Page Loader
ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்?
ரஜத் படிதாருக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா ஆர்சிபி கேப்டனாக நியமனம்

ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்?

எழுதியவர் Sekar Chinnappan
May 23, 2025
07:58 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2025 பிளேஆஃப்களுக்கு முன்னதாக ஒரு மூலோபாய நடவடிக்கையாக, வெள்ளிக்கிழமை (மே 23) நடக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு (எஸ்ஆர்எச்) எதிரான லீக் போட்டிக்கு விக்கெட் கீப்பர்-பேட்டர் ஜிதேஷ் சர்மாவை தற்காலிக கேப்டனாக நியமித்தது. அணியின் வழக்கமான கேப்டன் ரஜத் படிதார் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடும் லெவன்அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தின் போது காயமடைந்த ரஜத் படிதாரை, பிளேஆஃப் சுற்று ஆட்டத்தின்போது முழு உடற்தகுதியை உறுதி செய்வதற்காக ஆர்சிபி நிர்வாகம் அவரை இம்பாக்ட் வீரராக தக்கவைத்துள்ளது.

ஜிதேஷ் சர்மா

முதல்முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள ஜிதேஷ் சர்மா

முதல் முறையாக ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள ஜிதேஷ் சர்மா, டாஸ் வென்று மேற்பரப்பு ஈரப்பதம் காரணமாக சாதகமான பிட்ச் நிலைமைகளைக் காரணம் காட்டி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். நம்பிக்கையை வெளிப்படுத்திய ஜிதேஷ் சர்மா, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பதிலும், பிளேஆஃப்களுக்குச் செல்லும் வேகத்தைத் தக்கவைத்துக்கொள்வதிலும் அணியின் கவனம் இருப்பதாக கூறினார். குறிப்பிடத்தக்க வகையில், மயங்க் அகர்வால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்சிபியின் விளையாடும் லெவன் அணிக்குத் திரும்பினார். 2011 முதல் 2013 வரை அணியில் இருந்த அனுபவம் வாய்ந்த மயங்க் அகர்வால், ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் விற்கப்படாத நிலையில், காயமடைந்த தேவ்தத் படிக்கலுக்கு மாற்றாக அணியில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.