறகு காகிதப் பொருட்களாக மறுசுழற்சி செய்யப்படும். மெத்தை கூறுகள் புதிய பிளாஸ்டிக் பொருட்களாக மறுசுழற்சி செய்யப்படும்" என்று Inside The Games கூறுகிறது.

    "ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் வரலாற்றில் அனைத்து படுக்கைகள் மற்றும் படுக்கைகள் முற்றிலும் புதுப்பிக்கத்தக்க பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்." என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒலிம்பிக்
    பாரிஸ்

    சமீபத்திய

    கர்னல் குரேஷியை 'பயங்கரவாத சகோதரி' என்று அழைத்த பாஜக அமைச்சரை கண்டித்த உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    அலெக்சா, ஹார்ட்வேர் துறைகளில் பணி நீக்கம் செய்யும் அமேசான் அமேசான்
    சமந்தா-ராஜ் நிதிமோரு டேட்டிங் வதந்திகளுக்கிடையே வைரலாகும் ஷ்யாமலி டே யார்? சமந்தா ரூத் பிரபு
    வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தில் இடைக்கால உத்தரவு குறித்து மே 20இல் பரிசீலனை; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வக்ஃப் வாரியம்

    ஒலிம்பிக்

    2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்? இந்தியாவை காட்டி பேரம் பேசும் ஐசிசி! ஐசிசி
    அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்கான சிறப்பு ஒலிம்பிக் : 255 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்பு! இந்திய அணி
    சர்வதேச ஒலிம்பிக் தினம் 2023 : பலரும் அறியாத சில சுவாரஸ்ய தகவல்கள் விளையாட்டு
    சிறப்பு ஒலிம்பிக்கில் 202 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை இந்தியா

    பாரிஸ்

    மெட்ரோவில் இருந்து திரையரங்குகள் வரை: பாரிஸ் நகரத்தை வாட்டி வதைக்கும் மூட்டை பூச்சிகள் பிரான்ஸ்
    இஸ்லாமிய தாக்குதல்: 7000 வீரர்களை கொண்டு பாதுகாப்பை பலப்படுத்துகிறது பிரான்ஸ்  பிரான்ஸ்
    பாரிஸைத் தொடர்ந்து ஹாங்காங்கிலும் மூட்டைப்பூச்சி தொல்லை: பூச்சி கொல்லி விற்பனை 172 மடங்கு அதிகரிப்பு  உலகம்
    உலகில் மக்கள் வாழ விலையுயர்ந்த நகரங்கள் எவை? சிங்கப்பூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025