NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / மெர்டேகா கோப்பை அரையிறுதியில் மலேசியாவிடம் வீழ்ந்தது இந்திய கால்பந்து அணி
    அடுத்த செய்திக் கட்டுரை
    மெர்டேகா கோப்பை அரையிறுதியில் மலேசியாவிடம் வீழ்ந்தது இந்திய கால்பந்து அணி
    மெர்டேகா கோப்பை அரையிறுதியில் மலேசியாவிடம் வீழ்ந்தது இந்திய கால்பந்து அணி

    மெர்டேகா கோப்பை அரையிறுதியில் மலேசியாவிடம் வீழ்ந்தது இந்திய கால்பந்து அணி

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 14, 2023
    09:46 am

    செய்தி முன்னோட்டம்

    வெள்ளியன்று (அக்டோபர் 13) நடைபெற்ற மெர்டேகா கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 2-4 என்ற கோல் கணக்கில் மலேசியாவிடம் தோற்றது.

    மினி ஆசிய கோப்பை என அழைக்கப்படும் இந்த போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது.

    வழக்கமாக பத்து அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்த ஆண்டு நான்கு அணிகள் மட்டுமே பங்குபெறும் போட்டியாக மாற்றப்பட்டது.

    இதன்படி, இந்தியா, மலேசியா, தஜிகிஸ்தான் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய அணிகள் தகுதி பெற்றிருந்த நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் மோதலால் பாலஸ்தீனம் கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து விலகியது.

    இதையடுத்து அரையிறுதியில் பாலஸ்தீனத்தை எதிர்கொள்ளவிருந்த தஜிகிஸ்தான் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. மறுபுறம், மற்றொரு அரையிறுதிப்போட்டியில் மலேசியாவை இந்தியா எதிர்கொண்டது.

    Malaysia beats India in Merdeka Cup 2023 Semi Final

    தோல்வியுடன் வெளியேறியது இந்தியா

    2001ஆம் ஆண்டுக்கு பிறகு 22 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்திய அணி இதில் பங்கேற்ற நிலையில், மலேசியாவின் தாக்குதல் ஆட்டத்தை எதிர்கொள்ள திணறியது.

    போட்டியின் ஏழாவது நிமிடத்தில் முதல் கோலை அடித்து மலேசியா முன்னிலை பெற்ற நிலையில், அடுத்தடுத்து மேலும் இரண்டு கோல் அடித்து முதல் பாதி முடிவில் 3-1 என முன்னிலை பெற்றது.

    பின்னர் இரண்டாம் பாதியில் இந்தியா மேலும் ஒரு கோல் அடித்தாலும், மலேசியாவும் மற்றொரு கோல் அடிக்க, கடைசியில் இந்தியா 2-4 என தோல்வியைத் தழுவியது.

    அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மலேசியா, தஜிகிஸ்தானை எதிர்கொள்கிறது.

    இந்திய கால்பந்து அணியைப் பொறுத்தவரை குவைத்தில் அடுத்து நடக்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் பங்கேற்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கால்பந்து
    கால்பந்து செய்திகள்
    மலேசியா
    இந்தியா

    சமீபத்திய

    தீவிரமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஜோ பைடன்
    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்

    கால்பந்து

    எனக்கே ரெட் கார்டா? நடுவரின் கன்னத்தில் 'பளார்' விட்ட பயிற்சியாளர் கால்பந்து செய்திகள்
    பிபா உலகக்கோப்பை வரலாற்றில் முதல் வெற்றி; வரலாறு படைத்த பிலிப்பைன்ஸ் கால்பந்து செய்திகள்
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கால்பந்து அணிகள் பங்கேற்க மத்திய அரசு அனுமதி கால்பந்து செய்திகள்
    சவூதி புரோ லீக்கிற்கு இடம் பெயர்ந்த மான்செஸ்டர் சிட்டி கிளப் வீரர் கால்பந்து செய்திகள்

    கால்பந்து செய்திகள்

    பிபா மகளிர் உலகக்கோப்பை : கால்பந்து அணிகள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே துப்பாக்கிச் சூடு கால்பந்து
    பிபா மகளிர் கால்பந்து உலகக்கோப்பை : 15 தொடர் தோல்விகளுக்கு பிறகு நியூசிலாந்து முதல் வெற்றி கால்பந்து
    பிபா உலக தரவரிசையில் நான்கு ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை பெற்ற இந்திய கால்பந்து அணி கால்பந்து
    கைலியன் எம்பாபேவுக்காக 300 மில்லியன் யூரோ ஆஃபர் கொடுத்த சவூதி புரோ லீக் கிளப் கைலியன் எம்பாபே

    மலேசியா

    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை கடத்தல்
    போதை பொருள் உபயோகத்தை குற்றமற்றதாக மாற்ற இருக்கும்  மலேசியா   உலகம்
    மலேசியா மாஸ்டர்ஸ் 2023 : பிவி சிந்து, பிரணாய் எச்.எஸ். அரையிறுதிக்கு முன்னேற்றம்! பிரணாய் எச்.எஸ்.
    ஒரே பாலின முத்தம்: பெரும் இசை விழாவை நிறுத்தியது மலேசியா உலக செய்திகள்

    இந்தியா

    கனட-இந்திய பிரச்சனை: சட்டத்தை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பேசி இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ கனடா
    5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம் தேர்தல் ஆணையம்
    கனடாவில் கொலை செய்யப்பட்ட பயங்கரவாதி நிஜ்ஜார் கொலையில் சீனாவுக்கு தொடர்பு உள்ளதா? சீனா
    இந்தியாவில் மேலும் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025