NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் 2025: மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை இன்று வெளியாகக்கூடும்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல் 2025: மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை இன்று வெளியாகக்கூடும்
    IPL, போர் காரணமாக ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தது

    ஐபிஎல் 2025: மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை இன்று வெளியாகக்கூடும்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 12, 2025
    05:58 pm

    செய்தி முன்னோட்டம்

    18வது சீசன் ஐபிஎல் தொடர், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் காரணமாக ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தது.

    தற்போது எல்லையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் தொடரை மீண்டும் தொடங்கும் முனைப்பில் பிசிசிஐ செயல்படுகிறது.

    பிசிசிஐ திட்டத்தின்படி, மீதமுள்ள 12 போட்டிகளை மே 30ஆம் தேதிக்குள் முடிக்க உத்தேசித்துள்ளது.

    இதற்காக சென்னை, ஐதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய மூன்று நகரங்களில் மட்டுமே போட்டிகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு நாளும் இரு போட்டிகள் நடத்தப்படும் திட்டமும் பரிசீலிக்கப்படுகின்றது.

    இதற்காக பிசிசிஐ, வெளிநாட்டு அணி வீரர்களின் பயண திட்டங்களை உடனடியாக உறுதி செய்யுமாறு அணிகள் உரிமையாளர்களை கேட்டுள்ளது.

    அட்டவணை

    இன்று புதிய அட்டவணை வெளியாகும் என எதிர்பார்ப்பு

    நேற்றிரவு எஞ்சிய போட்டிகளுக்கான புதிய அட்டவணை வெளியாவதற்கான எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால், அது வெளியிடப்படாமல் இருந்ததால், இன்று அட்டவணை வெளியாகும் என பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதற்காக 3 மாதிரி அட்டவணைகள் தயாராக இருப்பதாகவும், அவற்றில் ஒன்று தேர்வாகும் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.

    ஏற்கனவே 11 போட்டிகள் முடிந்த நிலையில், பிளே ஆப்பிற்குத் தகுதி பெறப்போகும் அணிகள் குறித்த எதிர்பார்ப்பு சூடுபிடித்திருந்தது. போட்டிகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் கவனம் செலுத்திய நிலையில், வெள்ளிக்கிழமை முதல் தொடங்கும் வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல் 2025
    ஐபிஎல்
    போர்
    பிசிசிஐ

    சமீபத்திய

    ஐபிஎல் 2025: மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை இன்று வெளியாகக்கூடும் ஐபிஎல் 2025
    மின்சார வாகன அசெம்பிளி ஆலையை நிறுவ டெஸ்லா மகாராஷ்டிராவில் இடம் தேடுகிறது டெஸ்லா
    இன்று இரவு வானத்தை ஒளிரச் செய்யும் மலர் நிலவு: அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள் சந்திரன்
    விராட் கோலி ரெஃபரென்ஸ்; ஆபரேஷன் சிந்தூர் விளக்கத்தில் கிரிக்கெட்டை ஒப்பிட்டு பேசிய இந்திய DGMO கிரிக்கெட்

    ஐபிஎல் 2025

    ஐபிஎல்லில் வேகமாக 4,000 ரன்களை எட்டிய இந்தியர்; சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ் சூர்யகுமார் யாதவ்
    ஐபிஎல் 2025 ஆர்சிபிvsடிசி: டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ்; டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல்
    ஐபிஎல் 2025 ஆர்ஆர்vsஜிடி: டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்; குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல்
    ஐபிஎல்லில் அறிமுகமான 10வது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் என்ற சிறப்பைப் பெற்ற கரீம் ஜனத் குஜராத் டைட்டன்ஸ்

    ஐபிஎல்

    ஐபிஎல் 2025 எம்ஐvsஎல்எஸ்ஜி: டாஸ் வென்றது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    தனது 150வது ஐபிஎல் போட்டியில் அரைசதம் அடித்த ஃபாஃப் டு பிளெசிஸ்! ஐபிஎல் 2025
    ஐபிஎல் 2025: பிளேஆஃப் தகுதி வாய்ப்புகள் - எந்த அணிக்கு அதிக வாய்ப்பு? CSK நிலை என்ன? ஐபிஎல் 2025
    ஐபிஎல் 2025: முதல் அணியாக தொடரிலிருந்து வெளியேறிய CSK சிஎஸ்கே

    போர்

    காசா போர் நிறுத்தம் கோரும் ஐநா தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது  ஐநா சபை
    காசா தாக்குதலால் இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழக்கிறது- நெதன்யாகுவுக்கு பைடன் எச்சரிக்கை ஜோ பைடன்
    கியேவ் மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் 53 பேர் காயம், குழந்தைகள் மருத்துவமனை சேதம் உக்ரைன்
    ஹமாஸிடம் பணய கைதிகள் சிக்கிய ராணுவ வீரர்கள் உட்பட மூவரின் உடல்களை மீட்டது இஸ்ரேல் ராணுவம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    பிசிசிஐ

    இந்திய அணிக்கு சுற்றுப்பயண விதிகளை கடுமையாக்க பிசிசிஐ திட்டம்: அறிக்கை டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக சிதான்ஷு கோடக் நியமனம் என தகவல் இந்திய கிரிக்கெட் அணி
    கிரிக்கெட் வீரர்களுக்கு 10 பாயிண்ட் விதிகளை பிறப்பித்த BCCI: தண்டனையின் ஒரு பகுதியாக ஐபிஎல் தடை பார்டர் கவாஸ்கர் டிராபி
    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய கிரிக்கெட் அணி நாளை (ஜனவரி 18) அறிவிப்பு இந்திய கிரிக்கெட் அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025