NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 'கிரிக்கெட்டில் இருந்து தான் கற்றுக் கொண்டவை', நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்ட சத்யா நாதெல்லா
    அடுத்த செய்திக் கட்டுரை
    'கிரிக்கெட்டில் இருந்து தான் கற்றுக் கொண்டவை', நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்ட சத்யா நாதெல்லா
    'கிரிக்கெட்டில் இருந்து தான் கற்றுக் கொண்டவை', நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்ட நாதெல்லா

    'கிரிக்கெட்டில் இருந்து தான் கற்றுக் கொண்டவை', நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்ட சத்யா நாதெல்லா

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 26, 2023
    11:37 am

    செய்தி முன்னோட்டம்

    'இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டல்ல, அது ஒரு மதம்', இந்தியாவில் பல முக்கிய நபர்கள் இதனை சொல்லக் கேட்டிருப்போம்.

    உண்மையில் இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம் தான். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்யா நாதெல்லாவும் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கிரிக்கெட் குறித்த தன்னுடைய கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறார்.

    ஆக்ஸல் ஸ்பிரிங்கர் நிறுவனத்தின் மதியாஸ் டாஃப்னருடனான நேர்காணலில் போது கிரிக்கெட் குறித்த கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறார் சத்யா நாதெல்லா.

    அமெரிக்காவில் உள்ள பெருநிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்து வந்தாலும், அடிப்படையில் நாதெல்லா ஒரு இந்தியர், இந்தியாவில் உள்ள ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர்.

    கிரிக்கெட்

    சத்யா நாதெல்லா கூறியது என்ன? 

    "ஒரு இந்தியனாக, ஒரு தெற்காசியனாக என்னைப் பொருத்தவரையில் கிரிக்கெட் என்பது ஒரு மதம். கிரிக்கெட்டுடன் தான் நாங்கள் வளர்ந்தோம்" எனக் கூறியிருக்கிறார் நாதெல்லா.

    'கிரிக்கெட்டில் இருந்து என்ன விதமான தலைமைப் பண்புகளை கற்றுக் கொண்டீர்கள்?' என்ற கேள்விக்கு பதிலளித்த நாதெல்லா, "ஒரு முறை என்னுடைய நகரமான ஹைதராபாத்தில் லீக் மேட்ச் ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்தோம்.

    அப்போது அந்தப் போட்டிக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு விளையாட்டு வீரரும் அந்தப் போட்டியில் கலந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்து எங்களை மறந்து நாங்கள் புகழ்ந்து போற்றிக் கொண்டிருந்தோம்.

    அப்போது எங்களுடைய பயிற்சியாளர், தூரத்திலிருந்து ரசித்துக் கொண்டிருக்காதீர்கள். சென்று போட்டியிடுகள்' என்று கூறினார்."

    சத்யா நாதெல்லா

    கற்றுக்கொள்ள வேண்டும், பிரமிக்கக் கூடாது: 

    "களத்தில் இருக்கும் போது நம்முடைய போட்டியாளரைப் பார்த்து பிரமித்து நிற்கக் கூடாது. அவருடன் போட்டியிட்டு நமக்குத் தேவையானதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை அப்போது நான் உணர்ந்து கொண்டேன்" எனக் கூறியிருக்கிறார்.

    மேலும், தன்னுடைய அணியில் ஒரு நபர் ஒட்டுமொத்த அணியின் நம்பிக்கையையும் வேண்டுமென்ற குலைப்பதை தான் பார்த்திருக்கிறேன்.

    ஒரே ஒரு நபரால் மற்ற அனைவரின் முயற்சிகளும் வீணானது. நாம் வேலை பார்க்கும் இடங்களிலும் அந்த இடத்திற்குப் பொருந்தாத அல்லது அந்த இடத்தை விரும்பாத ஒருவர் இருந்தால், அந்த பிரச்சினையை அப்போதே களைய வேண்டிய அவசியத்தையும் கிரிக்கெட்டி மூலமாகவே தான் கற்றுக் கொண்டேன் எனத் தெரிவித்திருக்கிறார் சத்யா நாதெல்லா.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்
    மைக்ரோசாஃப்ட்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    கிரிக்கெட்

    AUSvsPAK : டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச முடிவு ஒருநாள் உலகக்கோப்பை
    AUSvsPAK : பாகிஸ்தானை பந்தாடிய வார்னர்-மார்ஷ் ஜோடி; 368 ரன்கள் இலக்கு நிர்ணயம் ஒருநாள் உலகக்கோப்பை
    பாகிஸ்தானுக்கு எதிராக அசுர தாண்டவம்; விராட் கோலியின் சாதனையை சமன் செய்த டேவிட் வார்னர் டேவிட் வார்னர்
    மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர், லசித் மலிங்கா!  ஐபிஎல்

    மைக்ரோசாஃப்ட்

    மைக்ரோசாஃப்டின் அறிவிப்பு.. வழக்கு தொடர்வதாக எச்சரித்த எலான் மஸ்க்.. என்ன பிரச்சினை?  ட்விட்டர்
    மைக்ரோஃசாப்ட் - ஆக்டிவிஷன் பிலிசார்டு ஒப்பந்தத்தை தடை செய்தது பிரிட்டன்!  வீடியோ கேம்
    AI போட்டியில் முன்னேறும் மைக்ரோசாஃப்ட்.. என்ன செய்கிறது கூகுள்?  செயற்கை நுண்ணறிவு
    AI வசதியுடன் கூடிய 'பிங்' தேடுபொறி.. அனைத்து பயனர்களுக்கும் வெளியிட்டது மைக்ரோசாஃப்ட்! செயற்கை நுண்ணறிவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025