உலக சாம்பியன்ஷிப் நீளம் தாண்டுதல் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தோல்வி
வியாழன் (ஆகஸ்ட் 24) அன்று நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் நீளம் தாண்டுதலின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தோல்வியைத் தழுவினார். முன்னதாக, தகுதிச் சுற்றில் 12வது இடம் பிடித்து கடைசி வீரராக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ஜெஸ்வின் ஆல்ட்ரின், நீளம் தாண்டுதலில் உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்திருந்தார். இந்நிலையில், இறுதிப்போட்டியின் முதல் சுற்றில் ஜெஸ்வின் ஆல்ட்ரினின் முதல் இரண்டு முயற்சிகள் பவுல் ஆன நிலையில், தனது மூன்றாவது முயற்சியில் 7.77 மீட்டர் தூரத்திற்கு தாண்டினார். இதனால், 11வது இடத்தை பிடித்து வெளியேறினார். இதில் முதல் 8 இடங்களை பிடித்தவர்கள் மட்டுமே போட்டியில் தொடர்ந்து விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.