NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து ஆண்டி முர்ரே விலகல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து ஆண்டி முர்ரே விலகல்
    துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து ஆண்டி முர்ரே விலகல்

    துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து ஆண்டி முர்ரே விலகல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 27, 2023
    06:26 pm

    செய்தி முன்னோட்டம்

    தொடர்ச்சியான இடுப்பு வலி பிரச்சினை காரணமாக துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து பிரிட்டனை சேர்ந்த ஆன்டி முர்ரே விலகியுள்ளார் என்று போட்டி அமைப்பாளர்கள் திங்கள்கிழமை (பிப்ரவரி 27) தெரிவித்தனர்.

    35 வயதான, மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஆண்டி முர்ரே, ஏற்கனவே இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்தார். 2019 இல் டென்னிஸ் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் நிலைக்கு சென்றார்.

    எனினும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் மீண்டு வந்தார். மேலும், கடந்த வார கத்தார் ஓபனில் விளையாடத் திரும்பியதோடு, அதில் இறுதிப் போட்டி வரை முன்னேறினார்.

    கடைசியில் டேனியல் மெட்வெடேவால் தோற்கடிக்கப்பட்டதால், அதில் பட்டம் பெறும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

    ஆண்டி முர்ரே

    துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் அமைப்பு அறிக்கை

    துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் அமைப்பு தனது ட்விட்டர் பதிவில், "ஆண்டி முர்ரே இந்த ஆண்டு போட்டியில் பங்கேற்க முடியவில்லை என்பதை வருத்தத்துடன் உங்களுக்குத் தெரிவிக்கிறோம். ஆண்டி தொடர்ச்சியான இடுப்பு காயத்தை எதிர்கொண்டதால் துபாயிலிருந்து வெளியேறியுள்ளார்." எனத் தெரிவித்துள்ளது.

    முன்னதாக கத்தார் ஓபனில் மெட்வெடேவிடம் தோல்வியடைந்த பிறகு, தனது உடலை சிறப்பாக நிர்வகிக்க வேண்டும் என்று முர்ரே கூறியிருந்தார்.

    இதற்கிடையே, 2021 அமெரிக்க ஓபன் சாம்பியனான சக பிரிட்டன் வீராங்கனை எம்மா ரடுகானு, டான்சில்லிடிஸ் காரணமாக டெக்சாஸில் நடந்த ஆஸ்டின் ஓபனில் இருந்து நேற்று (பிப்ரவரி 26) விலகியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய

    சமீபத்திய

    இந்தியாவில் மின்சார வாகனங்கள் விரைவில் விலை உயரக்கூடும். என்ன காரணம்? மின்சார வாகனம்
    வெறுங்காலில் நடப்பதால் இத்தனை நன்மைகளா? ஆரோக்கியம்
    தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மார்ச் 1, 2027 முதல் தொடங்கும் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு
    பெங்களூரு: RCB வெற்றிக்கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு பெங்களூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025