தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது தமிழ்நாடு அணி
ஒடிஷாவில் நடந்த தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தமிழ்நாடு வீரர்கள் 9 தங்கம், மூன்று வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களுடன், 127 புள்ளிகளை கைப்பற்றி சாம்பியன் தமிழ்நாடு அணி பட்டத்தை வென்றது. இதில், 800மீ ஓட்டப்பந்தயத்தில் பிரதீப் செந்தில் குமார், 400மீ தடை தாண்டுதலில் சந்தோஷ் குமார், நீளம் தாண்டுதலில் ஜெஸ்வின் ஆல்ட்ரின், மும்முறை தாண்டுதலில் பிரவீன் சித்திரவேல், 400மீ ஓட்டப்பந்தயம் மற்றும் 400மீ தடை தாண்டுதலில் ஆர் வித்யா ராம்ராஜ், 100மீ தடை தாண்டுதலில் ஆர் நித்யா, தடியூன்றித் தாண்டுதலில் பவித்ரா வெங்கடேஷ் ஆகியோர் ஆசிய தடகள விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.