'பத்திரனாவை பத்திரமாக பார்த்துக்கொள்ளும் தோனி' : மதீஷா பத்திரனாவின் சகோதரி நெகிழ்ச்சி!
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் தோனி ஐபிஎல் 2023 இன் போது இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனாவுக்கு பெரும் ஆதரவாளராக இருந்தார். லசித் மலிங்கா போன்ற அவரது பந்துவீச்சு காரணமாக 'பேபி மலிங்கா' என்று அழைக்கப்படும் பத்திரனா தோனியின் வழிகாட்டுதல் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் டுவைன் பிராவோவின் கீழ் மிகச்சிறந்த டெத் பவுலராக மாறியுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான குவாலிபையர் 1 வெற்றிக்குப் பிறகு தோனி பத்திரனாவின் குடும்பத்தினரை சென்னையில் சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்த பத்திரனாவின் சகோதரி விசுகா, 'மதிஷாவைப் பற்றி நீங்கள் கவலைப்பட ஒன்றுமில்லை. அவர் எப்போதும் என்னுடன் இருக்கிறார்.' என்று தோனி கூறியதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.