INDvsBAN 3வது டி20: டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 12) வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- இந்தியா: சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, சூர்யகுமார், நிதிஷ் ரெட்டி, ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ். வங்கதேசம்: பர்வேஸ் ஹொசைன் எமன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தன்சித் ஹசன், தவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா, மஹேதி ஹசன், தஸ்கின் அகமது, ரிஷாத் ஹொசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான், தஞ்சிம் ஹசன்.